மேலும் அறிய

Congo Flood : காங்கோவில் பெய்த கனமழை...200 பேர் உயிரிழந்த சோகம்...100 பேர் மாயம்...!

கிழக்கு காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Congo Flood : கிழக்கு காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனமழை

ஆப்பிரிக்க கண்டத்தில் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு தான் காங்கோ. காங்கோவில் அதிபர் பெலிக்ஸ் தெஷிக்சேடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், கிழக்கு காங்கோவில்  திடீரென இரவு முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள ஏரிகள், ஆறுகள் நிரம்பி நீர் பெருக்கெடுத்து ஓடின. இதனால் வெள்ளத்தில் சில கிராமங்கள் முழ்கியதோடு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சாலைகள், பள்ளிகள், கட்டடங்கள், மருத்துவமனைகள் என அனைத்துமே வெள்ளத்தில அடித்து செல்லப்பட்டது. மேலும், இதில் குழந்தைகள் உட்பட பலரும் அடித்து செல்லப்பட்டனர். 

200 பேர் உயிரிழப்பு

இந்நிலையில், கிழக்கு காங்கோவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 200 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காணாமல் போன 100க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். சிலர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி காயமடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிசைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்பு பணிகள் நடந்துக் கொண்டு இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெள்ளப்பெருக்கு காங்கோவில் நான்கு முறை ஏற்பட்டது. மத்திய ஆப்பிரிக்காவில் கனமழை பெய்து வந்தால் இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுகிறது.  கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் காரணமாக ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் கனமழை பெய்த வண்ணமே உள்ளது. கடந்த மாதம் தென் கிவுவின் அண்டை மாகாணமான வடக்கு கிவுவில் கனமழையால் சுமார் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்.

தற்போது காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 200 பேர் உயிரிழந்தாகவும் மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை (திங்கட்கிழமை) தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுவதாகவும்" தெரிவித்துள்ளார்.

மற்றொரு சம்பவம்

சமீபத்தில் கடுமையான வறட்சி நிலவும் நாடுகளுள் ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா ஒன்றாகும். இங்க சமீபத்தில் பெய்த தொடர் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள நதிகளின் நீர்வரத்து அதிகரித்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இந்த வெள்ளப்பெருக்கால் சுமார் 21-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"சாத்தான் வேதம் ஒதுவது போல் இருக்கு" ஸ்டாலினை கலாய்த்த இபிஎஸ்
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?  அப்செட்டில் துரைமுருகன்  சமாதானம் செய்யும் ஸ்டாலின்
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு? அப்செட்டில் துரைமுருகன் சமாதானம் செய்யும் ஸ்டாலின்
பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayakumar vs EPS : ’’பழசை மறந்துட்டீங்களா EPS?'' Silent mode-ல் ஜெயக்குமார் வெளியான பகீர் பின்னணி
Udhayanidhi vs Kanimozhi : துணை பொதுச்செயலாளர் உதயநிதி !கனிமொழியை வைத்து ஸ்கெட்ச்ஸ்டாலின் MASTERMIND
கனிமொழிக்கு புதிய பதவி? அறிவாலயத்தில் தனி அலுவலகம்! ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்!
Union Minister Meena : மத்திய அமைச்சராகும் மீனா?வாக்கு கொடுத்த BIGSHOT திடீர் டெல்லி விசிட்
தவெகவினரை தாக்கிய திமுகவினர் உடனே CALL போட்ட விஜய்”எதுனாலும் நான் பாத்துக்குறேன்” DMK vs TVK Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சாத்தான் வேதம் ஒதுவது போல் இருக்கு" ஸ்டாலினை கலாய்த்த இபிஎஸ்
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?  அப்செட்டில் துரைமுருகன்  சமாதானம் செய்யும் ஸ்டாலின்
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு? அப்செட்டில் துரைமுருகன் சமாதானம் செய்யும் ஸ்டாலின்
பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
எங்களோடு War செய்யும் அளவுக்கு அதிமுக IT wing-க்கு தகுதியில்லை - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
எங்களோடு War செய்யும் அளவுக்கு அதிமுக IT wing-க்கு தகுதியில்லை - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
Coolie Song : ரஜினி , டி. ராஜேந்தர் , அனிருத் கலக்கும் சிகிட்டு பாடல் இதோ
Coolie Song : ரஜினி , டி. ராஜேந்தர் , அனிருத் கலக்கும் சிகிட்டு பாடல் இதோ
MR Vijayabhaskar : ’ EPS ஐ எதிர்த்து பேசினாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?’ கூட்டத்தில் நடந்தது என்ன..?
’ EPS ஐ எதிர்த்து பேசினாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்?’ கூட்டத்தில் நடந்தது என்ன..?
Ramadoss Vs Anbumani: “என்னோட இருக்கறவங்களுக்குத் தான் தேர்தல்ல சீட்“ - ராமதாஸ் அதிரடி - அப்போ அன்புமணியோட கதி.?!
“என்னோட இருக்கறவங்களுக்குத் தான் தேர்தல்ல சீட்“ - ராமதாஸ் அதிரடி - அப்போ அன்புமணியோட கதி.?!
Embed widget