மேலும் அறிய

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பாலியல் புகார்: மேலும் 3 பேர் சிக்கினர்!

திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் துறைத்தலைவர் பால்சந்திரமோகன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி, புத்தூரில் உள்ள பிஷப்ஹீபர் கல்லுாரி மாவட்டத்திலே சிறந்த  கல்லூரிகளில் ஒன்றாகும். இந்த கல்லூரியில் சுமார் 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் சி.எஸ்.ஐ. தென்னிந்திய திருச்சபையின் தமிழ்த்துறையில் பட்டமேற்படிப்பு படித்த மாணவிகள் 5 பேர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மீது கடந்த மார்ச் மாதம் பாலியல் குற்றச்சாட்டு கூறி, 5 பக்க  புகார் மனுவை கல்லுாரி முதல்வருக்கு அனுப்பினர்.

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கல்லூரி நிர்வாகம் கடந்த சில மாதங்களாக தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், துறைத்தலைவர் பால் சந்திரமோகன் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் மாணவிகளிடம் இருந்து வந்த காரணத்தால் அவர் மீதான குற்றச்சாட்டை மாவட்ட சமூகநலத்துறையின் பெண்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு தானாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பின்கீழ் 6 பேர் கொண்ட குழு, பால் சந்திரமோகன் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தொலைபேசி மூலமாக மாவட்ட சமூக நல பெண்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு நேற்று இரவு முதல் கட்ட விசாரணையை மேற்கொண்டது. அப்போது இந்த பாலியல் குற்றச்சாட்டில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவிகளை நேரில் சந்தித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.


திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பாலியல் புகார்: மேலும் 3 பேர் சிக்கினர்!

மேலும், மாணவிகளிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் துறைத்தலைவர் பால் சந்திரமோகன் மாணவிகளிடம் தொடர்ந்து ஆபாசமாகவே பேசுவார் என்று தெரியவந்துள்ளது. இந்த விசாரணை பாதுகாப்பான முறையில் நடத்தப்படும் என்பதால் மாணவிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் மாணவிகளுக்கு விசாரணைக்குழு அதிகாரிகள் நம்பிக்கை அளித்தனர்.

முன்னதாக, மாணவிகள் அளித்த புகாரில் துறைத்தலைவர் பால் சந்திரமோகன் வகுப்பறையில் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது, சட்டையை தளர்த்திக் கொண்டு ஆபாச செயல்களில் ஈடுபடுவது, வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் இருந்தால்,தன் அறைக்கு வரச்சொல்லி, கட்டாயப்படுத்துவது,  துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் பெண் ஒருவர்,HOD யை பார்க்க போகும் போது, முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும் என கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தது. இதனால்,  கல்லுாரியிலிருந்து வெளியேற விரும்புவதாக மாணவிகள் தங்களது புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த  புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் ஜெயந்திராணி தலைமையிலான 7 பேர் கொண்ட விசாரணை குழு, விசாரணை நடத்தி தங்களது விசாரணை அறிக்கையை கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் பால் சந்திரமோகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளும், பெற்றோர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Embed widget