மேலும் அறிய

அரியலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

அரியலூர் அருகே மனைவி பிரிந்துசென்ற ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். உடல் அழுகியதால் கடும் துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் இந்திரா நகர் ராவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சின்னராசு மகன் செந்தில்குமார்(வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கும், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கோவிலூரை சேர்ந்த முருகன் மகள் யமுனாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக யமுனா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் செந்தில்குமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிமையில் இருந்த செந்தில்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து அவரது உடல் அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ளவர்கள் இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, செந்தில்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் உடல் அழுகி காணப்பட்டார்.இதையடுத்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து செந்தில்குமாரின் அண்ணன் மாயவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


அரியலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

இதனை தொடர்ந்து மற்றொரு சம்பவம் :  அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அருங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு(வயது 54). இவருக்கு சிறுநீரகத்தில் கல் இருந்ததால் ஒரு வருடத்திற்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்து வந்தார். தற்போது கடந்த சில மாதங்களாகவே மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வலி அதிகமாக ஏற்படவே வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

L.K.Advani: திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
Breaking News LIVE: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை.. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை.. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
L.K.Advani: திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
Breaking News LIVE: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை.. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை.. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
School Holiday: தொடரும் கனமழை - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளிக்கு இன்றும் விடுமுறை!
School Holiday: தொடரும் கனமழை - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளிக்கு இன்றும் விடுமுறை!
IND vs ENG : இங்கிலாந்தை பழிவாங்க களமிறங்கும் இந்திய அணி.. அரையிறுதியில் இன்று எந்த அணி சம்பவம் செய்யும்..?
இங்கிலாந்தை பழிவாங்க களமிறங்கும் இந்திய அணி.. அரையிறுதியில் இன்று எந்த அணி சம்பவம் செய்யும்..?
காதலித்த பெண்ணை கரம் பிடித்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி! கணவனை தூக்கிய போலீஸ்! புதுப்பொண்ணு ஷாக்!
காதலித்த பெண்ணை கரம் பிடித்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி! கணவனை தூக்கிய போலீஸ்! புதுப்பொண்ணு ஷாக்!
கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
Embed widget