மேலும் அறிய

Unnao Case: "பொண்ணு கல்யாணத்துக்கு போகணும் அய்யா!.." - உன்னாவ் வன்கொடுமை வழக்கு.. ஜாமின் கேட்கும் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ

உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாஜக முன்னாள் எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார், மகளின் திருமணத்திற்காக ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு உத்தர பிரதேசத்தை சேர்ந்த 17 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். தொடர்ந்து அவரை கொலை செய்யும் முயற்சியும் அரங்கேறியது. தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த வழக்கில்,  அம்மாநில சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான குல்தீப் சிங் செங்கர் முக்கிய குற்றவாளியாக நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்டார்.  தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்,  பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணமடைந்த மற்றொரு வழக்கில், 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. 

ஜாமின் கோரி மனு:

இந்நிலையில், குல்தீப் சிங் செங்கார், தனது மகளின் திருமணத்திற்காக இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பிப்ரவரி 8, 2023-ல் தனது மகளின் திருமணம் நடைபெற உள்ளதாகவும், வரும் ஜனவரி மாதமே திருமண சடங்குகள் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக, இரண்டு மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் குல்தீப் சிங் செங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

விசாரணை ஒத்திவைப்பு:

இந்த மனு நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், அந்த மனுவை தங்களில் ஒருவரான தல்வந்த் சிங் முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடவும், வியாழக்கிழமை ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

உன்னாவ் விபத்து வழக்கு:  

முன்னதாக, லக்னோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது தாயார், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் காரில் சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளானார். இந்த கோர விபத்தில், உறவுக்கார பெண் மற்றும் வழக்கறிஞர் கொல்லப்பட்டனர். இருப்பினும், வழக்கில் தொடர்புடைய  இளம்பெண்ணும் அவரது தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினர்.  இந்த விபத்து பாதிக்கப்பட்ட பெண்ணை கொல்வதற்கு நடந்தப்பட்ட சதி செயல் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு  செய்ததது.

இந்த விபத்து சம்பத்துவத்துக்குப் பிறகு, உயிர் பிழைத்த இளம்பெண் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், பாலியல் வன்முறை உள்ளிட்ட 5 வழக்குகளையும் லக்னோ நீதிமன்றத்தில் இருந்து டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  வழக்கின் விசாரணை முடிவில்,  குல்தீப் சிங் செங்கரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், அவருக்கு அதிகபட்சத் தண்டனையாக ஆயுள் தண்டனை விதித்தது.  அப்பெண்ணின் தந்தை மரணமடைந்த மற்றொரு வழக்கில், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"திருமணம் மீறிய உறவு" தந்தையிடம் புகார் கூறியதால் ஆத்திரம் ! பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்
" ஒன்னும் ஆகாது " பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி அலுவலக உதவியாளர்
TVK Govt. Vs Nainar Nagendran: “காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
“காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
TVK Govt. Vs Nainar Nagendran: “காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
“காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Minister Sarathkumar: ‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
EV Vs CNG Value: EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
Upcoming Honda Cars: ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
Embed widget