மேலும் அறிய

கோவை - தூத்துக்குடி இடையே லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

தூத்துக்குடியில் இருந்து கோவை செல்லும் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக வான்வழி, கடல் வழி, சாலை வழி, ரயில் வழி ஆகிய நான்கு வகையான போக்குவரத்து வசதியைக் கொண்ட துறைமுக நகரமான தூத்துக்குடி தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வருகிறது. ஆனால், முன்னேற்றத்துக்கு ஏற்ப போதிய ரயில் வசதி இல்லை என்ற குறைபாடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து தினமும் சென்னை மற்றும் பெங்களூருக்கு மட்டுமே தலா ஒரு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, தூத்துக்குடி- திருநெல்வேலி இடையே ஒரு பயணிகள் ரயிலும், தூத்துக்குடி- ஓகா இடையே வாராந்திர ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. வர்த்தக நகரங்களான தூத்துக்குடியையும், கோவையையும் இணைக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு தூத்துக்குடி- கோவை இடையே ஒரு லிங்க் ரயில் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.


கோவை - தூத்துக்குடி இடையே லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

நாகர்கோவில்- கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் 7 பெட்டிகள் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டுச் சென்று மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து அந்த ரயிலில் பிணைக்கப்படும். 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 7 பெட்டிகள் பிணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் மூலம் தினமும் 600 பேர் வரை பயன்பெற்று வந்தனர். கொரோனா பரவல் காலத்தில் ரத்து செய்யப்பட்ட இந்த ரயில் தற்போது (ஜூலை 2 முதல்) இணைப்பு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.


கோவை - தூத்துக்குடி இடையே லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டுச் சென்று மணியாச்சி ரயில் நிலையத்தில் காத்திருந்து நாகர்கோவிலில் இருந்து வரும் விரைவு ரயிலில் இரவு 11.30 மணிக்கு ஏறவேண்டும். மறுவழித்தடத்தில்  கோவையில் இருந்து - தூத்துக்குடிக்கு வரும் பயணிகள் அதிகாலை 2.40 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்கி தூத்துக்குடி வரும் ரயிலுக்கு மாற வேண்டும். இதனால் பயணிகள் இரவு முழுவதும் தூங்காமல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி-கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்ட பொழுது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் தினமும் ஏறத்தாழ 300 பேர் வரை பயணம் செய்தனர். ஆனால், தற்போது அதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் நலச்சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.


கோவை - தூத்துக்குடி இடையே லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலர் பிரம்மநாயகம் கூறும் போது, கேரளத்தில் லிங்க் ரயில்களாக இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது தனி ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன.அதேபோல, தூத்துக்குடி- கோவை இடையே இரவு நேரத்தில் தனி ரயில் இயக்கப்பட வேண்டும். அல்லது தனி ரயில் இயக்கப்படும் வரை பழைய மாதிரி தூத்துக்குடி- கோவை இடையே பிணைப்பு ரயிலை இயக்கினால் மட்டுமே மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, தூத்துக்குடியில் இருந்து கரூர், திருப்பூர், ஈரோடு , கோவைக்கு செல்ல ஒரேயொரு ரயில் இருந்தது. அதற்கும் தூத்துக்குடியில் இருந்து லிங்க் ரயில் மூலம் மணியாச்சியில் காத்திருந்து சென்றுக்கொண்டிருந்தோம். அதை நிறுத்திட்டாங்க, பஸ்ஸில் போயிட்டு இருந்தோம், இப்போ  மீண்டும் அந்த ரயிலை இயக்குறாங்க, ஆனாலும் பிரயோஜனம் இல்லை, விடிய விடிய கண்விழிந்து மணியாச்சி வந்ததும் இறங்கி தூத்துக்குடி போகும் ரயிலை பிடித்து நடுஇரவில் ஏறி வரும் நிலை இருக்கு, இதை முன்பு போன்று இணைப்பு ரயிலாக விட்டால் நன்றாக இருக்கும். எங்க ஊர்ல கப்பல் இருக்கு, விமானம் இருக்கு. ஆனால் கூடுதலா ரயில்தான் இல்லை எனக்கூறும் இவர்கள் ரயில்வே நிர்வாகம் கொஞ்சம் கருணை காட்டனும் என்கின்றனர்.


கோவை - தூத்துக்குடி இடையே லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கோவை செல்லும் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் எழுதி உள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண


 

தலைப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget