மேலும் அறிய

Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அவரவர் எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவித்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் வேளையில், எல்லைக்கோட்டு பகுதியில் இரு நாடுகளும் தங்கள் பீரங்கிப் படைகளை குவித்து வருவதால், முழு அளவிலான ராணுவ மோதலுக்கு இது வழிவகுக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.

மோதில் போக்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான், நம் நாட்டுடன் மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. கடந்த, 2021-ல் ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. அப்போதிலிருந்து, ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும், டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, அடிக்கடி பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி வந்தது.

தலிபான் ஆட்சிக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுத்து வந்ததால், இது பெரிய அளவில் பிரச்னையாக  எழவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, இரு நாட்டு எல்லையிலும் தாக்குதல்கள்  தீவிரமாகியுள்ளன. இதையடுத்து, டி.டி.பி., தலைவர்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல்கள் நடத்தியது. இதற்காக, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள்ளும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான மோதலாக மாறியது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். இதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை. கடந்த சில நாட்களாக இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இரு நாட்டு எல்லைகளிலும் படைகள் குவிப்பு - பதற்றம்

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இரு நாடுகளும் தங்கள் எல்லையில் படைகளையும், தளவாடங்களையும் குவித்து வருகின்றன. குறிப்பாக பீரங்கிப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், போர் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இரு தரப்பிற்கும் இடையே தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் அங்கு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. துரண்ட் லைன்(Durand Line) என்ற பகுதியில் தான் மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இரு நாடுகளுமே தங்களது எல்லைப் பகுதிகளில் பீரங்கிகளை குவித்துள்ளன. மேலும், இரு நாடுகளும், ராணுவ வீரர்கள், தளவாடங்களையும் அதிகளவில் குவிப்பதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதனிடையே, சர்வதேச நாடுகளும் இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போர் வெடித்தால், அது சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், உலக நாடுகளின் கவனம் தற்போது இந்த பக்கம் திரும்பியுள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Siddaramaiah Vs DKS: கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Embed widget