மேலும் அறிய

கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் களைகட்டியுள்ள ஆயுதபூஜை பண்டிகை

பூஜை பொருட்களை வாங்குவதற்காக கரூர் சந்தை வீதிகளில் மக்கள் குவிந்தனர்

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையையொட்டி சிறிய கடைகள் முதல் அனைத்து வகையான பெரும் தொழிற்சாலைகள் வரை ஆயுத பூஜை உற்சாகமாகக் கொண்டாடப்படுவதையொட்டி கரூரில் பூஜை பொருள்கள் விற்பனை களை கட்டியது.


கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் களைகட்டியுள்ள ஆயுதபூஜை பண்டிகை

காமராஜ் தினசரி மார்க்கெட்டில் வாழை இலை, பொரி, கடலை, கொய்யா பழம், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பழங்கள், சிறிய வாழை மரங்கள் ஆகியவை குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

வாழை மரங்கள் ரூ.50 முதல் ரூ.100 வரையும், வாழை இலை 10 இலைகள் கொண்ட அடுக்கு ரூ.50 வரையிலும் விற்கப்பட்டது. மேலும், கொய்யாப்பழம் கிலோ ரூ.80-க்கும், ஆப்பிள் கிலோ ரூ.150-க்கும், ஆரஞ்சு ரூ. 80க்கும், பூசணி ஒன்று ரூ.50  முதல் ரூ. 100 வரை விற்கப்பட்டது. காமராஜ் தினசரி மார்க்கெட், பேருந்து நிலைய காய்கறி சந்தை, உழவர் சந்தை பகுதிகளில் உள்ள சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது.


கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் களைகட்டியுள்ள ஆயுதபூஜை பண்டிகை

பல்வேறு பகுதிகளில் தற்காலிக கடைகள் உருவாக்கப்பட்டு வாழை மரம் மற்றும் பழங்கள் விற்கப்பட்டன. ஆயுத பூஜை ஒட்டி காமராஜர் சாலையில் பூஜை  பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், ஆயுத பூஜை தினத்தன்று சரஸ்வதி பூஜையும் நடைபெறுவதால் சரஸ்வதி சுவாமி படங்கள் ரூ.250 தொடங்கி ரூ.3000 வரை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் களைகட்டியுள்ள ஆயுதபூஜை பண்டிகை

ஆயுத பூஜையையொட்டி ரயில் நிலையம் அருகிலுள்ள பூ சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக விலை கணிசமாக உயா்ந்திருந்தது. இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2000,  அரளி கிலோ ரூ.600, முல்லைப்பூ கிலோ ரூ.1000-க்கும் விற்பனையாது. மேலும் சம்பங்கி கிலோ ரூ. 250-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.250-க்கும் விற்பனையானது. சந்தையில் மலா் மாலைகள் ரூ.200 முதல் ரூ.400 வரை விற்கப்பட்டன. கதம்ப மாலைகளும் ரூ.50 முதல் விற்கப்பட்டன. பூக்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்ததால் பூச்சந்தையில் கூட்டம் திரளாகக் காணப்பட்டது. 


கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் களைகட்டியுள்ள ஆயுதபூஜை பண்டிகை

ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவில்கள் பூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் பூக்களின் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் இருசக்கர பழுது பார்க்கும் கடை, டீக்கடை, பேக்கரி சலூன் கடை, அச்சகம், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ தொழிற்சங்கங்கள், தனியார் மற்றும் அரசு பேருந்து நிலையங்களில் இன்று மாலை முதல் சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் போடப்பட்டு வாழை மரம் கட்டி சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற உள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
Virat Kohli: கோலியின் படை.. ரன் மெஷினை கவுரவப்படுத்த ரசிகர்கள் ப்ளான்! சின்னசாமியில் காத்திருக்கும் சம்பவம் என்ன?
Virat Kohli: கோலியின் படை.. ரன் மெஷினை கவுரவப்படுத்த ரசிகர்கள் ப்ளான்! சின்னசாமியில் காத்திருக்கும் சம்பவம் என்ன?
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
Embed widget