மேலும் அறிய

North Korea: பசி.. பட்டினி.. உணவுப்பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் வட கொரியா? என்ன நடக்கிறது அங்கே!?

கடும் உணவுதட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள வட கொரிய நாடு எதற்காக தட்டுப்பாடு நிலவியது என்ற காரணங்கள் தெரிய வந்துள்ளன.

90களில் சோவியத் யூனியன் உடைந்த போது, கடும் பொருளாதார நெருக்கடி. பசி பட்டினி, அதில் இருந்து மீண்டு வந்த வடகொரியாவிற்கு, மீண்டும் பசி கொடுமை வாட்டி வதைத்து வருகிறது. சீனாவில் கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கிய போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக்கூறி நாட்டின் எல்லைகள் அனைத்தையும் மூடியது வடகொரியா. வர்த்தக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சீனாவை நாடியுள்ள வடகொரியாவிற்கு, இந்த முடிவு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஏற்கனவே அமெரிக்கா விதித்த பொருளாதார தடையும், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று இயற்கை பேரிடர்களும் வடகொரியாவின் பொருளாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. உள்நாட்டு வேளாண் உற்பத்தி எதிர்பார்த்ததை விட பன்மடங்கு குறைந்ததால், உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக வடகொரியா நாட்டில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைக்காததோடு, குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வடகொரிய மக்கள்தொகையில் 40 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டுவருகிறார்கள்' என்கிறது ஐ.நா சபையின் புள்ளிவிவரம். இந்த நிலையில், உணவுப் பஞ்சம் தற்போது பன்மடங்கு அதிகரித்திருப்பதால், நாட்டு மக்களின் நிலை குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும், ``ஒவ்வொருவரும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று ஒரு நாட்டின் ஆட்சியாளர் சொல்வது மிக மிகத் தவறு. உணவுக் கட்டுப்பாடு விதித்திருப்பது ஆட்சியாளர்களின் தோல்வியையே காட்டுகிறது'' என்று கண்டனங்களைப் பதிவு செய்துவருகிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

North Korea: பசி.. பட்டினி.. உணவுப்பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் வட கொரியா? என்ன நடக்கிறது அங்கே!?

ஒரு கிலோ சோளத்தின் விலை பிப்ரவரியில் கடுமையாக உயர்ந்து 3,137 வோன்களுக்கு விற்றுள்ளது என, வட கொரியாவில் உள்ள தொடர்புகளிடம் இருந்து தகவல்களை சேகரிக்கும் Daily NK இணையதளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் நடுப்பகுதியில் விலைகள் மீண்டும் கடுமையாக உயர்ந்தன என்று ஏசியா பிரஸ் இணையதளம் தெரிவித்துள்ளது, இது வட கொரியர்களுடன் நாட்டிற்கு கடத்தப்பட்ட தொலைபேசிகளில் தொடர்பு கொள்கிறது. சோளம் அரிசியை விட குறைவான விருப்பமான பிரதான உணவாகும், ஆனால் அது மலிவானது என்பதால் அடிக்கடி உட்கொள்ளப்படுகிறது.

உணவுப் பற்றாக்குறை குறித்த தனது அறிக்கையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், கடந்த ஆண்டு அறுவடை நேரத்தில் சூறாவளி மற்றும் வெள்ளத்தின் தாக்கத்தை குறிப்பிட்டார். பாரிஸை தளமாகக் கொண்ட விவசாய கண்காணிப்பு அமைப்பான ஜியோக்லாம் கருத்துப்படி, ஏப்ரல் முதல் செப்டம்பர் 2020 வரை உள்ள காலகட்டம் கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் பதிவாகிய மிக அதிகமான மழை பொழிந்த காலகட்டங்களில் ஒன்றாகும். கொரிய தீபகற்பம் ஒரு சூறாவளியால் தாக்கப்பட்டது, இதில் மூன்று ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வீசி நிலச்சரிவை ஏற்படுத்தியது, இது நெல் மற்றும் சோளத்தின் அறுவடையை பாதித்திருந்தது.

North Korea: பசி.. பட்டினி.. உணவுப்பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் வட கொரியா? என்ன நடக்கிறது அங்கே!?

வட கொரியாவின் விவசாயத் துறைக்கு அதிகம் அறியப்படாத பிரச்சனைகளில் ஒன்று, பயிர் விளைச்சலை மேம்படுத்த போதுமான உரங்களைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் ஆகும். அதுமட்டுமின்றி சீன அதிகாரப்பூர்வ சுங்கத் தரவுகளின்படி, வட கொரியாவுக்கான மொத்த சீன ஏற்றுமதிகள் சமீபத்திய ஆண்டுகளில் சுமார் $2.5bn முதல் $3.5bn வரை இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை $500 மில்லியனுக்கும் குறைவாக இருந்தது. நாட்டின் மிகப்பெரிய நன்கொடையாளர் சீனா, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து வட கொரியாவுக்கான அதன் உணவு ஏற்றுமதியை 80% குறைந்துள்ளது. கொரியாவுக்கு நன்கொடை தரும் நாடுகளிடமிருந்து வரும் உதவிகள் கடந்த பத்தாண்டுகளாக போதுமானதாக இல்லை என்று ஐ.நா. குறிப்பிட்டிருக்கிறது.

உணவு பற்றாக்குறையை சமாளிக்கவும், ஊட்டச்சத்து உணவு கிடைக்கவும் முயல், மீன் பண்ணைகள் அதிகளவில் தொடங்கப்பட்டு வருகின்றன. அங்கு கருப்பு அன்னப்பறவைகளும் உணவுக்காக அதிகளவில் வளர்க்கப்பட்டு வருவது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. வடகொரியா சூழல் இப்படி இருக்க, 2025ஆம் ஆண்டு வரை குறைவாக உணவு சாப்பிடுங்கள் என அதிபர் கிம் ஜாங் உன் அண்மையில் கூறியது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பசி, பட்டினியால் மக்கள் வாடினாலும், ஏவுகணை சோதனைகளை கைவிடாமல் அவ்வப்போது வடகொரியா மேற்கொள்வது உலகநாடுகளை அதிருப்தி அடைய வைக்கிறது. மக்களை வதைக்கும் இந்த உணவு பஞ்சத்தை வடகொரியா எப்படி சமாளிக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

US Iran Tensions: “உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
“உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget