மேலும் அறிய

பெரம்பலூர்: ரேஷன் அரிசியை கடத்திய 2 பேர் கைது - மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் வழியாக சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவு பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், லாடபுரம் அம்பேத்கர் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டனர். அதில் மூட்டை, மூட்டையாக இருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வாகனத்துடன் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த தாசில்தார் கிருஷ்ணராஜ், அவற்றை பெரம்பலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார், அந்த சரக்கு வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அதம்பார் அருகே உள்ள படுகை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் பாரதிவேல் (வயது 27), அவரது தம்பி பாரதி முருகன் (23) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்திற்கு சரக்கு வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர். 


பெரம்பலூர்: ரேஷன் அரிசியை கடத்திய 2 பேர் கைது - மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை

பின்னர் அவர்கள் மீண்டும் ஊருக்கு வெறும் வாகனமாக செல்லக்கூடாது என்பதற்காக பெரம்பலூர் மாவட்ட பகுதியில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை, சரக்கு வாகனத்தில் ஏற்றி நாமக்கல் கோழி பண்ணைக்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பாரதிவேல், பாரதி முருகன் ஆகியோரை கைது செய்தனர். ரேஷன் கடையில் விலையில்லா அரிசியை பெற்று விற்று வருபவர்கள் யார்? ரேஷன் அரிசியை வாங்கும் வியாபாரிகள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரிப்பதோடு, அவர்களையும் தேடி வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தது . இதனை தொடர்ந்து இந்த அதிரடி சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கடந்த மார்ச் மாதம்  பெரம்பலூர் 13-வது வார்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்த காந்தி மகன் செல்வம் (வயது 30) என்பதும், அவர்  ரேஷன் அரிசியை விற்பனை செய்வதற்கு கடத்தி சென்றார். பின்னர் காவல்துறையினர்  செல்வத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து  450 கிலோ இலவச ரேஷன் அரிசியையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது. இதுபோன்று  தவறான செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"தென் மாவட்ட ரயில் பயணிகளே உஷார்! 5 முக்கிய ரயில்களின் பாதை அதிரடி மாற்றம் - உங்க ஊர் ரயில் இருக்கா பாருங்க!"
தடம் மாறும் டெண்டர்... தள்ளிப்போகும் கனவுத் திட்டம்! திருச்சியில் என்ன நடக்கிறது?
தடம் மாறும் டெண்டர்... தள்ளிப்போகும் கனவுத் திட்டம்! திருச்சியில் என்ன நடக்கிறது?
திருச்சியில் 'புட் ஸ்ட்ரீட்': தெருவோர உணவிலும் 'ஸ்மார்ட்' ரூட்! ரூ.5 கோடி திட்டம்... நனவாகும் கனவு
திருச்சியில் 'புட் ஸ்ட்ரீட்': தெருவோர உணவிலும் 'ஸ்மார்ட்' ரூட்! ரூ.5 கோடி திட்டம்... நனவாகும் கனவு
ஸ்தம்பித்தது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை; மக்கள் மறியலால் போக்குவரத்து கடும் பாதிப்பு!
ஸ்தம்பித்தது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை; மக்கள் மறியலால் போக்குவரத்து கடும் பாதிப்பு!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget