மேலும் அறிய

பெரம்பலூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை - காவல்துறை

பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழியிலேயே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும், விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்க எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாகவும், சிலைகள் ஊர்வலம் தொடர்பாகவும் விழாக்குழுவினருடன் போலீசார் ஆலோசனை கூட்டத்தை  பெரம்பலூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடத்தினர். கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சஞ்சீவ்குமார் (பெரம்பலூர்), ஜனனிபிரியா (மங்களமேடு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் பேசுகையில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலையை நிறுவ உள்ள அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்தும், அரசு இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறையிடம் இருந்தும், நெடுஞ்சாலை மற்றும் வேறு துறைக்கு சொந்தமான இடமாக இருப்பின் தொடர்புடைய அலுவலர்களிடம் இருந்தும், தடையின்மை சான்று பெற்று வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.


பெரம்பலூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை - காவல்துறை

நிறுவப்படவுள்ள சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டவையாக மட்டும் இருக்க வேண்டும். உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. விநாயகர் சிலைகளுக்கு மேற்கூரைகளை இரும்பு சீட் அல்லது சிமெண்டிலான சீட் கொண்டு கொட்டகை அமைக்க வேண்டும். தென்னங்கீற்று போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை விழாக்குழுவினர் கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை ஆகியவை அருகே விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது. கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்தக்கூடாது. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை மதியம் 12 மணிக்குள் தொடங்க வேண்டும். ஊர்வலத்தின்போது பட்டாசு போன்ற வெடி பொருட்களை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. சிலைகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். 


பெரம்பலூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை - காவல்துறை

மேலும் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழியில்தான் ஊர்வலமாக செல்ல வேண்டும். விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாகவும், சிலைகள் ஊர்வலம் தொடர்பாகவும் அரசு வகுத்துள்ள வழிமுறைகளை விழாக்குழுவினர் பின்பற்ற வேண்டும், என்றார். மேலும் அவர் விழாக்குழுவினர் சந்தேகங்களுக்கு பதிலளித்து பேசினார். மேலும் அரசு கூறிய விதிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக சிலைகளை வைப்பதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கட்டாயம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தவரை 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து கூடுதலாக காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அரசு கூறிய விதிமுறைகளையும், மாவட்ட நிர்வாகத்தினுடைய விதிமுறைகளையும் மீறினால் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன் (பெரம்பலூர்), மோகன்ராஜ் (பாடாலூர்), பாலசுப்பிரமணியன் (அரும்பாவூர்), கண்ணதாசன் (குன்னம்), நடராஜன் (மங்களமேடு), சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரும் விழாக்குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய 4 தாலுகாக்களில் இருந்து விழாக்குழுவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பிளம்பர்கள் பற்றாக்குறை... தண்ணீருக்காக தவிக்கும் திருச்சி: அதிகாரிகள் மெத்தனம்?
பிளம்பர்கள் பற்றாக்குறை... தண்ணீருக்காக தவிக்கும் திருச்சி: அதிகாரிகள் மெத்தனம்?
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
Embed widget