மேலும் அறிய

Russias Wagner Mercenary : எங்கே போனார் ரஷிய அதிபர் புதின்? வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சிக்கு பிறகு நடந்தது என்ன?

வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி முடிவுக்கு வந்த பிறகு, முதல்முறையாக வீடியோ செய்தி வெளியிட்டு மக்கள் முன் தோன்றியுள்ளார்

கடந்த 16 மாதங்களாக, உக்ரைன் போர் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி  வரும் நிலையில், அதில் திடீர் திருப்பமாக ரஷியா ஆதரவு கூலிப்படை ரஷியா ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியது. குறிப்பாக, ரிஷிய நாட்டு ராணுவ தலைமையை கவிழ்க்க போவதாக வாக்னர் கூலிப்படை எச்சரிக்கை விடுத்தது.

உலக நாடுகள் மத்தியில் பதற்றம்:

ரஷிய தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்து செல்ல, தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படைக்கு அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உத்தரவிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்தரவு பிறப்பித்த வேகத்துடனேயே அதனை திரும்ப பெற்றார் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின்.

இரவு நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில் ரஷிய அரசுக்கும் வாக்னர் கூலிப்படைக்கும் சுமூகமான தீர்வு ஏற்பட நாட்டை விட்டு செல்ல பிரிகோஜின் ஒப்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு பலனாக, அவருக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பிரச்னை முடிவுக்கு வந்த போதிலும், உலகின் அதிகாரமிக்க தலைவரான புதினுக்கு எதிராக சொந்த நாட்டு கூலிப்படையே திரும்பியது உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால், அவரின் செல்வாக்கு சரியும் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியில், ரஷிய அதிபர் தற்போது எங்குள்ளார் என்ற கேள்வி உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

மக்கள் முன் தோன்றி ரஷிய அதிபர் புதின்:

இந்நிலையில், வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி முடிவுக்கு வந்த பிறகு, முதல்முறையாக வீடியோ செய்தி வெளியிட்டு மக்கள் முன் தோன்றியுள்ளார் புதின். "எதிர்காலத்தின் பொறியாளர்கள்" என்று அழைக்கப்படும் இளைஞர் மன்றத்தில் புதின் உரையாற்றினார். கடுமையான வெளிப்புற சவால்களை எதிர்கொண்டு நாட்டின் தொழில்துறையின் நிலையான செயல்பாட்டை உறுதி செய்ததற்காக நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

வாக்னர் கூலிப்படை - யார் இவர்கள்?

பிஎன்சி வாக்னர் எனப்படும் வாக்னர் கூலிப்படை, ரஷிய நாட்டின் துணை ராணுவ அமைப்பாகும். சட்டத்திற்கு அப்பாற்பட்டு வேலை செய்து வருகிறது. அடிப்படையில், இது ஒரு தனியார் ராணுவ அமைப்பாகும். கூலிப்படையினரை கொண்டு இயங்கி வருகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷிய சார்பு பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிக்கும் போது இந்த குழு முதலில் 2014இல் அடையாளம் காணப்பட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டில், பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலேயே இந்த  ரகசிய அமைப்பு இயங்கி வந்தது. இந்த குழுவில் ரஷியாவின் உயரடுக்கு படைப்பிரிவுகள் மற்றும் சிறப்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 5,000 போராளிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில், உக்ரைன் போரில் வாக்னர் கூலிப்படையால் இப்போது 50,000 போராளிகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர் என்றும் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது என்றும் ஜனவரி மாதம் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள பக்முட் நகரை ரஷியா கைப்பற்றியதில் வாக்னர் குழு முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. கொடூரமாகவும் இரக்கமற்றும் செயல்படுவதில் பிரபலம் அடைந்துள்ளது வாக்னர் கூலிப்படை.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு, லிபியா மற்றும் மாலி உட்பட ஆப்பிரிக்கா முழுவதும் வாக்னர் கூலிப்படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மேற்கத்திய நாடுகளும் ஐ.நாவும் குற்றம் சாட்டி வருகிறது.

