மேலும் அறிய

ஹிரோஷிமா தினம்: 77 ஆண்டுகள் ஆகியும் ஜப்பான் மக்களைப் பாதிக்கும் அணுகுண்டு தாக்குதல்..

ஒவ்வொரு ஆண்டும் நாடுகளிடையே அமைதியை மேம்படுத்தவும், அணு ஆயுதங்களின் பேரழிவுக் கொண்ட விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் ஹிரோஷிமா தினமாக அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்காவினால் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டுத் தாக்குதல்கள், வரலாற்றில் ஆயுதப் போரின் போது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்கான பதிவு செய்யப்பட்ட முக்கிய நிகழ்வுகளாகும்.

முதல் அணுகுண்டு ஆகஸ்ட் 6, 1945 இல் ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்டு, நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவிகிதம் அழிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9 அன்று, இரண்டாவது அணுகுண்டு நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. மனித குல வரலாற்றில் மிகவும் அழிவுகரமான நிகழ்வான இது, இன்று 77வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

வரலாறு:

மே 1945 இல் ஜெர்மனி, அலைட் நாட்டுப் படைகளிடம் சரணடைந்தது. ஆனால், ஆசியாவில் ஜப்பானுக்கும் மற்ற படைகளுக்கிடையே இரண்டாம் உலகப் போர் தொடர்ந்தது. ஜப்பானை சரணடையச் செய்ய, அமெரிக்கா மன்ஹாட்டன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. அந்த திட்டத்தின் கீழ் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீச லிட்டில் பாய் மற்றும் ஃபேட் மேன் என்று இரண்டு சக்திவாய்ந்த அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 6 1945 அன்று, அமெரிக்க விமானமான B-29 பாம்பர், லிட்டில் பாய் அணுகுண்டை ஹிரோஷிமா நகர் மீது வீசியது. அதன் உடனடி தாக்கமாக 90,000 பேர் கொல்லப்பட்டனர்.

பின்விளைவு:

ஹிரோஷிமாவின் அணுவாயுதமானது 160,000 ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை மரணத்திற்கு காரணமானது. விஞ்ஞானிகளால் கூட முழுமையாக பட்டியலிட முடியாத அளவிற்கு பயங்கரமான சேதத்தை ஏற்படுத்தியது. கதிர்வீச்சு காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நிரந்தரமாக கருத்தடை செய்யப்பட்டனர், கர்ப்பிணிப் பெண்களிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு,மீண்டும் கருத்தரிக்கவில்லை.

மேற்பரப்பு காயங்கள் மீண்டும் திறக்கப்பட்டன, முடி திடீரென உதிர ஆரம்பித்தது மற்றும் ஒரு சிறிய தீக்காயம் குணமடைய பல மாதங்கள் ஆனது. காய்ச்சல் 106F வரை சென்று, அதைத் தொடர்ந்து ஈறுகளில் இரத்தப்போக்கு, சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தது.

வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையானது சாதாரண அளவை விட உயர்ந்து, அது குறையும்போழுது புதிய நோயையும் கொண்டு வந்தது. 1945 ஆம் ஆண்டின் அழிவு நிகழ்வுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதிக்கப்பட்டன.

77 ஆண்டுகள் ஆகியும் ஹிரோஷிமா நகரின் மீது நடக்கப்பட்ட தாக்குதலின் விளைவுகள் இன்றுவரை ஜப்பான் மக்களை பாதித்துக் கொண்டு வருகிறது.

ஹிரோஷிமா தினத்தின் முக்கியத்துவம்:

இந்த அணுகுண்டு தாக்குதல்களால் ஜப்பான் நாட்டுப் படைகள் சரணடை வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, இரண்டாம் உலகப் போரின் முடிவைக் குறித்தது.

நாடுகளிடையே அமைதியை மேம்படுத்தவும் அணு ஆயுதங்களின் பேரழிவு விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஹிரோஷிமா தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச உறவுகளில் போருக்கு எதிரான மற்றும் அணுசக்தி எதிர்ப்பு கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் இந்த நாள் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Annamalai: ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
Akash Choudry: அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்..! அடி.. அடி.. அன்பீலிவபிள் அடி - உலக சாதனை படைத்த இந்தியர்!
Akash Choudry: அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்..! அடி.. அடி.. அன்பீலிவபிள் அடி - உலக சாதனை படைத்த இந்தியர்!
10 பவுன் நகை பறித்து சென்ற வழக்கில் 2 பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை
10 பவுன் நகை பறித்து சென்ற வழக்கில் 2 பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை
Embed widget