மேலும் அறிய

குடிநீர் விநியோகத்தில் சிக்கலா? அப்போ இந்த நம்பர்ல கூப்பிடுங்க!!!

கிராமப்புற மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என்றாலோ, குடிநீரின் தரம் சரியில்லை என்றால் உதவி எண்களை அழைக்கலாம்

திருச்சி: குடிநீர் விநியோகத்தில் சிக்கலா? அப்போ நீங்க உடனே குடிநீர் பிரச்சனைகளை பதிவு செய்ய திருச்சி மாவட்ட நிர்வாகம் புதிய உதவி எண்களை அறிவிச்சு இருக்காங்க.

திருச்சி மாவட்ட நிர்வாகம் கிராமப்புற மக்களுக்காக உதவி எண்களை அறிவித்துள்ளது. குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால் உடனே புகார் அளிக்கலாம். காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், குடிநீர் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோடை வெயில் அதிகமாக இருப்பதால், திருச்சி மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சனைகளை தெரிவிக்க உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த எண்களில் கிராமப்புற மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என்றாலோ அல்லது குடிநீரின் தரம் சரியில்லை என்றாலோ இந்த உதவி எண்களை அழைக்கலாம் என்று மாவட்ட கலெக்டர்  எம். பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: திருச்சி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனைகளை கவனிக்க உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கிராம பஞ்சாயத்து மக்கள் குடிநீர் கிடைக்கவில்லை என்றால் புகார் தெரிவிக்கலாம். இதற்காக 0431 - 2464058 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். அல்லது 94882-37844 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் அனுப்பலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கோடை காலத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப் படுகைகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. அதனால் குடிநீர் விநியோகத்தை சீராக வைக்க மாவட்டம் நிர்வாகம் முயற்சி செய்கிறது. நேற்று திருச்சியில் அதிகபட்சமாக 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. குடிநீர் தொடர்பான எந்த பிரச்சினையும் இருந்தால் உடனே உதவி எண்களை அழைக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் திருச்சி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாகவோ அல்லது மின் தடை ஏற்பட்டாலோ குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் இதுபோக குடிநீர் பிரச்சனை எதாவது இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அளித்த உதவி எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம். எனவே திருச்சி பகுதியை சேர்ந்த கிராமப்புற மக்கள் இந்த எண்களை மறக்காமல் தங்கள் செல்போனில் பதிவு செய்து கொள்ளுங்கள். கோடைகாலத்தில் குடிநீரின்றி மக்கள் தவிக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த தொலைபேசி எண்களில் பதிவு செய்யப்படும் புகார்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை முறையாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தலைப்பு செய்திகள்

'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
1,000 ஆண்டுகள் பழமையான உய்யகொண்டான் வாய்க்காலுக்கு புத்துயிர்... ஆகாயத்தாமரைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு!
1,000 ஆண்டுகள் பழமையான உய்யகொண்டான் வாய்க்காலுக்கு புத்துயிர்... ஆகாயத்தாமரைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget