மேலும் அறிய

10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு செயல்பட தொடங்கிய பனை நல வாரியம் - எர்ணாவூர் நாராயணன்

வேலையில்லாத இளைஞர்களுக்கு பனைத் தொழில் செய்ய பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய கூட்டம் பாளையங்கோட்டையில் வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர் சேர்க்கையை அவர் தொடங்கி வைத்து, பனையேறும் தொழிலாளர்களுக்கு நிவாரணம், கல்வி மற்றும் திருமண உதவித் தொகை ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, கடந்த 23ஆம் தேதி தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பனை நல வாரியம் செயல்படாமல் இருந்தது. 2006ல் உருவாக்கப்பட்ட இந்த வாரியம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுடன் பனைத் தொழிலாளர் நல வாரியம் செயல்படாமல் போனது. 10 ஆண்டுகாலம் பனைத் தொழிலாளர் நல வாரியம் எந்த செயல்பாடும் இல்லாமல் இழுத்து மூடப்பட்டது. இதனால் பனையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதன் மூலம்  கல்விக்கான உதவித் தொகை, பென்சன்,  திருமண உதவி என அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் மக்களை சென்று இதுவரை சேரவில்லை. பத்தாண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக நெல்லை மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை நல வாரியத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் காரியாண்டி பகுதியில் வயது முதிர்ந்த நபர் துரைப்பாண்டி என்பவர் பனைமரம் ஏறி தொழில் செய்து வருகிறார். குழந்தைகள் கைவிடப்பட்டு பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் இந்த தொழிலை செய்து வரும் அவருக்கு பனை நல வாரியம் மூலம் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதி வழங்கப்பட்டுள்ளது.


10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு செயல்பட தொடங்கிய பனை நல வாரியம் - எர்ணாவூர் நாராயணன்

தமிழகம் முழுவதும் பனைத் தொழிலாளர்களை கிராமமாக சந்தித்து நலவாரியத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது காவல்துறை தேவை இல்லாமல் வழக்கு பதிவு செய்து வருகிறது. இதனை கைவிட வேண்டும். தமிழக டிஜிபி பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது வழக்கு போட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள நிலையில், வழக்கு போடும் செயலை காவல்துறை கைவிட வேண்டும். பதநீர் விற்பனை செய்ய பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பால் பூத்து போன்று புதிய அங்காடி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வேலையில்லாத இளைஞர்களுக்கு பனைத் தொழில் செய்வதற்கான பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுத்தமான கருப்பட்டி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பனை தொழிலாளர் நல வாரியம் மேற்கொள்ளும்.


10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு செயல்பட தொடங்கிய பனை நல வாரியம் - எர்ணாவூர் நாராயணன்

தமிழக அரசு உத்தரவின் பேரில் ரேஷன் கடைகளில் பனைவெல்லம், கருப்பட்டி விற்பனை நடைபெற்று வருகிறது. இருப்பினும் பனைத் தொழிலாளர் நல வாரியம் மூலம் ரேஷன் கடைகளில் பனை கருப்பட்டி விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.  பனை மரத்திலிருந்து மதிப்பு கூட்டுப் பொருட்கள் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பனை மரங்களை வெட்டும் நபர்களைக் கண்டால் நேரடியாக பொதுமக்கள் போலீசார் இடம் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக உள்ளது. பனை நல வாரியத்தில் ஒரு லட்சம் நபர்களை சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட இறுதியில் பத்தாயிரம் நபர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Embed widget