மேலும் அறிய

Sajith Premadasa:அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சர்வாதிகாரி என சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.. ஏன்?

மக்கள் எதிர்பார்த்த புதியதொரு பயணத்திற்கு பதிலாக, பழைய வன்முறை நிலைமையே தற்போதும் நடைமுறையில் இருப்பதாக சுட்டி காட்டியுள்ளார்.

இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்க கூடாது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவை குறிப்பிட்டு பேசிய அவர், தற்போது நியமிக்கப்பட்டுள்ள சர்வாதிகாரிக்கு ஜனநாயகத்தை அடக்கி ஆளும் , வன்முறை ஆட்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது என கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.இலங்கையில் அரச வன்முறை தீவிரமாக காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிபர் செயலகத்தின் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த (கோட்டா கோ கம), பொதுமக்களை நள்ளிரவில் ராணுவத்தினரை வைத்து தாக்குதல் நடத்தி வெளியேற்றியது தொடர்பாக அதிபர் ரணில் மீது , நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் சர்வதேச தலைவர்களும் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

 இந்நிலையில் மக்கள் மீது வன்முறையை பிரயோகிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி வேண்டாம் எனவே மக்கள் கூறிவந்த நிலையில், அவர் திடீரென வன்முறையை கையில் எடுத்ததால் அவர் மீதான வெறுப்பு இன்னும் மக்களிடம் அதிகமாகி இருக்கிறதே தவிர தணிந்ததாக தெரியவில்லை.

 


Sajith Premadasa:அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சர்வாதிகாரி என சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.. ஏன்?

இலங்கையில் அரச  வன்முறைகளை கட்டவிழ்த்து விட சர்வாதிகார ஆட்சிக்கு  வழிவிடக்கூடாது எனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தி இருக்கிறார்இலங்கையில் என்னதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், மக்கள் எதிர்பார்த்த புதியதொரு பயணத்திற்கு பதிலாக, பழைய வன்முறை நிலைமையே தற்போதும் நடைமுறையில் இருப்பதாக சுட்டி காட்டியுள்ளார்.

கடந்த மே மாதம் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் ,அதன் பின்னர் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அதிபர் நாட்டை விட்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச, இதனை அடுத்து நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் விடிவு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து இருந்ததாகவும் ஆனால் அது இதுவரை கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரை மக்கள் எதிர்பார்த்த அந்த புதிய ஜனநாயக கட்டமைப்பு இலங்கையில் உருவாகவில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் 69 லட்சம் பெரும்பான்மை வாக்கு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அதிபருக்கே இந்த நிலைமை என்றால்,இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தன்னிச்சையாக சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட முடியாத நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஆட்சியில் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்தி முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென சஜித் பிரேமதாச வலியுறுத்தியிருக்கிறார்.


Sajith Premadasa:அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சர்வாதிகாரி என சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.. ஏன்?

மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கான தீர்வு மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை சரி செய்வதற்கு மக்கள் வைத்துள்ள ஆலோசனைகளை பெறுவதற்கு தேசிய சபை ஒன்றை ஏற்படுத்தி எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இந்த தேசிய சபையினூடாக மக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து அவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

மக்களால் முன்வைக்கப்படும் நாட்டுப் பிரச்சனைக்கான சிறந்த தீர்மானங்கள் பரிசீலிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும், அதனூடாக மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
Iran USA Clash: இதென்னடா அமெரிக்காவுக்கு வந்த சோதனை..! 20,000 Vs 4 மில்லியன் - டாலர்களை விழுங்கும் ஈரான்
Iran USA Clash: இதென்னடா அமெரிக்காவுக்கு வந்த சோதனை..! 20,000 Vs 4 மில்லியன் - டாலர்களை விழுங்கும் ஈரான்
Top 10 News Headlines: சரிந்த தங்கம் விலை, இந்தியாவில் X அதிரடி, ஈரான் பகிரங்க மிரட்டல், ட்ரம்ப்பை எச்சரித்த பென்டகன் - 11 மணி செய்திகள்
சரிந்த தங்கம் விலை, இந்தியாவில் X அதிரடி, ஈரான் பகிரங்க மிரட்டல், ட்ரம்ப்பை எச்சரித்த பென்டகன் - 11 மணி செய்திகள்
Pentagon Warns Trump.?: ஏவுகணைகள் காலியாகப் போகுது.! கதறும் பென்டகன்; அதிர்ச்சியில் ட்ரம்ப்.. போர் தொடருமா.?
ஏவுகணைகள் காலியாகப் போகுது.! கதறும் பென்டகன்; அதிர்ச்சியில் ட்ரம்ப்.. போர் தொடருமா.?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
Embed widget