மேலும் அறிய

1000 ஆண்டுகள் பழமையான மாயன் படகு கண்டுபிடிப்பு... நீருக்குள் அப்படியே இருந்த ஆச்சரியம்!!

ஸ்பெயின் இப்பகுதியை கைப்பற்றுவதற்கு முன்பு மாயன் நாகரிகம் செழித்து வளர்ந்தது.

தென் மெக்சிகோவில் 1,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் மரத்தால் ஆன மாயன் படகு ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாயா ரயில் எனப்படும் புதிய சுற்றுலா ரயில் பாதையின் கட்டுமானப் பணியின் போது இந்த அரிய கண்டுபிடிப்பு கிடைத்தது. படகு, நீரினுள் சிதிலமடையாமல் அப்படியே இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களாக கருதப்படும் மாயன் சமுதாய மக்களின் நாகரிகத்தை பிரதிபலிக்கும் கலைப் பொருட்கள், அவர்கள் பயன்படுத்திய ஜாடிகள் மற்றும் குகை ஓவியங்கள் ஆகியவை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அவ்வபோது கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மாயன் படகு ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  

5 அடிக்கு மேல் (1.6 மீ) அளவு கொண்ட இந்தப் படகு, பாழடைந்த மாயன் நகரான சிச்சென் இட்சாவின்அருகில் உள்ள ஒரு நன்னீர் குளத்தில் மூழ்கி, கிட்டத்தட்ட சிதிலமடையாமல் அப்படியே காணப்பட்டது. இந்நிலையில் 
 இது தண்ணீரை பிரித்தெடுக்க அல்லது சடங்கு செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று மெக்ஸிகோவின் பழங்கால நிறுவனம் (இனா) கூறுகிறது.

ஸ்பெயின் இப்பகுதியை கைப்பற்றுவதற்கு முன்பு மாயன் நாகரிகம் செழித்து வளர்ந்தது. அவர்களின் காலத்தில், மாயன்கள் இப்போதைய தெற்கு மெக்சிகோ, குவாத்தமாலா, பெலிஸ் மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய இடங்களில் பெரும் பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ல இந்தப் படகு மாயன் நாகரிகத்தின் பொற்காலத்தின் முடிவில், கி.பி 830-950 க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என தேதியிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்தான், மாயன் நாகரிகம் ஒரு பெரிய அரசியல் சரிவை சந்தித்தது.

மாயா ரயில் எனப்படும் புதிய சுற்றுலா ரயில் பாதையின் கட்டுமானப் பணியின் போது இந்த அரிய கண்டுபிடிப்பு கிடைத்தது. கரீபியன் பகுதிகளை புராதன தொல்பொருள் தளங்களுடன் இணைக்கும் வகையில் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் அறிவித்த சுற்றுலாத் திட்டமான மாயா ரயில்களுக்கான பணிகளை மேற்கொண்ட போது இது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, குவாத்தமாலா மற்றும் பெலிஸில் இந்தப் படகுகளின் துண்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன.
இந்நிலையில்  இந்தப் படகு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இதன் முப்பரிமாண மாதிரி உருவாக்கப்படும் என்றும் பிரதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவருக்கு அரிவாள் வெட்டு! பரபரப்பு
சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவருக்கு அரிவாள் வெட்டு! பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவருக்கு அரிவாள் வெட்டு! பரபரப்பு
சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவருக்கு அரிவாள் வெட்டு! பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Breaking News LIVE, July 5:பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி
Breaking News LIVE, July 5: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget