மேலும் அறிய

செங்கோட்டையில் பறக்கும் தேசியக்கொடி நெய்யப்பட்டது இங்குதான்.. குடியாத்தம் முதல் செங்கோட்டை வரை.. கொடியின் கதை..!

பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றவுடன் வெங்கடாசலத்திற்கும், ஃபாப்பிரிக்ஸ் நிறுவனத்துக்கும் ஜவஹர்லால் நேருவின் தனிச்செயலாளர் தர்லோக் சிங் என்பவர் மூலம் நன்றி தெரிவித்து கடிதமும் அனுப்பியிருந்தார்

இந்தியச் சுதந்திரத்துக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையிலிருந்து தொடங்கியது என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் , சுதந்திரம் பெற்றவுடன் டெல்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி குடியாத்தத்தில்  தயாரித்தது என்ற வரலாற்று உண்மை நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கச் சாத்தியம் இல்லை. சுதந்திர இந்தியக் கனவு நனவாகும் நிலையில், செங்கோட்டையில் ஏற்றுவதற்கான முதல் தேசியக் கொடியை, அந்தக் காலத்திலேயே கைத்தறியில் புகழ்பெற்று விளங்கிய குடியாத்தம் நகரில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
 

செங்கோட்டையில் பறக்கும் தேசியக்கொடி நெய்யப்பட்டது இங்குதான்.. குடியாத்தம் முதல் செங்கோட்டை வரை.. கொடியின் கதை..!
 
இதையடுத்து, மத்திய அரசு செயலாளர், அதிகாரிகள் குடியாத்தம்  நகருக்கு வந்தார் குடியாத்தத்தில் 1932-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள் நகராட்சித் தலைவராக இருந்தவர் குடியாத்தம் பிச்சனூர் பேட்டையைச் சேர்ந்த ஆர். வெங்கடாச்சலம்  இவர் இந்துஸ்தான் ஃபாப்பிரிக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் மூலம் மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான, பிங்கலி வெங்கையா (பிங்கலி வெங்கையா தான் இந்தியத் தேசியக் கொடியை வடிவமைத்தவர் ) வடிவமைத்த தேசியக் கொடியைக் கைத்தறியில் தயாரிக்கும் பணி பிச்சனூர் பேட்டை வெங்கடாச்சலத்திடம் ஒப்படைக்கப்பட்டது .
 

செங்கோட்டையில் பறக்கும் தேசியக்கொடி நெய்யப்பட்டது இங்குதான்.. குடியாத்தம் முதல் செங்கோட்டை வரை.. கொடியின் கதை..!
 
 12 அடி அகலம், 18 அடி நீளத்தில் மொத்தம் 3 கொடிகள் கம்பீரமாக உருவாக்கப்பட்டன. அந்த தேசியக்கொடிகளுள் ஒன்றுதான் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட்  15-ஆம் தேதி சுதந்திரம் பெற்றவுடன் டில்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது. இதே கொடியில் ஒன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் ஏற்றப்பட்டது. இதில் செயின்ட் கோட்டையில் ஏற்றப்பட்ட கொடி கோட்டை வளாகத்தில் உள்ள தொல்லியல் ஆய்வுத் துறை அருங்காட்சியகத்தின் இரண்டாம் தளத்தின் குளிரூட்டப்பட்ட அறைக்குள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
 
இதுதவிர, அன்று நாடு முழுவதும் ஏற்றுவதற்காக 10 லட்சம் கொடிகள் குடியாத்தம் வெங்கடாசலத்தின் நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதற்காக, குடியாத்தம் நெசவாளர்கள் மட்டுமின்றி, இதர மக்களும், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்களும் உறுதுணையாக இருந்தனர்.
 

செங்கோட்டையில் பறக்கும் தேசியக்கொடி நெய்யப்பட்டது இங்குதான்.. குடியாத்தம் முதல் செங்கோட்டை வரை.. கொடியின் கதை..!
 
வீதிகள், கிராமங்கள், மைதானங்களில் கொடிகள் தயாரிப்புக்கான பணிகள் தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்றன. குறைந்த நேரத்திலே பல ஆயிரக்கணக்கான தேசியக்  கொடிகள் தயாரிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்ட கொடிகள் தான் அன்று இந்தியா முழுவதும் பட்டொளி வீசிப் பறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, முன்னாள் முதல்வர் பக்தவச்சலம்  போன்ற பல தேசத் தலைவர்கள் அவர்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர் .
 

செங்கோட்டையில் பறக்கும் தேசியக்கொடி நெய்யப்பட்டது இங்குதான்.. குடியாத்தம் முதல் செங்கோட்டை வரை.. கொடியின் கதை..!
 
இதையடுத்து, பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றவுடன் வெங்கடாசலத்திற்கும், அவருடைய  இந்துஸ்தான் பாப்பிரிக்ஸ் நிறுவனத்துக்கும் ஜவஹர்லால் நேருவின் தனிச்செயலாளர் தர்லோக் சிங்  என்பவர் மூலமும்  மற்றும் சென்னை ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய  கொடிக்காக , சென்னை ஜார்ஜ் கோட்டையிலிருந்தும்  தனித்தனி நன்றி  கடிதம் வெங்கடாசலத்திற்கு அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Embed widget