மேலும் அறிய

Turkey - India : ”இறைவன் இந்தியாவை ஆசீர்வதிக்கட்டும்!” : துருக்கியில் இருந்து வைரலாகும் வீடியோ!

நட்பு நாடான இந்தியாவும் ஆபரேஷன் தோஸ்த் மூலம் மீட்பு உதவிகளை வழங்கி வருகிறது

பிப்ரவரி 6 அன்று மத்திய துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு பல்வேறு நாடுகள் துருக்கிக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. நட்பு நாடான இந்தியாவும் ஆபரேஷன் தோஸ்த் மூலம் மீட்பு உதவிகளை வழங்கி வருகிறது. இதை அடுத்து தங்களுக்கு உதவி வழங்கியதற்காக இந்தியாவுக்கு துருக்கியைச் சேர்ந்த மக்கள் நன்றி தெரிவித்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “இந்திய குழு தானாக முன்வந்து எங்களுக்கு உதவியது. நாங்கள் அதுவரை யாருமற்றது போல உணர்ந்தோம். ஆனால் அவர்கள் இங்கு வந்ததும் நாங்கள் பாதுகாப்பாக உணரத் தொடங்கினோம். இந்தியாவின் ஆதரவுக்கு மிக்க நன்றி,” என்று அதில் ஒருவர் கூறினார்.

மேலும் ஒருவர் “கடவுள் இந்தியாவை ஆசீர்வதிப்பாராக. மிக்க நன்றி,” என்றார். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குழு, 6 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகளை இடிபாடுகளில் இருந்து பாதுகாப்பாக வெளியே எடுத்ததாக அண்மையில் தெரியவந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ இந்தியா "ஆபரேஷன் தோஸ்த்" என்கிற பேரிடர்கால மீட்புக் குழுவைத் தொடங்கியது. 'ஆபரேஷன் தோஸ்த்'-ன் கீழ், மத்திய சுகாதார அமைச்சகம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவியை வழங்கியது.

துருக்கி மற்றும் சிரியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் இன்று இரவு முடிவுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46,000ஆக பதிவாகியுள்ளது. 

துருக்கி மற்றும் சிரியாவில் 11 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் இதுவரை 46,000 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் உள்ளூர் மக்களிடையே குடல் மற்றும் மேல் சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளன, ஆனால் இந்த எண்கள் பொது சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 11 நாட்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 46,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, துருக்கியில் உள்ள மூன்று லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் இடிந்து விழுந்தது, பலர் இன்னும் காணவில்லை. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 296 மணிநேரம் கடந்துவிட்டதால், மேலும் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதால், துருக்கி தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

துருக்கியின் தென்கிழக்கு கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் அதன் மையப்பகுதியுடன் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பிப்ரவரி 6 அதிகாலையில் தாக்கியது, அதைத் தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று பரவும் சாத்தியம் குறித்து கவலைகள் அதிகரித்து வருகின்றன. துருக்கிய சுகாதார அமைச்சர் Fahrettin Koca, குடல் மற்றும் மேல் சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ள போதிலும், இந்த எண்கள் பொது சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Europe Heat Wave: இந்த டீல் நல்லா இருக்கே.! வெப்ப அலை வீசும் ஐரோப்பாவிற்கு ஈரான் கூலான ஆஃபர்; அது என்ன தெரியுமா.?
இந்த டீல் நல்லா இருக்கே.! வெப்ப அலை வீசும் ஐரோப்பாவிற்கு ஈரான் கூலான ஆஃபர்; அது என்ன தெரியுமா.?
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Pakistan Minister Warning: “கைகளை வெட்டுவோம்“; இந்தியாவிற்கு பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்.! எதற்காக தெரியுமா.?
“கைகளை வெட்டுவோம்“; இந்தியாவிற்கு பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்.! எதற்காக தெரியுமா.?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget