மேலும் அறிய

வரதட்சணை கொடுமையால் திருமணமான 8 மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

’’விஜயகுமாரின் தாயும் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து வேறு ஒரு திருமணத்தை தனது மகனுக்கு செய்து வைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது’’

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜர், ராஜலட்சுமி தம்பதி இவரது மகள் சினேகா (25) பட்டதாரி ஆவார். இவர் புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த அறிவழகன்,  சகாயராணி தம்பதியின் மகன் விஜயகுமார் (30) தனியார் வங்கியில் வேலை பார்த்து  வருகிறார்.  விஜயகுமார் மற்றும் சினேகா இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்து இருவரும் தாங்கள் காதல் விவகாரத்தை தங்கள் வீடுகளில் தெரிவித்தனர். தொடக்கத்தில் இரு வீட்டிலிலும் இதற்கு எதிர்ப்புகள் இருந்த நிலையில் சில மாதங்கள் கடந்த பிறகு இருவீட்டார்  சம்மதத்துடன் கடந்த 8 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 18 பவுன் நகையும், ஒரு லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களையும் வழங்கியுள்ளனர். இந்நிலையில் விஜயகுமார் மற்றும் சினேகா தம்பதியினர் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் தெருவில்   இருவரும் வசித்துவந்தனர். 


வரதட்சணை கொடுமையால் திருமணமான 8 மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில் சில மாதங்கள் கடந்த பிறகு இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. நாட்கள் கடந்த பிறகு பிரச்சனையும் பெரிதாக ஆனது. தினமும் இரவில் விஜயகுமார், சினேகாவிடம் தொடர் வாக்குவாதம் செய்து பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் சினேகா அவரது அப்பா வீட்டிற்கு சென்று விடுவதாக கூறபடுகிறது. மேலும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் விஜயகுமார் வீட்டில் அவரது பெற்றோர்கள் சினேகாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து திருமணம் நடந்தி சில மாதங்களில் விஜயகுமார் தனது மனைவி சினேகாவிடம் வரதட்சணை நகை குறைவாக உள்ளதாகவும் புதியதாக தொழில் தொடங்குவதற்காக நகையும், பணமும்  கேட்டு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  மேலும் விஜயகுமாரின் தாயும் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து வேறு ஒரு திருமணத்தை தனது மகனுக்கு செய்து வைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


வரதட்சணை கொடுமையால் திருமணமான 8 மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில் இன்று காலை கணவர் விஜயகுமார் மனைவி சினேகாவிடம் வீடியோ கால் மூலம் பேசி மீண்டும் நகை கேட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சினேகா இன்று காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Vs Aadhav Arjuna: அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Vs Aadhav Arjuna: அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
தந்தை, மகன் மோதல்... எனக்கு ரொம்ப மனவேதனை இருக்கு... கண்கலங்கிய ஜி.கே.மணி
தந்தை, மகன் மோதல்... எனக்கு ரொம்ப மனவேதனை இருக்கு... கண்கலங்கிய ஜி.கே.மணி
பாமகவில் யாருடைய அறிவிப்பு செல்லும்? ராமதாசுக்கு என்ன அதிகாரம்? கட்சி விதிகள் சொல்வதென்ன ? 
பாமகவில் யாருடைய அறிவிப்பு செல்லும்? ராமதாசுக்கு என்ன அதிகாரம்? கட்சி விதிகள் சொல்வதென்ன ? 
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
Embed widget