![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
நெல்லையில் பரபரப்பு...குடித்துவிட்டு தகராறு செய்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி
குடும்பத்தகராறில் மனைவியே கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
![நெல்லையில் பரபரப்பு...குடித்துவிட்டு தகராறு செய்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி Nellai: A wife who pours boiling oil on her husband after he got into a drunken argument TNN நெல்லையில் பரபரப்பு...குடித்துவிட்டு தகராறு செய்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/24/16f1b51519b20ffd8323f4890af82a191684943289616109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாவட்டம் தெற்கு வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (40), கூலித் தொழிலாளியான இவருக்கும் வீரவநல்லூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த அய்யம்மாள் (35) என்பவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த சூழலில் மாதவன் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அய்யம்மாள் தற்போது அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மனைவி வீட்டுக்கு சென்ற மாதவன் வழக்கம் போல் தகராறு செய்து உள்ளார்.
பின் அங்கேயே தூங்கியதாக தெரிகிறது. ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த மனைவி அய்யம்மாள் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதில் அலறி துடித்த அவர் பலத்த காயமடைந்தார். பின் மாதவன் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தகராறில் மனைவியே கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)