தலைப்பு செய்திகள்

Trump on Hormuz: “ஈரான பேச்சுவார்த்தைக்கு நான் கூப்படல, ஹார்முஸ் எங்க முழுமையான கட்டுப்பாட்டுல இருக்கு“: ட்ரம்ப் அதிரடி
“ஈரான பேச்சுவார்த்தைக்கு நான் கூப்படல, ஹார்முஸ் எங்க முழுமையான கட்டுப்பாட்டுல இருக்கு“: ட்ரம்ப் அதிரடி
Trump Warns Iran: “நியாயமான தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தினா, சாத்தி எடுத்துடுவேன்“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
“நியாயமான தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தினா, சாத்தி எடுத்துடுவேன்“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
Strike At Wedding: திருமண வீட்டில் திடீர் தாக்குதல்..! குழந்தை உட்பட 5 பேர் மரணம், 50 பேர் காயம் - நடந்தது என்ன?
திருமண வீட்டில் திடீர் தாக்குதல்..! குழந்தை உட்பட 5 பேர் மரணம், 50 பேர் காயம் - நடந்தது என்ன?
Donald Trump: கைவிட்ட இந்திய-அமெரிக்கர்கள்; சரியும் செல்வாக்கு; கருத்துக்கணிப்பில் ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி
கைவிட்ட இந்திய-அமெரிக்கர்கள்; சரியும் செல்வாக்கு; கருத்துக்கணிப்பில் ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: ஸ்டாலினின் திட்டங்களுக்கு ‘குட்பை’ சொன்ன விஜய் அரசு! 100 நாட்களில் ரத்து செய்யப்பட்டவை எவை? பட்டியல் இதோ..
ஸ்டாலினின் திட்டங்களுக்கு ‘குட்பை’ சொன்ன விஜய் அரசு! 100 நாட்களில் ரத்து செய்யப்பட்டவை எவை? பட்டியல் இதோ..
Gold and silver rate today : ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!! இன்றைய விலை இதோ
ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!! இன்றைய விலை இதோ..
TN Temples: கோயில்களில் செல்போன் தடை.. இவர்களுக்கு மட்டும் அனுமதி.. அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!
TN Temples: கோயில்களில் செல்போன் தடை.. இவர்களுக்கு மட்டும் அனுமதி.. அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!
Minister Vignesh: எதற்கும் பணியமாட்டேன்.. டாஸ்மாக் நடவடிக்கை தொடரும்.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!
Minister Vignesh: எதற்கும் பணியமாட்டேன்.. டாஸ்மாக் நடவடிக்கை தொடரும்.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!
நாகப்பட்டினம் மாவட்ட அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! செப். 8 உள்ளூர் விடுமுறை!
நாகப்பட்டினம் மாவட்ட அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! செப். 8 உள்ளூர் விடுமுறை!
ரேஷன் கடையில் இன்று முதல் வெங்காயம் விற்பனை .! யார் யாருக்கு கிடைக்கும்.? ஒரு கிலோ எவ்வளவு.?
ரேஷன் கடையில் இன்று முதல் வெங்காயம் விற்பனை .! யார் யாருக்கு கிடைக்கும்.? ஒரு கிலோ எவ்வளவு.?
Annamalai : மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்துவதா.! TVK அரசின் திட்டத்தை வெளுத்தெடுத்த அண்ணாமலை
மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்துவதா.! TVK அரசின் திட்டத்தை வெளுத்தெடுத்த அண்ணாமலை
Keralam: கறிக்குழம்பு சமைக்காத மனைவி.. கத்தியை எடுத்து குத்திய கணவன்.. அதிரவைத்த கொலை!
Keralam: கறிக்குழம்பு சமைக்காத மனைவி.. கத்தியை எடுத்து குத்திய கணவன்.. அதிரவைத்த கொலை!
Embed widget