மேலும் அறிய

புதுக்கோட்டை தொழில் அதிபர் கொலை: கைதான 8 பேர்... காவல் நிலையம் முன் திரண்டஉறவினர்கள்!

‛தொழில் அதிபரை கொலை செய்த கொலையாளிகள் 3 பேர் யார்? என்பதை தற்போது கூற முடியாது. இதேபோல் இந்த கொலை எதற்காக நடந்தது என்பதையும் தற்போது கூற இயலாது’ என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம் (வயது 53). இவர் ரியல் எஸ்டேட் தொழிலும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆப்டிக்கல்ஸ் கடையும் நடத்தி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி இரவு இவர் வீட்டின் முன்பு அமர்ந்து செல்போனை பார்த்துகொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் 3 பேர் வீட்டின் பின்புறமாக வந்து முகமது நிஜாமை கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.

மேலும் அவரது வீட்டினுள் சென்று மனைவி ஆயிஷா பீவியை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டு பெட்டகத்தில் வைத்திருந்த 170 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்  இந்த கொலை சம்பவம் தொடர்பாக மணமேல்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தை காவல்துறை  உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட காவல் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் சூப்பிரண்டு ஜெரீனா பேகம் தலைமையில் கோட்டைப்பட்டினம் காவல் துணை சூப்பிரண்டு மனோகரன், மணமேல்குடி இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், மாரிமுத்து, பிரபாகரன் ஆகியோர் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.


புதுக்கோட்டை தொழில் அதிபர் கொலை: கைதான 8 பேர்... காவல் நிலையம் முன் திரண்டஉறவினர்கள்!

இந்த தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் அந்தபகுதியில் செல்போன் கோபுரங்களில் பதிவான செல்போன் சிக்னல்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவற்றை வைத்து விசாரித்தனர்.

8 பேர் கைது

இதில் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் (22), சூர்யா (24), ஸ்ரீகாந்த் (21), ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்த ஷேக்முகமது யூசுப் (32), உசிலங்காட்டை சேர்ந்த ரதீஷ் (24), இலுப்பூரை சேர்ந்த கதிரவன் (32), லோகேஷ் (25), நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது யூனுஸ் (29), மணமேல்குடியை சேர்ந்த ஜோஸ்மில்டன் ஆகிய 9 பேருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜோஸ்மில்டனை தவிர மற்ற 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 62 பவுன் நகைகள் மற்றும் 188 கிராம் வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. மேலும் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கத்திகள், 3 முக கவசங்கள் மற்றும் ஒரு கையுறை ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜோஸ்மில்டன் வெளிநாடு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.


புதுக்கோட்டை தொழில் அதிபர் கொலை: கைதான 8 பேர்... காவல் நிலையம் முன் திரண்டஉறவினர்கள்!

இந்த வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார். பின்னர் கைதான 8 பேரும் அறந்தாங்கி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேரை காவல்துறையினர்  கைது செய்த சம்பவம் அறிந்ததும் அப்பகுதி மக்கள் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த வழக்கில் முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது. மேலும், தொழில் அதிபரை கொலை செய்த கொலையாளிகள் 3 பேர் யார்? என்பதை தற்போது கூற முடியாது. இதேபோல் இந்த கொலை எதற்காக நடந்தது என்பதையும் தற்போது கூற இயலாது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Embed widget