மேலும் அறிய

கோவை - தூத்துக்குடி இடையே லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

தூத்துக்குடியில் இருந்து கோவை செல்லும் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக வான்வழி, கடல் வழி, சாலை வழி, ரயில் வழி ஆகிய நான்கு வகையான போக்குவரத்து வசதியைக் கொண்ட துறைமுக நகரமான தூத்துக்குடி தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வருகிறது. ஆனால், முன்னேற்றத்துக்கு ஏற்ப போதிய ரயில் வசதி இல்லை என்ற குறைபாடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து தினமும் சென்னை மற்றும் பெங்களூருக்கு மட்டுமே தலா ஒரு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, தூத்துக்குடி- திருநெல்வேலி இடையே ஒரு பயணிகள் ரயிலும், தூத்துக்குடி- ஓகா இடையே வாராந்திர ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. வர்த்தக நகரங்களான தூத்துக்குடியையும், கோவையையும் இணைக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு தூத்துக்குடி- கோவை இடையே ஒரு லிங்க் ரயில் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.


கோவை - தூத்துக்குடி இடையே லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

நாகர்கோவில்- கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் 7 பெட்டிகள் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டுச் சென்று மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து அந்த ரயிலில் பிணைக்கப்படும். 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 7 பெட்டிகள் பிணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் மூலம் தினமும் 600 பேர் வரை பயன்பெற்று வந்தனர். கொரோனா பரவல் காலத்தில் ரத்து செய்யப்பட்ட இந்த ரயில் தற்போது (ஜூலை 2 முதல்) இணைப்பு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.


கோவை - தூத்துக்குடி இடையே லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டுச் சென்று மணியாச்சி ரயில் நிலையத்தில் காத்திருந்து நாகர்கோவிலில் இருந்து வரும் விரைவு ரயிலில் இரவு 11.30 மணிக்கு ஏறவேண்டும். மறுவழித்தடத்தில்  கோவையில் இருந்து - தூத்துக்குடிக்கு வரும் பயணிகள் அதிகாலை 2.40 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்கி தூத்துக்குடி வரும் ரயிலுக்கு மாற வேண்டும். இதனால் பயணிகள் இரவு முழுவதும் தூங்காமல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி-கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்ட பொழுது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் தினமும் ஏறத்தாழ 300 பேர் வரை பயணம் செய்தனர். ஆனால், தற்போது அதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் நலச்சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.


கோவை - தூத்துக்குடி இடையே லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலர் பிரம்மநாயகம் கூறும் போது, கேரளத்தில் லிங்க் ரயில்களாக இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது தனி ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன.அதேபோல, தூத்துக்குடி- கோவை இடையே இரவு நேரத்தில் தனி ரயில் இயக்கப்பட வேண்டும். அல்லது தனி ரயில் இயக்கப்படும் வரை பழைய மாதிரி தூத்துக்குடி- கோவை இடையே பிணைப்பு ரயிலை இயக்கினால் மட்டுமே மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, தூத்துக்குடியில் இருந்து கரூர், திருப்பூர், ஈரோடு , கோவைக்கு செல்ல ஒரேயொரு ரயில் இருந்தது. அதற்கும் தூத்துக்குடியில் இருந்து லிங்க் ரயில் மூலம் மணியாச்சியில் காத்திருந்து சென்றுக்கொண்டிருந்தோம். அதை நிறுத்திட்டாங்க, பஸ்ஸில் போயிட்டு இருந்தோம், இப்போ  மீண்டும் அந்த ரயிலை இயக்குறாங்க, ஆனாலும் பிரயோஜனம் இல்லை, விடிய விடிய கண்விழிந்து மணியாச்சி வந்ததும் இறங்கி தூத்துக்குடி போகும் ரயிலை பிடித்து நடுஇரவில் ஏறி வரும் நிலை இருக்கு, இதை முன்பு போன்று இணைப்பு ரயிலாக விட்டால் நன்றாக இருக்கும். எங்க ஊர்ல கப்பல் இருக்கு, விமானம் இருக்கு. ஆனால் கூடுதலா ரயில்தான் இல்லை எனக்கூறும் இவர்கள் ரயில்வே நிர்வாகம் கொஞ்சம் கருணை காட்டனும் என்கின்றனர்.


கோவை - தூத்துக்குடி இடையே லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கோவை செல்லும் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் எழுதி உள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண


 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனுடன் உல்லாசம் !! கூலி தொழிலாளியால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கள்ளக் காதலனுடன் உல்லாசம் !! கூலி தொழிலாளியால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Madurai Hc ; நியோமேக்ஸ் மோசடி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் செயல்பட்ட அரசுக்கு நீதிபதி பாராட்டு !
Madurai Hc ; நியோமேக்ஸ் மோசடி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் செயல்பட்ட அரசுக்கு நீதிபதி பாராட்டு !
மதுரையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமி.. ஆஹா மீண்டும் புதிதாய் கிடைத்த பொக்கிஷம் !
மதுரையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமி.. ஆஹா மீண்டும் புதிதாய் கிடைத்த பொக்கிஷம் !
பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு !! பலத்த சத்தத்துடன் விழுந்த பாட்டில்கள் !! நடந்தது என்ன ?
பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு !! பலத்த சத்தத்துடன் விழுந்த பாட்டில்கள் !! நடந்தது என்ன ?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
Chief Minister Stalin 14 announcements : 7 லட்சம் வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
7 லட்சம் புதிய வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
Embed widget