மேலும் அறிய

கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மாலை தண்ணீர் திறப்பு

டெல்டா மாவட்டங்களின் சாகுபடிக்காக கல்லணை இன்று திறக்கப்படுகிறது இதனால், சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, வரலாற்றில் முதல் முறையாக மே 24 ஆம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார். இந்நிலையில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வந்தடைந்தது. இதனையடுத்த தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவை பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று மாலை தண்ணீர் திறக்கப்படுகிறது.

திறக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் இன்று மாலை கல்லணை இருந்து தண்ணீர் திறக்கபடும்  நிகழ்ச்சியில் நான்கு அமைச்சர்கள், ஐந்து மாவட்டகளின் சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில்  80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் அனைத்து வாய்க்கால்களும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 


கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மாலை தண்ணீர் திறப்பு

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் சிறப்பாக அமைந்ததுள்ளது. வடிகால் வாய்க்கால் கூட இந்த ஆண்டும் சிறப்பாக தூர்வாரப்பட்டு உள்ளது. இதனால், மழை காலங்களிலும் மழைநீர் தங்கள் விளை நிலங்களில் புகாது எனவும், மழைநீரால் பயிர்  பாதிக்காது எனவும்  நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  ஏற்கனவே வேளாண்மை உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே. பன்னீர்செல்வம்‌ வருமுன்‌ காப்போம்‌ என்ற அடிப்படையில்‌ ஜீன்‌ 12 ற்கு முன்கூட்டியே மேட்டூர்‌ அணையிலிருந்து தண்ணீர்‌ பாசனத்திற்காக திறக்கபட்டதால்  டெல்டா மாவட்டங்களில்‌ நெல்‌ நடவுப்பணி மேற்கொள்ள ஏதுவாக நல்‌ முளைப்புத்‌ திறன்‌ உள்ள நெல்‌ விதைகளை இருப்பு வைக்க வேண்டும்‌ என்றும்‌, விதை ஆய்வு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்‌ என்றும்‌ தெரிவித்தார்‌. 


கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மாலை தண்ணீர் திறப்பு

வேளாண்‌ பொறியியல்‌ துறை மூலம்‌ தூர்வாரப்படும்‌ வாய்க்கால்‌ பணிகளை துரிதப்படுத்தி கடைமடை வரை தண்ணீர்‌ சென்று சேர்வதை உறுதிபடுத்திட வேண்டும்‌. குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண்‌ இயந்திரங்களான டிராக்டர்‌, பவர்‌ டில்லர்‌, நிலச்சமன்படுத்தும்‌ கருவி மற்றும்‌ நடவு இயந்திரங்களை விவசாயிகள்‌ பயன்பாட்டிற்கு தயார்‌ நிலையில்‌ வைத்திருந்து தட்டுப்பாடின்றி வாடகைக்கு அளிப்பதுடன்‌ பிற மாவட்டங்களிலிருந்தும்‌ வரைவழைத்து வழங்கிட வேண்டும்‌ என்றும்‌, வட்டார அலுவலர்கள்‌ விவசாயிகளை சந்தித்து மண்ணாய்வு அடிப்படையில்‌  ஊக்குவிக்க வேண்டும்‌ என்றும்‌ தெரிவித்துள்ளார். மேலும் கடந்தாண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றனர். குறிப்பாக ஜீன் மாதத்திற்கு முன்பே தண்ணீர் வருவதால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என விவசாயிகள் தெரிவித்தனர், 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Embed widget