மேலும் அறிய

Princess Mako | கல்லூரி நண்பரை மணந்த ஜப்பான் இளவரசி.. போராட்டத்தில் குதித்த மக்கள்..

சாமானியரைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் அரசுக் குடும்ப பட்டத்தை இழந்ததோடு தனக்கு சீதனமாக அளிக்கப்படவிருந்த 7000 கோடி ரூபாயையும் வேண்டாம் என சொல்லிவிட்டார் இளவரசி மகோ.  

ஜப்பான் இளவரசி மகோ, ஒரு சாமானியரைத் திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டோக்கியோவில் ஜப்பானியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜப்பான் இளவரசி மகோ, அரண்மனையிலிருந்து வெளியேறி தனது காதலர் கொமுரோவை நேற்று திருமணம் செய்துக் கொண்டார். ஒரு சாமானியரைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் அரசுக் குடும்ப பட்டத்தை இழந்ததோடு தனக்கு சீதனமாக அளிக்கப்படவிருந்த 7000 கோடி ரூபாயையும் வேண்டாம் என சொல்லிவிட்டார் இளவரசி மகோ.  

ஜப்பானின் பட்டத்து இளவரசரின் மகளும், பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான மகோ அந்நாட்டை சேர்ந்த சாமானியரான கொமுரோவைப் பல ஆண்டுகளாகவே காதலித்து வந்தார். அரசக் குடும்பத்துப் பெண்கள் சாதாரண நபர்களைத் திருமணம் செய்துகொள்ள தடை உள்ளது. அப்படி செய்தால் அதற்குபின் அவர்கள் அவர்கள் அரசுக் குடும்ப பட்டம் பறிபோய்விடும். இந்நிலையில் தடையை மீறி இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொள்ள எண்ணி அதற்கான ஏற்பாடுகளை செய்தபோது, கொமுரோவின் தாயார் தன்னிடம் 4 மில்லியன் யென் (ஜப்பானிய பணம்) கடன் வாங்கி திரும்ப செலுத்தவில்லை, அதில் கொமுரோவின் படிப்பு செலவுகளும் அடங்கும் என்று அவரது முன்னாள் கணவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இளவரசியின் காதலர் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தத் தவறியதாகக் கூறப்பட்டதால் அது ஜப்பானில் மிகப்பெரிய பேசுபொருளானது. அந்த பரபரப்பான விவாதங்களுக்கு மத்தியில் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கொமூரோ தனது சட்டப் படிப்பிற்காக அமெரிக்காவுக்குச் சென்றார். இது எதிர்மறை கவனத்தை (Negativity) குறைப்பதற்கான முயற்சியாகத்தான் பரவலாக பேசப்பட்டது. இது குறித்து கடந்த ஆண்டு பேசிய மகோவின் தந்தையும், பட்டத்து இளவரசருமான  அகிஷினோ தனது மகளின் திருமணத்தை ஆதரிப்பதாக கூறினார். ஆனால் அவர் பொதுமக்களின் "புரிதலை" வெல்ல வேண்டும் என்றும்  கூறினார்.


Princess Mako | கல்லூரி நண்பரை மணந்த ஜப்பான் இளவரசி.. போராட்டத்தில் குதித்த மக்கள்..

இதையடுத்து வழக்கமான சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொள்வதன் மூலமும் தங்களை சுற்றியுள்ள பிரச்சினையைத் தீர்க்க முடிவு செய்தார் இளவரசி மகோ. பொதுவாக ஜப்பானில் பல்வேறு சடங்குகளுடன் அரசக் குடும்ப திருமண நிகழ்வுகள் நடைபெறும். இந்நிலையில் இந்த ஜோடி பாரம்பரிய சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதேபோல அரச குடும்ப பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளும்போது குடும்பத்தின் சார்பில் வழங்கப்படும் மிகப்பெரிய தொகையான   4 மில்லியன் யென் (12மில்லியன் அமெரிக்க டாலரையும்) வேண்டாம் என சொல்லியுள்ளார் இளவரசி. இந்த பணத்தை வேண்டாம் என சொல்கிற முதல் இளவரசி மகோதான். இதற்குமுன் அந்த குடும்பத்தில் யாரும் அவ்வாறு சொல்லியதில்லை. 

இந்நிலையில் மகோ இன்று ஒரு சாமானியரை திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு வாரிசுகள் பிறந்தால் அவர்களும் அரசக் குடும்பத்தின் வாரிசுகளாக கருதப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரச கும்பத்தின் பெயரையும் தனது பெயருக்குப் பின்னால் மகோ பயன்படுத்த மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது, இளவரசி மகோ ஒரு சாமானியரைத் திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ‘ஜப்பான் மற்றும் அரசக்குடும்பத்தின் எதிர்காலம் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்’ போன்ற பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  “இந்த திருமணம் பிரச்சினைகள் நிறைந்தது. அரசுக் குடும்பம் குற்றங்களில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை” என்றும் அவர்கள் தெரிவித்தனர். 
முன்னதாக, திருமணம் குறித்த சர்ச்சை எழுந்தபோது பல்வேறு இடையூறுகளின் காரணமாக இளவரசி மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 


Princess Mako | கல்லூரி நண்பரை மணந்த ஜப்பான் இளவரசி.. போராட்டத்தில் குதித்த மக்கள்..

இந்நிலையில் எங்கள் திருமணம் காரணமாக யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக மகோ தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Embed widget