மேலும் அறிய

Iran USA Clash: இதென்னடா அமெரிக்காவுக்கு வந்த சோதனை..! 20,000 Vs 4 மில்லியன் - டாலர்களை விழுங்கும் ஈரான்

Iran USA Clash: ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் 20 ஆயிரம் டாலர்கள் மதிப்பிலான ட்ரோன்களை அழிக்க, 4 மில்லியன் டாலர்கல் மதிப்பிலான ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.

Iran USA Clash: ஈரானின் தாக்குதல்களை முறியடிக்க அமெரிக்கா அதிகப்படியான டாலர்களை செலவழிர்த்து வருகிறது.

திருப்பி அடிக்கும் ஈரான்..

தொடங்கி மூன்று நாட்களே ஆன நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. தெஹ்ரானின் ட்ரோன் தாக்குதலானது அமெரிக்கா மட்டுமின்றி அதன் நட்பு நாடுகளான பஹ்ரைன் தொடங்கி ஐக்கிய அரபு அமீரகம் மீதும் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி ஆயுதக் கிடங்குகளை காலியாக்கி வருகிறது. இந்த மோதலில் வெற்றி என்பது முதலில் எந்த தரப்பிற்கு ஆயுதம் குறைகிறது என்பதை பொறுத்தே அமையும் என கூறப்படுகிறது. 

ஷாஹெத் 136 எனப்படும் ஒருமுறை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ட்ரோன்கள், சிறிய மற்றும் அடிப்படை க்ரூஸ் ஏவுகணைகள், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளை தாக்கி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள், எண்ணெய் உட்கட்டமைப்புகள் உள்ளிட்டவை ட்ரோன்கள் மூலம் குறிவைத்து தாக்கப்படுகின்றன.

அமெரிக்கா.. வெற்றியா? தோல்வியா?

அமெரிக்காவானது தங்களது சொந்த தயாரிப்பான பாட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை கொண்டு, ஈரானின்ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை வெற்றிகரமாக தடுத்து வருகிறது. அமெரிக்காவின் மேற்குறிப்பிட்ட ஏவுகணைகள் மூலம், ஈரானின் தாக்குதல்கள் 90 சதவிகிதம் வரை முறியடிக்கப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. ஆனால், உக்ரைன் போரிலிருந்து தற்போது வரை வெறும் 20 ஆயிரம் டாலர்கள் அதாவது ரூ.18.43 லட்சம் மதிப்பிலான ட்ரோன்களை அழிக்க, 4 மில்லியன் டாலர்கள் அதாவது ரூ.36.86 கோடி மதிப்பிலான ஏவுகணைகளை பயன்படுத்துவது தான், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதிரிகளின் மிகப்பெரிய மற்றும் சிக்கலான தாக்குதல்களை முறியடிக்க வடிவமைக்கப்பட்ட ஏவுகணைகளை, ஈரானின் மலிவான ட்ரோன்கள் விழுங்கி வருகின்றன.

ஆயுதங்களின் பலத்தில் தீர்ப்பு..

தற்போது நிலவும் வேகம் அப்படியே நீடித்தால் அமெரிக்கா மற்றும் ஈரானும் சில நாட்கள் அல்லது வாரங்களில் தங்களது ஆயுத கையிருப்பை இழக்கக் கூடும். அதில் யார் நீண்டகாலம் தாக்குப் பிடிக்கிறார்களோ அவருகளுக்கு இந்த மோதலில் வெற்றி கிடைக்கக் கூடும். காசாவில் நடந்த போரினால் ஈரானின் பிராந்திய ஆதரவாளர்கள் கடுமையாக பலவீனமடைந்துள்ளனர்.  ஜூன் மாதத்தில் 12 நாட்கள் நீடித்த போரில் இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல்களால் ஈரானின் ஏவுகணை திறன் பின்னடைவை சந்தித்துள்ளது. அதேநேரம், தங்களது பாதுகாப்பு ஆயுதங்களை இழப்பதை கருத்தில் கொண்டு, மோதலை முடிவுக்கு கொண்டு வர வளைகுடா நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. 

ஆயுதங்கள் கையிருப்பு

கத்தார் கைவசம் உள்ள பாட்ரியாட் தடுப்பு ஏவுகணைகள் அடுத்த 4 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என சர்வதேச ஆயுத தரவுகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுடனான கடந்த ஆண்டு மோதலுக்குப் பிறகு ஈரான் வசம் தற்போது சுமார் 2 ஆயிரம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம், ரஷ்யா போன்ற ஆதரவு நாடுகள் மூலம் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ஷாஹெத் ட்ரோன்கள் தயாரிக்கும் திறனை கொண்டுள்ளதால், அது ஈரானுக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. தற்போதைய அமெரிக்கா உடனான மோதலில் பெரும்பாலும் ட்ரோன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் திவிரமடையும்போது பயன்படுத்துவதற்காக பாலிஸ்டிக் ஏவுகணைகள் சேமிக்கப்பட்டுள்ளன. 

Frequently Asked Questions

ஈரானின் ட்ரோன் தாக்குதல்கள் எந்தெந்த நாடுகளை குறிவைக்கின்றன?

ஈரானின் ட்ரோன் தாக்குதல்கள் அமெரிக்கா மட்டுமின்றி, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அதன் நட்பு நாடுகளையும் குறிவைக்கின்றன.

ஈரானின் தாக்குதல்களை முறியடிக்க அமெரிக்கா என்ன பயன்படுத்துகிறது?

அமெரிக்கா தனது சொந்த தயாரிப்பான பாட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை பயன்படுத்தி ஈரானின் ட்ரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை முறியடித்து வருகிறது.

அமெரிக்கா தனது ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க எவ்வளவு செலவழிக்கிறது?

உக்ரைன் போரிலிருந்து, சுமார் 18.43 லட்சம் ரூபாய் மதிப்பிலான ட்ரோன்களை அழிக்க, 36.86 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்துகிறது. இது ஒரு கவலையாக உள்ளது.

இந்த மோதலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்?

முதலில் யாருடைய ஆயுதங்கள் குறைகிறதோ, அவர்களே இந்த மோதலில் தோல்வியடைவார்கள். நீண்ட காலம் தாக்குப் பிடிப்பவரே வெற்றி பெறுவார்.

ஈரானின் ஆயுத கையிருப்பு பற்றி என்ன தெரியும்?

ஈரான் வசம் சுமார் 2 ஆயிரம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்கலாம். ரஷ்யா போன்ற நாடுகளின் உதவியுடன் தினமும் நூற்றுக்கணக்கான ஷாஹெத் ட்ரோன்களை தயாரிக்கும் திறனையும் கொண்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget