திருநெல்வேலி : சமூக நலத் துறையில் பாலின வல்லுனர் & பாதுகாவலர் பணி! உடனே விண்ணப்பியுங்கள்!
பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.11.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மகளிர் அதிகார மையத்தில் பாலின வல்லுனர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.11.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பாலின வல்லுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: சமூகப் பணி மற்றும் சமூகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 21,000
பாதுகாவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பாதுகாவலராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், மணிமுத்தாறு வளாகம் முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம், திருநெல்வேலி – 627009
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.11.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.





















