மேலும் அறிய

10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு செயல்பட தொடங்கிய பனை நல வாரியம் - எர்ணாவூர் நாராயணன்

வேலையில்லாத இளைஞர்களுக்கு பனைத் தொழில் செய்ய பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய கூட்டம் பாளையங்கோட்டையில் வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர் சேர்க்கையை அவர் தொடங்கி வைத்து, பனையேறும் தொழிலாளர்களுக்கு நிவாரணம், கல்வி மற்றும் திருமண உதவித் தொகை ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, கடந்த 23ஆம் தேதி தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பனை நல வாரியம் செயல்படாமல் இருந்தது. 2006ல் உருவாக்கப்பட்ட இந்த வாரியம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுடன் பனைத் தொழிலாளர் நல வாரியம் செயல்படாமல் போனது. 10 ஆண்டுகாலம் பனைத் தொழிலாளர் நல வாரியம் எந்த செயல்பாடும் இல்லாமல் இழுத்து மூடப்பட்டது. இதனால் பனையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதன் மூலம்  கல்விக்கான உதவித் தொகை, பென்சன்,  திருமண உதவி என அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் மக்களை சென்று இதுவரை சேரவில்லை. பத்தாண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக நெல்லை மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை நல வாரியத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் காரியாண்டி பகுதியில் வயது முதிர்ந்த நபர் துரைப்பாண்டி என்பவர் பனைமரம் ஏறி தொழில் செய்து வருகிறார். குழந்தைகள் கைவிடப்பட்டு பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் இந்த தொழிலை செய்து வரும் அவருக்கு பனை நல வாரியம் மூலம் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதி வழங்கப்பட்டுள்ளது.


10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு செயல்பட தொடங்கிய  பனை நல வாரியம்  - எர்ணாவூர் நாராயணன்

தமிழகம் முழுவதும் பனைத் தொழிலாளர்களை கிராமமாக சந்தித்து நலவாரியத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது காவல்துறை தேவை இல்லாமல் வழக்கு பதிவு செய்து வருகிறது. இதனை கைவிட வேண்டும். தமிழக டிஜிபி பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது வழக்கு போட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள நிலையில், வழக்கு போடும் செயலை காவல்துறை கைவிட வேண்டும். பதநீர் விற்பனை செய்ய பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பால் பூத்து போன்று புதிய அங்காடி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வேலையில்லாத இளைஞர்களுக்கு பனைத் தொழில் செய்வதற்கான பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுத்தமான கருப்பட்டி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பனை தொழிலாளர் நல வாரியம் மேற்கொள்ளும்.


10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு செயல்பட தொடங்கிய  பனை நல வாரியம்  - எர்ணாவூர் நாராயணன்

தமிழக அரசு உத்தரவின் பேரில் ரேஷன் கடைகளில் பனைவெல்லம், கருப்பட்டி விற்பனை நடைபெற்று வருகிறது. இருப்பினும் பனைத் தொழிலாளர் நல வாரியம் மூலம் ரேஷன் கடைகளில் பனை கருப்பட்டி விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.  பனை மரத்திலிருந்து மதிப்பு கூட்டுப் பொருட்கள் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பனை மரங்களை வெட்டும் நபர்களைக் கண்டால் நேரடியாக பொதுமக்கள் போலீசார் இடம் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக உள்ளது. பனை நல வாரியத்தில் ஒரு லட்சம் நபர்களை சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட இறுதியில் பத்தாயிரம் நபர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget