மேலும் அறிய

அடிப்படை வசதிகள், சுகாதாரமின்றி இருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி, சுகாதாரமின்றி தவிக்கும் பொதுமக்கள், மாநகராட்சி அலட்சியபோக்கு பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு முக்கிய போக்குவரத்து வழித்தடமாக திருச்சி உள்ளது. வெளியூரில் தங்கி பணியாற்றும் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும்போது, திருச்சிக்கு வந்தே அடுத்த பேருந்து மாறி சென்று வருகிறார்கள். திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இரு பேருந்து நிலையங்களும் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்புடன் காணப்படும். இதில் சத்திரம் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் திருச்சியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையம் பழமையான பேருந்து நிலையமாகும். இங்கிருந்து சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், நெல்லை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன. மேலும், இங்கிருந்து நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் திருச்சிக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் இருமடங்கு அதிகரிக்கிறது.


அடிப்படை வசதிகள், சுகாதாரமின்றி இருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம்

இதன் காரணமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாததாலேயே திருச்சி மக்களின் 25 ஆண்டு கால கனவுத்திட்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணி பஞ்சப்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அங்குள்ள கழிப்பிடத்தில் துர்நாற்றம் வீசுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பேருந்து நிலையத்துக்குள் உள்ள சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. பள்ளமான இடங்களில் மழைநீரும் தேங்கி கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் எச்சில் துப்பிய கரையுடன் தூய்மையற்ற நிலையில் உள்ளது. இது தவிர, பேருந்துகளும் வரன்முறையின்றி தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இரவுநேரத்தில் சென்னை உள்பட ஒரு சில ஊர்களுக்கு பேருந்து போக்குவரத்து முற்றிலும் குறைக்கப்பட்டு விடுவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


அடிப்படை வசதிகள், சுகாதாரமின்றி இருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம்

இதுகுறித்து மதுரையை சேர்ந்த சந்திரன் என்ற பயணி கூறும்போது, நான் வேலை நிமித்தமாக அடிக்கடி திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்வேன். இங்கு இலவச கழிப்பிடம் என எழுதி வைத்துவிட்டு கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆங்காங்கே துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார மற்ற சூழல் உள்ளது. இதை சரி செய்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், பஸ் நிலையத்தை சுற்றி ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகளும் உள்ளன. இதனாலும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது என்றார்.


அடிப்படை வசதிகள், சுகாதாரமின்றி இருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம்

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஷெல்லி தினேஷ் கூறும்போது, மத்திய பஸ்நிலைய நடைமேடைகளில் கான்கிரீட் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு அந்த குப்பைகளை குப்பை தொட்டியில் போடாமல் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கிறார்கள். பல ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இன்றி மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து எங்கள் பகுதிக்கு செல்கிற பேருந்துகளில் எந்நேரமும் கூட்ட நெரிசலுடன் தான் செல்ல வேண்டி இருக்கிறது. ஆகவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த பயணிகள் கூறுகையில், மத்திய பேருந்து நிலையத்துக்கு தினமும் காலை வந்து வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் பேருந்து ஏறி வீடு திரும்புவேன். இங்கு ஒரு சில இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து வெளியே செல்கிறது.


அடிப்படை வசதிகள், சுகாதாரமின்றி இருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம்

இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள். ஆனால் முன்பு இருந்ததைவிட தற்போது ஓரளவுக்கு பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்றார். திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget