மேலும் அறிய

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பாலியல் புகார்: மேலும் 3 பேர் சிக்கினர்!

திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் துறைத்தலைவர் பால்சந்திரமோகன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி, புத்தூரில் உள்ள பிஷப்ஹீபர் கல்லுாரி மாவட்டத்திலே சிறந்த  கல்லூரிகளில் ஒன்றாகும். இந்த கல்லூரியில் சுமார் 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் சி.எஸ்.ஐ. தென்னிந்திய திருச்சபையின் தமிழ்த்துறையில் பட்டமேற்படிப்பு படித்த மாணவிகள் 5 பேர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மீது கடந்த மார்ச் மாதம் பாலியல் குற்றச்சாட்டு கூறி, 5 பக்க  புகார் மனுவை கல்லுாரி முதல்வருக்கு அனுப்பினர்.

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கல்லூரி நிர்வாகம் கடந்த சில மாதங்களாக தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், துறைத்தலைவர் பால் சந்திரமோகன் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் மாணவிகளிடம் இருந்து வந்த காரணத்தால் அவர் மீதான குற்றச்சாட்டை மாவட்ட சமூகநலத்துறையின் பெண்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு தானாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பின்கீழ் 6 பேர் கொண்ட குழு, பால் சந்திரமோகன் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தொலைபேசி மூலமாக மாவட்ட சமூக நல பெண்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு நேற்று இரவு முதல் கட்ட விசாரணையை மேற்கொண்டது. அப்போது இந்த பாலியல் குற்றச்சாட்டில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவிகளை நேரில் சந்தித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.


திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பாலியல் புகார்: மேலும் 3 பேர் சிக்கினர்!

மேலும், மாணவிகளிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் துறைத்தலைவர் பால் சந்திரமோகன் மாணவிகளிடம் தொடர்ந்து ஆபாசமாகவே பேசுவார் என்று தெரியவந்துள்ளது. இந்த விசாரணை பாதுகாப்பான முறையில் நடத்தப்படும் என்பதால் மாணவிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் மாணவிகளுக்கு விசாரணைக்குழு அதிகாரிகள் நம்பிக்கை அளித்தனர்.

முன்னதாக, மாணவிகள் அளித்த புகாரில் துறைத்தலைவர் பால் சந்திரமோகன் வகுப்பறையில் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது, சட்டையை தளர்த்திக் கொண்டு ஆபாச செயல்களில் ஈடுபடுவது, வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் இருந்தால்,தன் அறைக்கு வரச்சொல்லி, கட்டாயப்படுத்துவது,  துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் பெண் ஒருவர்,HOD யை பார்க்க போகும் போது, முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும் என கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தது. இதனால்,  கல்லுாரியிலிருந்து வெளியேற விரும்புவதாக மாணவிகள் தங்களது புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த  புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் ஜெயந்திராணி தலைமையிலான 7 பேர் கொண்ட விசாரணை குழு, விசாரணை நடத்தி தங்களது விசாரணை அறிக்கையை கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் பால் சந்திரமோகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளும், பெற்றோர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Embed widget