மேலும் அறிய

திருச்சியில் இரவு முழுவதும் தொடர் மின்வெட்டு; பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் இரவு முழுவதும் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அதிலும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். மேலும் கடந்த 2 மாதங்களாக வெயிலில் தாக்கம்  அதிகமாக இருப்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதன் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் முன் அறிவிப்பு இல்லாமல் மின்வெட்டு செய்தல், அறிவித்த நேரத்தை விட அதிகமாக நேரங்களில் மின்வெட்டு செய்தல் என்பது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இதுக்குறித்து பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்ச்சாட்டியுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூரில் உள்ள பல பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். காசுகடைத்தெருவில் நேற்று மதியம் 2 மணி முதல் இன்று காலை வரை மின் விநியோகம் இல்லை. ஒரே நாளில் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் இல்லை. மின்வெட்டு குறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இன்று காலை வரை மின்சாரம் வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் துறையூர்- திருச்சி பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருச்சியில் இரவு முழுவதும் தொடர் மின்வெட்டு; பொதுமக்கள்  சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீசார், பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் ஏற்படவில்லை. பொதுமக்களும், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கோடைகாலத்தில், இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டதால், பெரும் சிரமத்திற்கு ஆளாகினோம். இதுகுறித்து புகார் தெரிவிக்க மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொண்டால் போனை எடுக்கவில்லை. மேலும் மின் தடை காரணமாக காலை குடிநீர் விநியோகமும் நடைபெறவில்லை என்று தெரிவித்தனர். பொதுமக்கள் மறியல் காரணமாக திருச்சி-துறையூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயர் அழுத்த மின் வழி பாதையில் உள்ள முக்கிய மின் சாதனம் பழுதானதால் மின்தடை ஏற்பட்டதாகவும், சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள், இரவு முழுவதும் ஈடுபட்டாகவும், மின்வாரிய வட்டாரத்தினர் தெரிவித்தனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget