மேலும் அறிய

10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு செயல்பட தொடங்கிய பனை நல வாரியம் - எர்ணாவூர் நாராயணன்

வேலையில்லாத இளைஞர்களுக்கு பனைத் தொழில் செய்ய பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய கூட்டம் பாளையங்கோட்டையில் வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர் சேர்க்கையை அவர் தொடங்கி வைத்து, பனையேறும் தொழிலாளர்களுக்கு நிவாரணம், கல்வி மற்றும் திருமண உதவித் தொகை ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, கடந்த 23ஆம் தேதி தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பனை நல வாரியம் செயல்படாமல் இருந்தது. 2006ல் உருவாக்கப்பட்ட இந்த வாரியம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுடன் பனைத் தொழிலாளர் நல வாரியம் செயல்படாமல் போனது. 10 ஆண்டுகாலம் பனைத் தொழிலாளர் நல வாரியம் எந்த செயல்பாடும் இல்லாமல் இழுத்து மூடப்பட்டது. இதனால் பனையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதன் மூலம்  கல்விக்கான உதவித் தொகை, பென்சன்,  திருமண உதவி என அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் மக்களை சென்று இதுவரை சேரவில்லை. பத்தாண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக நெல்லை மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை நல வாரியத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் காரியாண்டி பகுதியில் வயது முதிர்ந்த நபர் துரைப்பாண்டி என்பவர் பனைமரம் ஏறி தொழில் செய்து வருகிறார். குழந்தைகள் கைவிடப்பட்டு பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் இந்த தொழிலை செய்து வரும் அவருக்கு பனை நல வாரியம் மூலம் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதி வழங்கப்பட்டுள்ளது.


10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு செயல்பட தொடங்கிய பனை நல வாரியம் - எர்ணாவூர் நாராயணன்

தமிழகம் முழுவதும் பனைத் தொழிலாளர்களை கிராமமாக சந்தித்து நலவாரியத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது காவல்துறை தேவை இல்லாமல் வழக்கு பதிவு செய்து வருகிறது. இதனை கைவிட வேண்டும். தமிழக டிஜிபி பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது வழக்கு போட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள நிலையில், வழக்கு போடும் செயலை காவல்துறை கைவிட வேண்டும். பதநீர் விற்பனை செய்ய பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பால் பூத்து போன்று புதிய அங்காடி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வேலையில்லாத இளைஞர்களுக்கு பனைத் தொழில் செய்வதற்கான பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுத்தமான கருப்பட்டி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பனை தொழிலாளர் நல வாரியம் மேற்கொள்ளும்.


10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு செயல்பட தொடங்கிய பனை நல வாரியம் - எர்ணாவூர் நாராயணன்

தமிழக அரசு உத்தரவின் பேரில் ரேஷன் கடைகளில் பனைவெல்லம், கருப்பட்டி விற்பனை நடைபெற்று வருகிறது. இருப்பினும் பனைத் தொழிலாளர் நல வாரியம் மூலம் ரேஷன் கடைகளில் பனை கருப்பட்டி விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.  பனை மரத்திலிருந்து மதிப்பு கூட்டுப் பொருட்கள் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பனை மரங்களை வெட்டும் நபர்களைக் கண்டால் நேரடியாக பொதுமக்கள் போலீசார் இடம் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக உள்ளது. பனை நல வாரியத்தில் ஒரு லட்சம் நபர்களை சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட இறுதியில் பத்தாயிரம் நபர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

போலீஸ் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து மரணம் ! சாதிய அவமதிப்பே காரணமா ?
போலீஸ் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து மரணம் ! சாதிய அவமதிப்பே காரணமா ?
திருநெல்வேலி அருகே பயங்கரம்!..2 மகன்களுடன் சென்ற தந்தை வெட்டிக்கொலை. 5 வயது மகன் பலி!..
திருநெல்வேலி அருகே பயங்கரம்!..2 மகன்களுடன் சென்ற தந்தை வெட்டிக்கொலை. 5 வயது மகன் பலி!..
திருநெல்வேலி ரயில் நிலையம்: நவீன சிக்னல், கூடுதல் நடைமேடை - பாதுகாப்பு, வசதி உறுதி!
திருநெல்வேலி ரயில் நிலையம்: நவீன சிக்னல், கூடுதல் நடைமேடை - பாதுகாப்பு, வசதி உறுதி!
நெல்லை, நாகர்கோவில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. ரயில்கள் பாதியிலேயே நிறுத்தம் – முழு விவரம் இதோ
நெல்லை, நாகர்கோவில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. ரயில்கள் பாதியிலேயே நிறுத்தம் – முழு விவரம் இதோ

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
Embed widget