மேலும் அறிய

’திருச்சி மாவட்டத்தில் நீட் தேர்வை எழுதும் 9,105 மாணவ, மாணவிகள்’ - தேர்வு அறையில் கடும் கட்டுப்பாடு...!

திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 21 மையங்களில் நீட் தேர்வை 9,105 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் நீட் தேர்வை 9,105 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருச்சி மாவட்டத்தில் கூடுதலாக நீட் மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டை காட்டிலும் ஒரு மையம் குறைவாக 21 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் முற்பகல் 11மணி முதல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை 40 பேர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்களுக்கு கையுறை, முகக்கவசம் அணிந்து செல்வது கட்டாயம், உணவுகளை உள்ளே கொண்டு செல்ல அனுதியில்லை என்பதால்  தண்ணீர் பாட்டிலுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று காலை 10 மணி முதலே தேர்வு மையங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தர துவங்கினர், தேர்வு மையத்துக்குள் செல்லும் பொழுது ஒவ்வொரு மாணவர்களையும் வெப்பமானி கருவி மூலம் சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர்.


’திருச்சி மாவட்டத்தில் நீட் தேர்வை எழுதும் 9,105 மாணவ, மாணவிகள்’ - தேர்வு அறையில் கடும் கட்டுப்பாடு...!

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை 16.14 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வை எழுதும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகள், ஆயுர் வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, வேலூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், கடலூர், கரூர், நாகர்கோவில், நாமக் கல், தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக் கல் உட்பட நாடு முழுவதும் 202 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சென்னையில் 33 மையங் களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. 


’திருச்சி மாவட்டத்தில் நீட் தேர்வை எழுதும் 9,105 மாணவ, மாணவிகள்’ - தேர்வு அறையில் கடும் கட்டுப்பாடு...!

இந்த ஆண்டு நுழைவு தேர்வு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா 2 ஆவது அலை காரணமாக செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இதன்படி நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை 16.14 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.  தமிழகத்தில் மட்டும் 1.20 லட்சம் பேர் தேர்வை எழுத உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நீட் தேர்வு மையங்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்படி நாடு முழுவதும் 3,858 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிகளை தேசிய தேர்வு முகமை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிகளை அனைத்து மாணவர்களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

’திருச்சி மாவட்டத்தில் நீட் தேர்வை எழுதும் 9,105 மாணவ, மாணவிகள்’ - தேர்வு அறையில் கடும் கட்டுப்பாடு...!

மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது. மாணவ, மாணவியர் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். அனுமதி அட்டை, அடையாள அட்டை, மாற்றுத் திறனாளி யாக இருந்தால் அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. உட்பக்கம் தெளிவாக தெரியும் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம். 50 மி.லி. சானிடைசர் எடுத்துச் செல்லலாம். ஏற்கெனவே பின்பற்றப்படும் ஆடை கட்டுப்பாடுகள் இந்த ஆண்டும் கடுமையாக பின்பற்றப்படும். தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு புதிதாக என் 95 முகக்கவசம் வழங்கப்படும். ஏற்கெனவே அணிந்திருக்கும் முகக் கவசத்தை கழற்றிவிட்டு புதிய முகக்கவசத்தை அணிய வேண்டும். தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளின் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படும். உடல் வெப்பநிலை அதிகமுடைய மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தேர்வு எழுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
"தென் மாவட்ட ரயில் பயணிகளே உஷார்! 5 முக்கிய ரயில்களின் பாதை அதிரடி மாற்றம் - உங்க ஊர் ரயில் இருக்கா பாருங்க!"
தடம் மாறும் டெண்டர்... தள்ளிப்போகும் கனவுத் திட்டம்! திருச்சியில் என்ன நடக்கிறது?
தடம் மாறும் டெண்டர்... தள்ளிப்போகும் கனவுத் திட்டம்! திருச்சியில் என்ன நடக்கிறது?
திருச்சியில் 'புட் ஸ்ட்ரீட்': தெருவோர உணவிலும் 'ஸ்மார்ட்' ரூட்! ரூ.5 கோடி திட்டம்... நனவாகும் கனவு
திருச்சியில் 'புட் ஸ்ட்ரீட்': தெருவோர உணவிலும் 'ஸ்மார்ட்' ரூட்! ரூ.5 கோடி திட்டம்... நனவாகும் கனவு

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
Embed widget