மேலும் அறிய

Sajith Premadasa:அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சர்வாதிகாரி என சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.. ஏன்?

மக்கள் எதிர்பார்த்த புதியதொரு பயணத்திற்கு பதிலாக, பழைய வன்முறை நிலைமையே தற்போதும் நடைமுறையில் இருப்பதாக சுட்டி காட்டியுள்ளார்.

இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்க கூடாது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவை குறிப்பிட்டு பேசிய அவர், தற்போது நியமிக்கப்பட்டுள்ள சர்வாதிகாரிக்கு ஜனநாயகத்தை அடக்கி ஆளும் , வன்முறை ஆட்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது என கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.இலங்கையில் அரச வன்முறை தீவிரமாக காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிபர் செயலகத்தின் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த (கோட்டா கோ கம), பொதுமக்களை நள்ளிரவில் ராணுவத்தினரை வைத்து தாக்குதல் நடத்தி வெளியேற்றியது தொடர்பாக அதிபர் ரணில் மீது , நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் சர்வதேச தலைவர்களும் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

 இந்நிலையில் மக்கள் மீது வன்முறையை பிரயோகிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி வேண்டாம் எனவே மக்கள் கூறிவந்த நிலையில், அவர் திடீரென வன்முறையை கையில் எடுத்ததால் அவர் மீதான வெறுப்பு இன்னும் மக்களிடம் அதிகமாகி இருக்கிறதே தவிர தணிந்ததாக தெரியவில்லை.

 


Sajith Premadasa:அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சர்வாதிகாரி என சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.. ஏன்?

இலங்கையில் அரச  வன்முறைகளை கட்டவிழ்த்து விட சர்வாதிகார ஆட்சிக்கு  வழிவிடக்கூடாது எனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தி இருக்கிறார்இலங்கையில் என்னதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், மக்கள் எதிர்பார்த்த புதியதொரு பயணத்திற்கு பதிலாக, பழைய வன்முறை நிலைமையே தற்போதும் நடைமுறையில் இருப்பதாக சுட்டி காட்டியுள்ளார்.

கடந்த மே மாதம் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் ,அதன் பின்னர் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அதிபர் நாட்டை விட்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச, இதனை அடுத்து நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் விடிவு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து இருந்ததாகவும் ஆனால் அது இதுவரை கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரை மக்கள் எதிர்பார்த்த அந்த புதிய ஜனநாயக கட்டமைப்பு இலங்கையில் உருவாகவில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் 69 லட்சம் பெரும்பான்மை வாக்கு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அதிபருக்கே இந்த நிலைமை என்றால்,இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தன்னிச்சையாக சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட முடியாத நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஆட்சியில் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்தி முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென சஜித் பிரேமதாச வலியுறுத்தியிருக்கிறார்.


Sajith Premadasa:அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சர்வாதிகாரி என சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.. ஏன்?

மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கான தீர்வு மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை சரி செய்வதற்கு மக்கள் வைத்துள்ள ஆலோசனைகளை பெறுவதற்கு தேசிய சபை ஒன்றை ஏற்படுத்தி எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இந்த தேசிய சபையினூடாக மக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து அவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

மக்களால் முன்வைக்கப்படும் நாட்டுப் பிரச்சனைக்கான சிறந்த தீர்மானங்கள் பரிசீலிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும், அதனூடாக மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget