மேலும் அறிய

‛தேவை இருக்கு... ஆனால் செய்ய முடியலே...’ கலங்கி நிற்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

மண்ணாலும் மழையாலும் அகல் விளக்கு தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளதாக நெல்லையில் மண்பாண்ட தொழிலாளர்கள் வருத்தம்,

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் தயாராகும் மண் விளக்குகள், பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் பணிபுரியும் தொழிலாளர்களின் இன்றைய வாழ்க்கை நிலையை விளக்குகிறது இந்த பதிவு


‛தேவை இருக்கு... ஆனால் செய்ய முடியலே...’  கலங்கி நிற்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

கார்த்திகை தீபத் திருநாளின்போது வீடுகள் மற்றும் ஆலயங்களில் அகல் விளக்கு வைத்து வழிபாடு மேற்கொள்ளப்படுவது வழக்கம், வருகிற 19 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படவுள்ளதையொட்டி, பல்வேறு பகுதிகளில் அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே குறிச்சி பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் கார்த்திகை தீப விளக்கு தயாரிக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். தொங்குவிளக்கு, ஐந்து முக விளக்கு, அஷ்டலெட்சுமி விளக்கு, உருளி விளக்கு என சிறியது முதல் பெரியது வரையிலான விளக்குகள் தயாரித்து காய வைக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 2 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை விற்பனையாகும் இந்த விளக்கானது, நெல்லை மாவட்டத்தின் பிறபகுதிகள் மட்டும் இன்றி மதுரை, திருச்சி, கேரளா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


‛தேவை இருக்கு... ஆனால் செய்ய முடியலே...’  கலங்கி நிற்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!


பொங்கல் பண்டிகையை ஒட்டி மண்பானைகள் தயாரிப்பு, கார்த்திகை மாதம் விளக்குகள் என ஒவ்வொரு சீசனுக்கு ஏற்றவாறு மண்பாண்ட பொருட்கள் தயாரித்து வருகின்றனர் மண்பாண்ட தொழிலாளர்கள். தற்போது கார்த்திகை மாத சீசன் என்பதால் மக்கள் மத்தியில் தேவைகள் அதிகம் இருந்தும் மழைக்காலம் என்பதால் காய வைப்பதில் சிரமம், தரமான மண் கிடைப்பதில்லை என்பதாலும் தேவையான உற்பத்தியை செய்ய முடிய வில்லை என்றும், போதிய இலாபமின்றியும் 50 பேர் வேலை செய்யும் இடத்தில் தற்போது 30 பேர் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறுகின்றனர்.


‛தேவை இருக்கு... ஆனால் செய்ய முடியலே...’  கலங்கி நிற்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக மண்பாண்ட தொழில் மிகவும் நலிவடைந்து இருந்த நிலையில் தற்போது சுற்று சூழலுக்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாத மண்ணால் ஆன விளக்குகள் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்தாண்டு அகல் விளக்குக்கான ஆர்டர்கள் நிறைய வருவதாகவும், ஆனால் அதன் மூலப்பொருளான போதுமான மண் எடுக்க அனுமதி இல்லாததால் தேவைகள் அதிகம் இருந்த போதும் அகல் விளக்கு தயாரிக்க இயலாத நிலையே உள்ளது,


‛தேவை இருக்கு... ஆனால் செய்ய முடியலே...’  கலங்கி நிற்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

 கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தோற்று காரணமாக தயாரிப்பு மந்தமாக இருந்தது தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்டாலும் தற்போது இந்த தொழிலின் மூலப்பொருளான மண் எடுப்பதில் மிகவும் பிரச்சனை உள்ளது தமிழக முதல்வர் அறிவித்த பின்னரும் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை தற்போது மழை பெய்து குளங்கள் பெருகிவிட்டது தற்போது பொது மக்களின் ஆர்வம் காரணமாக ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளது  தேவை அதிகமாக  இருந்த போதிலும் மண் இல்லாததால் உற்பத்தி செய்ய முடியவில்லை குறைந்தளவே அகல் விளக்கை உற்பத்தி செய்து வருகிறோம் அதன் காரணமாக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தொழிலுக்கு தேவையான மண் தொழிலாளர்களுக்கு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pradeep Yadhav IAS : ”தம்பியை பார்த்துக்கோங்க”சீனியர் IAS-ஐ அழைத்த ஸ்டாலின்!யார் இந்த பிரதீப் யாதவ்?Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Embed widget