மேலும் அறிய

திருச்சி: ஒரேநாளில் 275 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தில் 951 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா, ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய் பரவுவதை  கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் முழு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகளுக்கு  கட்டுப்பாடுகள் விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது, இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்களுக்கு தொற்று பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கபட்டுள்ளது. மேலும் மக்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும், குறிப்பாக அரசு கூறிய விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும், இல்லை என்றால்  நோய் தொற்று அதிக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும்  என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


திருச்சி: ஒரேநாளில் 275 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த நான்கு நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று கொரோனா தொற்றால் 275 பேர்கள் பாதிக்கபட்டுள்ளனர். அதேசமயம் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை என்பது சற்று ஆறுதல். இதனை தொடர்ந்து  மருத்துவமனையில் 951 பேர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இதுவரை தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 79863 குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77808, இறந்தவர்களின் எண்ணிக்கை 1104 ஆகும். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் இதுவரை 5 நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருச்சி: ஒரேநாளில் 275 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் கொரோனா தொற்றை விட  ஒமிக்ரான் தொற்று  அதிக வேகமாக பரவ கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஓமிக்ரான் தொற்று பற்றி அச்சப்பட தேவையில்லை. பொதுமக்கள் அரசு கூறும் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக மக்கள் இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகளை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இவற்றை நாம் முழுமையாக கடைப்பிடித்தாலே தொற்றில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் அலட்சியத்தினால்  தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. ஆகையால் மக்கள் அலட்சியப்போக்கு தவிர்த்து பாதுகாப்பாக அரசு கூறும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் -  கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் - கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் -  கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் - கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
WhatsApp Meta AI 3D: வாட்சப்பில் ஒரே டெக்ஸட்தான்! உடனே உருவாகும் 3D இமேஜ்! எப்படி தெரியுமா?
WhatsApp Meta AI 3D: வாட்சப்பில் ஒரே டெக்ஸட்தான்! உடனே உருவாகும் 3D இமேஜ்! எப்படி தெரியுமா?
கோவில்பட்டியில் ‌ஹாக்கி கோல் கீப்பர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் - பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
கோவில்பட்டியில் ‌ஹாக்கி கோல் கீப்பர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் - பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Watch Video: சொந்த ஊருக்கு சென்ற பும் பும் பும்ரா! உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ
Watch Video: சொந்த ஊருக்கு சென்ற பும் பும் பும்ரா! உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ
சாலையில் கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டுகள்;  அள்ளிச் சென்ற பொதுமக்கள்! நடந்தது என்ன?
சாலையில் கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டுகள்; அள்ளிச் சென்ற பொதுமக்கள்! நடந்தது என்ன?
Embed widget