மேலும் அறிய

கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் களைகட்டியுள்ள ஆயுதபூஜை பண்டிகை

பூஜை பொருட்களை வாங்குவதற்காக கரூர் சந்தை வீதிகளில் மக்கள் குவிந்தனர்

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையையொட்டி சிறிய கடைகள் முதல் அனைத்து வகையான பெரும் தொழிற்சாலைகள் வரை ஆயுத பூஜை உற்சாகமாகக் கொண்டாடப்படுவதையொட்டி கரூரில் பூஜை பொருள்கள் விற்பனை களை கட்டியது.


கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் களைகட்டியுள்ள ஆயுதபூஜை பண்டிகை

காமராஜ் தினசரி மார்க்கெட்டில் வாழை இலை, பொரி, கடலை, கொய்யா பழம், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பழங்கள், சிறிய வாழை மரங்கள் ஆகியவை குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

வாழை மரங்கள் ரூ.50 முதல் ரூ.100 வரையும், வாழை இலை 10 இலைகள் கொண்ட அடுக்கு ரூ.50 வரையிலும் விற்கப்பட்டது. மேலும், கொய்யாப்பழம் கிலோ ரூ.80-க்கும், ஆப்பிள் கிலோ ரூ.150-க்கும், ஆரஞ்சு ரூ. 80க்கும், பூசணி ஒன்று ரூ.50  முதல் ரூ. 100 வரை விற்கப்பட்டது. காமராஜ் தினசரி மார்க்கெட், பேருந்து நிலைய காய்கறி சந்தை, உழவர் சந்தை பகுதிகளில் உள்ள சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது.


கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் களைகட்டியுள்ள ஆயுதபூஜை பண்டிகை

பல்வேறு பகுதிகளில் தற்காலிக கடைகள் உருவாக்கப்பட்டு வாழை மரம் மற்றும் பழங்கள் விற்கப்பட்டன. ஆயுத பூஜை ஒட்டி காமராஜர் சாலையில் பூஜை  பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், ஆயுத பூஜை தினத்தன்று சரஸ்வதி பூஜையும் நடைபெறுவதால் சரஸ்வதி சுவாமி படங்கள் ரூ.250 தொடங்கி ரூ.3000 வரை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் களைகட்டியுள்ள ஆயுதபூஜை பண்டிகை

ஆயுத பூஜையையொட்டி ரயில் நிலையம் அருகிலுள்ள பூ சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக விலை கணிசமாக உயா்ந்திருந்தது. இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2000,  அரளி கிலோ ரூ.600, முல்லைப்பூ கிலோ ரூ.1000-க்கும் விற்பனையாது. மேலும் சம்பங்கி கிலோ ரூ. 250-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.250-க்கும் விற்பனையானது. சந்தையில் மலா் மாலைகள் ரூ.200 முதல் ரூ.400 வரை விற்கப்பட்டன. கதம்ப மாலைகளும் ரூ.50 முதல் விற்கப்பட்டன. பூக்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்ததால் பூச்சந்தையில் கூட்டம் திரளாகக் காணப்பட்டது. 


கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் களைகட்டியுள்ள ஆயுதபூஜை பண்டிகை

ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவில்கள் பூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் பூக்களின் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் இருசக்கர பழுது பார்க்கும் கடை, டீக்கடை, பேக்கரி சலூன் கடை, அச்சகம், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ தொழிற்சங்கங்கள், தனியார் மற்றும் அரசு பேருந்து நிலையங்களில் இன்று மாலை முதல் சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் போடப்பட்டு வாழை மரம் கட்டி சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற உள்ளது.

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Embed widget