மேலும் அறிய

Who Warns On Cholera: கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகளை மிரட்டும் காலரா.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காலநிலை மாற்றத்தின் காரணமாக உலகம் முழுவதும் 30 நாடுகளில் காலரா பாதிப்பு அதிகரித்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கி உலகையே அச்சுறுத்திய கொரோனா பாதிப்பிலிருந்து, மெல்ல மெல்ல உலக நாடுகள் இப்போது தான் மீண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர முடியாமல் இன்றளவும் பல நாடுகள் தவித்து வருகின்றன.  அந்த வகையில் கொரோனா தொற்று அளித்த மோசமான அனுபவத்தின் வடுக்கள் மறைவதற்கு முன்பாகவே, உலக நாடுகளில் மீண்டுமொரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை, பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை:

அந்த அறிக்கையின்படி, பருவநிலை மாற்றம் எதிரொலியாக 30 நாடுகளில் காலரா பரவல் ஏற்பட்டு உள்ளது. உலக அளவில் காலரா பரவலானது, கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 20-க்கும் குறைவான நாடுகளில் உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால், நடப்பாண்டில் காலரா நோயானது, 30 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.  பெரிய அளவிலான வெள்ளம், முன்னெப்போதும் இல்லாத வகையிலான பருவமழை மற்றும் தொடர்ச்சியான சூறாவளி புயல்கள் ஆகியவற்றுடன் இந்த தொற்றும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், ஹைதி, லெபனான், மாளவி மற்றும் சிரியா போன்ற நாடுகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு உள்ளன. பாகிஸ்தானில் நடப்பு கோடை கால பெருவெள்ளத்திற்கு பின்பு, 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

”லா நினா” பருவகால பாதிப்பு:

உலகளவில் நிலவும் தற்போதைய சூழல் வரும் 2023-ம் ஆண்டில் அதிவேகத்தில் மாற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. காரணம்,  தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக லா நினா என்ற பருவகால பாதிப்பானது தொடரும் என வானியல் ஆய்வு மையத்தினர் கணித்து உள்ளனர். அதனால், 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் என்ன நிலை காணப்பட்டதோ, அதே நிலையை மீண்டும் நாம் காணக் கூடும்.  லா நினாவுடன் கூடிய இயற்கை பேரிடரால், வறட்சி மற்றும் மழை மற்றும் சூறாவளி புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போன்றவை ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றில், கிழக்கு மற்றும் தென்பகுதி ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் ஆசிய நாடுகள் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும் எச்சரித்து உள்ளது.

1.43 லட்சம் பேர் உயிரிழப்பு:

கெட்டுப் போன உணவு அல்லது குடிநீர் ஆகியவற்றை எடுத்து கொள்வதனால், பரவ கூடிய இந்த வயிற்றுப்போக்கு பாதிப்புகளால் ஏற்படக் கூடிய காலரா தொற்றானது ஆண்டுக்கு, 40 லட்சம் பேரை பாதிக்கிறது.  இதனால், 21 ஆயிரம் முதல் 1.43 லட்சம் பேர் வரை உலகம் முழுவதும் உயிரிழக்கின்றனர் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. லேசான அறிகுறிகளே காணப்பட்டாலும், உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது, உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆபத்தானதாக உள்ள காலரா:

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் காலரா மற்றும் தொற்று வியாதிகளுக்கான குழு தலைவர் பிலிப் பார்போசா ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  நடப்பு சூழ்நிலையானது முற்றிலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் வேறுபட்டு உள்ளது. கடந்த ஆண்டுகளில் நாம் பார்க்காத வகையில், காலரா பரவல் அதிகம் மட்டுமின்றி, அதிக கொடியதாகவும் உள்ளது. காலரா பரவல் மற்றும் மரண விகிதங்கள் பல ஆண்டுகளாக பெருமளவில் குறைந்து வந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் காலரா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. உலக அளவில் காலரா பரவுவதற்கு, அனைத்து வகையான காரணிகளும் அதன் பங்கிற்கு ஏற்ப பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளன. பருவநிலை மாற்றம் எதிரொலியாக சர்வதேச அளவில் காலரா பரவல் அதிகரித்து காணப்படுகிறது என பார்போசா கூறினார்.

தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை:

காலரா தடுப்பூசிகளின் உலகளாவிய கையிருப்பு தற்போது காலியாக உள்ளது அல்லது மிகவும் குறைவாக உள்ளது என எச்சரித்துள்ளார். பல நாடுகள் தங்களிடம் தடுப்பூசிகள் கோரி வரும் நிலையில், எங்களிடம் கையிருப்பு இல்லை. இது மோசமான சூழல் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget