மேலும் அறிய

காஞ்சிபுரம், திருவள்ளூர் வளர்ச்சிக்கு புதிய பாதை! செங்கல்பட்டு-செய்யாறு சிப்காட் இணைப்பு சாலை: துவங்கிய பணிகள்

சென்னையுடன் செய்யார் சிப்காட் பகுதி இணைக்கும் வகையில், 43 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிதாக நான்கு வழி சாலை அமைக்கப்பட உள்ளது.

சென்னையின் புறநகர் மாவட்டங்களாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இதனால் சென்னைக்கு நிகராக சென்னையில் புறநகர் பகுதிகளும் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றன. 

தொழிற்சாலைகள் நிறைந்த காஞ்சிபுரம் 

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக தொழில் பூங்கா தொடங்குவது குறித்தும் தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோன்று காஞ்சிபுரம் அருகில் இருக்கக்கூடிய செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் புதிய தொழிற்சாலைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அருகே உள்ள மாங்கால் பகுதியில் செய்யார் சிப்காட் செயல்பட்டு வருகிறது.

நேரடி சாலை இல்லாததால் போக்குவரத்து நெரிசல்

செய்யார் சிப்காட் பகுதிக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் நாள்தோறும் வந்து செல்கின்றன. நேரடியான சாலை செய்யாறு சிப்காட் பகுதிக்கு இல்லாததால், தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களைக் கொண்டு வருவதற்கும், தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் தொழில் நிறுவனங்கள் பெரும் சவாலை சந்தித்து வருகின்றன.

செய்யார் சிப்காட் பகுதிக்கு நேரடியாக செல்வதற்கு, இணைப்பு சாலை இல்லாததால் கடும் போக்குவரத்தின ரிசல்ட் ஏற்பட்டு வருகின்றன. செய்யார் சிப்காட் பகுதியில் இருந்து துறைமுகம் செல்ல வேண்டுமென்றால் வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக தான் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் செய்யார் தொழில் தடை பகுதியை சென்னையுடன் இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது.

செய்யார் சிப்காட் புதிய இணைப்பு சாலை 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து, ஒரகடம் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து செய்யார் சிப்காட் வரை 43 கிலோமீட்டர் தொலைவிற்கு செய்யாற்று புதிய இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து 33 கிராமங்கள் வழியாக இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. 

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்து சேர்ந்த 33 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நான்கு வழிச்சாலையாக 60 மீட்டர் அகல சாலையாக அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.

செய்யார் சிப்காட் புதிய இணைப்பு சாலை அமைப்பதற்கு 127 ஏக்கர் அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதேபோன்று 492 ஏக்கர் பட்டா நிலங்களும் கையகப்படுத்த போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. கையகப்படுத்த உள்ள நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. நிலம் கையகப்படுத்துவதற்கு இப்பகுதியில் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர. 

சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன ?

சென்னை செய்யார் சிப்காட் புதிய இணைப்பு சாலை பயன்பாட்டிற்கு வந்தால், காஞ்சிபுரம் பகுதியில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும். பல கிலோமீட்டர் சுற்றி செல்லக்கூடிய கனரக வாகனங்கள் நேரடியாக, சென்னை துறைமுக சாலையை மற்றும் சென்னை வெளிவட்ட சாலை ஆகியவற்றை அடைய முடியும். சென்னை எல்லைச்சாலை அமைக்கும் திட்டம் செயல்பட்டு வரும் நிலையில், இந்த சாலை மூலம் சென்னை எல்லைச்சாலையையும் எளிதாக அடைய முடியும்.

எந்த வழியாக இந்த சாலை அமைகிறது? 

காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி கூட்ரோடு பகுதியில் இருந்து, செய்யாறு சிப்காட், அழிசூர், புத்தளி, மதூர், பாலூர், வளையக்கரணை, வடக்கப்பட்டு வழியாக இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget