மேலும் அறிய

ஹிரோஷிமா தினம்: 77 ஆண்டுகள் ஆகியும் ஜப்பான் மக்களைப் பாதிக்கும் அணுகுண்டு தாக்குதல்..

ஒவ்வொரு ஆண்டும் நாடுகளிடையே அமைதியை மேம்படுத்தவும், அணு ஆயுதங்களின் பேரழிவுக் கொண்ட விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் ஹிரோஷிமா தினமாக அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்காவினால் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டுத் தாக்குதல்கள், வரலாற்றில் ஆயுதப் போரின் போது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்கான பதிவு செய்யப்பட்ட முக்கிய நிகழ்வுகளாகும்.

முதல் அணுகுண்டு ஆகஸ்ட் 6, 1945 இல் ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்டு, நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவிகிதம் அழிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9 அன்று, இரண்டாவது அணுகுண்டு நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. மனித குல வரலாற்றில் மிகவும் அழிவுகரமான நிகழ்வான இது, இன்று 77வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

வரலாறு:

மே 1945 இல் ஜெர்மனி, அலைட் நாட்டுப் படைகளிடம் சரணடைந்தது. ஆனால், ஆசியாவில் ஜப்பானுக்கும் மற்ற படைகளுக்கிடையே இரண்டாம் உலகப் போர் தொடர்ந்தது. ஜப்பானை சரணடையச் செய்ய, அமெரிக்கா மன்ஹாட்டன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. அந்த திட்டத்தின் கீழ் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீச லிட்டில் பாய் மற்றும் ஃபேட் மேன் என்று இரண்டு சக்திவாய்ந்த அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 6 1945 அன்று, அமெரிக்க விமானமான B-29 பாம்பர், லிட்டில் பாய் அணுகுண்டை ஹிரோஷிமா நகர் மீது வீசியது. அதன் உடனடி தாக்கமாக 90,000 பேர் கொல்லப்பட்டனர்.

பின்விளைவு:

ஹிரோஷிமாவின் அணுவாயுதமானது 160,000 ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை மரணத்திற்கு காரணமானது. விஞ்ஞானிகளால் கூட முழுமையாக பட்டியலிட முடியாத அளவிற்கு பயங்கரமான சேதத்தை ஏற்படுத்தியது. கதிர்வீச்சு காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நிரந்தரமாக கருத்தடை செய்யப்பட்டனர், கர்ப்பிணிப் பெண்களிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு,மீண்டும் கருத்தரிக்கவில்லை.

மேற்பரப்பு காயங்கள் மீண்டும் திறக்கப்பட்டன, முடி திடீரென உதிர ஆரம்பித்தது மற்றும் ஒரு சிறிய தீக்காயம் குணமடைய பல மாதங்கள் ஆனது. காய்ச்சல் 106F வரை சென்று, அதைத் தொடர்ந்து ஈறுகளில் இரத்தப்போக்கு, சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தது.

வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையானது சாதாரண அளவை விட உயர்ந்து, அது குறையும்போழுது புதிய நோயையும் கொண்டு வந்தது. 1945 ஆம் ஆண்டின் அழிவு நிகழ்வுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதிக்கப்பட்டன.

77 ஆண்டுகள் ஆகியும் ஹிரோஷிமா நகரின் மீது நடக்கப்பட்ட தாக்குதலின் விளைவுகள் இன்றுவரை ஜப்பான் மக்களை பாதித்துக் கொண்டு வருகிறது.

ஹிரோஷிமா தினத்தின் முக்கியத்துவம்:

இந்த அணுகுண்டு தாக்குதல்களால் ஜப்பான் நாட்டுப் படைகள் சரணடை வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, இரண்டாம் உலகப் போரின் முடிவைக் குறித்தது.

நாடுகளிடையே அமைதியை மேம்படுத்தவும் அணு ஆயுதங்களின் பேரழிவு விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஹிரோஷிமா தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச உறவுகளில் போருக்கு எதிரான மற்றும் அணுசக்தி எதிர்ப்பு கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் இந்த நாள் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
Tata Upcoming Cars 2026: எண்ட்ரி லெவல் தொடங்கி ஃப்ளாக்‌ஷிப் வரை - எஸ்யுவி டூ EV - 2026ல் டாடாவின் புதிய கார்கள்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Lemon Pepper Chicken: வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Embed widget