மேலும் அறிய

10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு செயல்பட தொடங்கிய பனை நல வாரியம் - எர்ணாவூர் நாராயணன்

வேலையில்லாத இளைஞர்களுக்கு பனைத் தொழில் செய்ய பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய கூட்டம் பாளையங்கோட்டையில் வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர் சேர்க்கையை அவர் தொடங்கி வைத்து, பனையேறும் தொழிலாளர்களுக்கு நிவாரணம், கல்வி மற்றும் திருமண உதவித் தொகை ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, கடந்த 23ஆம் தேதி தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பனை நல வாரியம் செயல்படாமல் இருந்தது. 2006ல் உருவாக்கப்பட்ட இந்த வாரியம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுடன் பனைத் தொழிலாளர் நல வாரியம் செயல்படாமல் போனது. 10 ஆண்டுகாலம் பனைத் தொழிலாளர் நல வாரியம் எந்த செயல்பாடும் இல்லாமல் இழுத்து மூடப்பட்டது. இதனால் பனையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதன் மூலம்  கல்விக்கான உதவித் தொகை, பென்சன்,  திருமண உதவி என அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் மக்களை சென்று இதுவரை சேரவில்லை. பத்தாண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக நெல்லை மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை நல வாரியத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் காரியாண்டி பகுதியில் வயது முதிர்ந்த நபர் துரைப்பாண்டி என்பவர் பனைமரம் ஏறி தொழில் செய்து வருகிறார். குழந்தைகள் கைவிடப்பட்டு பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் இந்த தொழிலை செய்து வரும் அவருக்கு பனை நல வாரியம் மூலம் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதி வழங்கப்பட்டுள்ளது.


10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு செயல்பட தொடங்கிய பனை நல வாரியம் - எர்ணாவூர் நாராயணன்

தமிழகம் முழுவதும் பனைத் தொழிலாளர்களை கிராமமாக சந்தித்து நலவாரியத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது காவல்துறை தேவை இல்லாமல் வழக்கு பதிவு செய்து வருகிறது. இதனை கைவிட வேண்டும். தமிழக டிஜிபி பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது வழக்கு போட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள நிலையில், வழக்கு போடும் செயலை காவல்துறை கைவிட வேண்டும். பதநீர் விற்பனை செய்ய பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பால் பூத்து போன்று புதிய அங்காடி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வேலையில்லாத இளைஞர்களுக்கு பனைத் தொழில் செய்வதற்கான பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுத்தமான கருப்பட்டி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பனை தொழிலாளர் நல வாரியம் மேற்கொள்ளும்.


10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு செயல்பட தொடங்கிய பனை நல வாரியம் - எர்ணாவூர் நாராயணன்

தமிழக அரசு உத்தரவின் பேரில் ரேஷன் கடைகளில் பனைவெல்லம், கருப்பட்டி விற்பனை நடைபெற்று வருகிறது. இருப்பினும் பனைத் தொழிலாளர் நல வாரியம் மூலம் ரேஷன் கடைகளில் பனை கருப்பட்டி விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.  பனை மரத்திலிருந்து மதிப்பு கூட்டுப் பொருட்கள் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பனை மரங்களை வெட்டும் நபர்களைக் கண்டால் நேரடியாக பொதுமக்கள் போலீசார் இடம் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக உள்ளது. பனை நல வாரியத்தில் ஒரு லட்சம் நபர்களை சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட இறுதியில் பத்தாயிரம் நபர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget