மேலும் அறிய

மாணவ மாணவிகள் நாளிதழ்களை படித்தால் அனுபவ அறிவு கிடைக்கும் - அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

சிறுவன் ராஜேஷ் தந்தையில்லாமல் தாத்தா வளர்ப்பில் வளர்ந்த தான் ஐஏஎஸ் ஆக போகிறேன் என்று கையில் ஒரு காகிதம் இல்லாமல் அருமையாக பேசினான். இதே போல் அனைவரும் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான பாராட்டு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பொதுஅறிவை வளர்த்துக் கொண்டு படிப்போடு லட்சியத்தை எதிர்கொள்ள வேண்டும் என மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை வழங்கினார்.


மாணவ மாணவிகள் நாளிதழ்களை படித்தால் அனுபவ அறிவு கிடைக்கும் - அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

தூத்துக்குடி சமூகபாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற இல்ல குழந்தைகளுக்கான  பாராட்டு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் வரவேற்புரையாற்றினார். மாணவ மாணவிகள் ராஜலட்சுமி, ஜோ கென்சி, ராஜேஷ், ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள்.


மாணவ மாணவிகள் நாளிதழ்களை படித்தால் அனுபவ அறிவு கிடைக்கும் - அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

நிகழ்ச்சிக்கு  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து 29 பேருக்கு பரிசுகள் வழங்கி நினைவு பரிசுகள் வழங்கி பேசுகையில் "மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் முதலமைச்சர் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் என்று கூறியதற்கிணங்க நமது மாவட்டத்திலும் இதே போல் ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் 400மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவ மாணவிகளும் உலகத்தில் நடப்பதை தெரிந்து கொள்ள நாளிதழ்கள் புத்தகங்கள் படிக்க வேண்டும். அதன் மூலம் நமக்கு பல அனுபவ அறிவுகள் கிடைக்கும் அதே அனுபவ அறிவு பெற்றவர்கள்தான் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். 


மாணவ மாணவிகள் நாளிதழ்களை படித்தால் அனுபவ அறிவு கிடைக்கும் - அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

படிப்பறிவோடு சேர்ந்து பொதுஅறிவையும் வளர்த்து கொண்டு லட்சியத்தை நிர்ணயித்து பயணிக்க வேண்டும். இங்குள்ள நீங்கள் பலர் தாய் தந்தையர்கள் இல்லாத நிலையில் படித்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளீர்கள் இதனால் இதில் உள்ள பல்வேறு இடர்பாடுகள் எல்லாவற்றையும் ஓரளவு கடந்து இருப்பீர்கள் 18வயது வரை பள்ளி படிப்பு பருவம். இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இங்கு பேசிய சிறுவன் ராஜேஷ் தந்தையில்லாமல் தாத்தா வளர்ப்பில் வளர்ந்த நான் ஐஏஎஸ் ஆக போகிறேன் என்று கையில் ஒரு காகிதம் இல்லாமல் அருமையாக பேசினான். இதே போல் அனைவரும் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் தாய் தந்தையர் இருந்தும் பல குடும்பங்களில் வேலைக்கு செல்பவர்கள் இருப்பதால் இதுபோன்ற இல்லங்களில் தங்கி படிப்பவர்கள் உங்களை வழிநடத்துபவர்களாகிய தாய் தந்தையர்கள் ஆசிரியர்கள் சொல்படி கேட்டு படிக்க வேண்டும். அரசு சார்பில் உங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கப்படும் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் முடியாதது என்று எதுவும் இல்லை. அதை கடைப்பிடித்தால் உங்களது வாழ்வில் வசந்தகாலம்தான்” என்றார். 

விழாவில் சார் ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் ரூபன் கிஷோர், வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட சமூகநல அலுவலர் ரதிதேவி, வக்கீல் அரசகுமார் உள்பட மாணவ மாணவிகள் அரசு சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக புனித மரியன்னை கருணை இல்ல இயக்குநர் அல்பட் சேவியர் நன்றியுரையாற்றினார்.

தலைப்பு செய்திகள்

நெல்லை, நாகர்கோவில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. ரயில்கள் பாதியிலேயே நிறுத்தம் – முழு விவரம் இதோ
நெல்லை, நாகர்கோவில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. ரயில்கள் பாதியிலேயே நிறுத்தம் – முழு விவரம் இதோ
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா தொடக்கம்! முக்கிய நிகழ்ச்சிகள் என்ன?
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா தொடக்கம்! முக்கிய நிகழ்ச்சிகள் என்ன?
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்: கைபேசி வைத்திருந்தால் பறிமுதல் – புதிய அறிவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்: கைபேசி வைத்திருந்தால் பறிமுதல் – புதிய அறிவிப்பு
ரயில்வே அதிரடி அறிவிப்பு: அந்தியோதயா மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் பகுதி ரத்து!
ரயில்வே அதிரடி அறிவிப்பு: அந்தியோதயா மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் பகுதி ரத்து!

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
Chennai Power Cut: சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
New Tata Altroz Turbo CNG: நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
Embed widget