மேலும் அறிய

இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகத்தை அடைந்த சீனாவின் உளவுக்கப்பல்.. என்ன நடக்கிறது?

ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் வரும் 22ம் திகதி வரை நிறுத்தப்பட்டிருக்கும் சீனாவின் ஆய்வு கப்பல்.

சர்ச்சைக்குரிய சீனாவிற்கு சொந்தமான யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இன்று முதல் 22 ஆம் திகதி வரை இந்த கப்பல் நங்கூரமிட்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த சீனக் கப்பல் பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.யுவான் வாங் 5 தற்போது சீன இராணுவத்தின் (பிஎல்ஏ) மூலோபாய ஆதரவுப் படையின் செயற்கைக்கோள்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் நான்கு கப்பல்களில் ஒன்று என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு இலங்கை குத்தகைக்கு வழங்கிய ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான உத்தேச விஜயம், புதுதில்லியில் குழப்பம் ஏற்பட்டது.

எனினும் இலங்கையில் சீனா கப்பல் தங்கி இருக்கும் காலங்களில் எந்த ஒரு ஆய்வு நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என சீனா உறுதியளித்ததின் அடிப்படையிலேயே ஹம்பாந்தோட்டை துறை முகத்துக்கு வர அனுமதி வழங்கியதாக இலங்கை அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சீனாவில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்ட ஆய்வுக் கப்பல், இந்திய கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு அச்சம் காரணமாக இலங்கை அரசு அந்த பயணத்தை பிற்போட கோரியதால் சர்வதேச கடலில் அக்கப்பல் நிறுத்தப்பட்டது.கடந்த 11ஆம் தேதி இலங்கைக்கு வந்த சீனாவின் ஆய்வுக் கப்பல், இலங்கை அரசு அக்கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் சீனா மற்றும் இலங்கைக் கிடையில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற பின்பு அக்கப்பல் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.சீன ஆய்வுக்கு கப்பலின் இலங்கை வருகை குறித்து ,இந்தியா தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய பெருங்கடல் பகுதிக்கு இந்த கப்பல் வருகையால் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், யுவான் வாங் 5 கப்பல் இலங்கை வருவது குறித்து சீனா கருத்து தெரிவித்தது.

சட்டப்பூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் வெளி தரப்பினர் தலையிட மாட்டார்கள் என எதிர்பார்ப்பதாக பகிரங்கமாக தெரிவித்திருந்தது.
பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு வலுத்த நிலையில், யுவான் வாங் 5 கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டது. இதேவேளை சீனாவின் இந்த கப்பல் ஆராய்ச்சி கப்பல் என அடையாளப்படுத்தப்பட்டாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பெலஸ்டி ஏவுகணை மற்றும் செய்திமதிப்புகளை ஏவுதல், கண்காணித்தல் ஆகிய வசதிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதன் காரணமாகவே பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்புவதாக கூறப்படுகிறது. யுவான் வாங்-5 என்ற சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை வருவதற்கு, கடந்த மாதம் 12 ஆம் தேதி கொழும்பில் சீன தூதரகத்திற்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டது.

சீன கண்காணிப்பு கப்பல் இன்று இலங்கை வந்துள்ள நிலையில் நேற்று இந்தியாவால் கடல்சார் கண்காணிப்பு டார்னியர் விமானம் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது இதன் நடவடிக்கைகள் குறித்து இந்தியா அவதானத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Europe Heat Wave: இந்த டீல் நல்லா இருக்கே.! வெப்ப அலை வீசும் ஐரோப்பாவிற்கு ஈரான் கூலான ஆஃபர்; அது என்ன தெரியுமா.?
இந்த டீல் நல்லா இருக்கே.! வெப்ப அலை வீசும் ஐரோப்பாவிற்கு ஈரான் கூலான ஆஃபர்; அது என்ன தெரியுமா.?
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Pakistan Minister Warning: “கைகளை வெட்டுவோம்“; இந்தியாவிற்கு பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்.! எதற்காக தெரியுமா.?
“கைகளை வெட்டுவோம்“; இந்தியாவிற்கு பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்.! எதற்காக தெரியுமா.?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Embed widget