மேலும் அறிய

சிக்கிய உறவினர்! விசாரணையில் கிடுக்குப்பிடி! என்ன செய்யப்போகிறார் நயினார் நாகேந்திரன்!

உறவினர்களிடம் நடத்தப்படும் கிடுக்குப்பிடி விசாரணைகளும், கிடைக்கப்பெறும் தகவல்களும் நயினாருக்கு சாதகமாக அமையுமா? அல்லது எதிராக அமையுமா? என்பது அடுத்தடுத்த விசாரணை நகர்வுகளில் தான் தெரிய வரும்..!

பிடிபட்ட பணம்: 

நெல்லை தொகுதி பாஜக வேட்பாளராக நாடாளுமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் களம் இறங்கியுள்ளார்.  கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் முடிவுக்காக அந்தந்த கட்சி சார்ந்த வேட்பாளர்கள் காத்துள்ளனர். இந்த நிலையில் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக கடந்த 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறக்கும் படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் சதீஷ், அவரின் நண்பர் பெருமாள், நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வந்தது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தாம்பரம் காவல்துறையினர் நயினாருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.. மேலும்  நயினார் நாகேந்திரன் ஹோட்டல் ஊழியர் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரது ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனையும் நடத்தப்பட்டது. இது நயினார் நாகேந்திரனுக்கு பாதகமான  சூழலை உருவாக்கி உள்ளதாக பேசப்பட்டது.

தகுதி நீக்க வழக்கு:

இதனிடையே நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக இரண்டு மனுக்களை தாக்கல்  செய்திருந்தார். அதில் பாஜக வேட்பாளர்  நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நயினார் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

நீதிமன்ற உத்தரவு:

தகுதி நீக்க வழக்கு தொடர்பான மனு மீதான விசாரணை கடந்த 18 ஆம் தேதி வந்தது. அப்போது இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதன்பிறகு பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற மனு மீது கடந்த 22 ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அதில் தேர்தலின் போது பறிமுதல் செய்யப்படும் பணம் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது என்றும் இது தொடர்பாக அமலாக்கத்துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். அதன்படி ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது நயினார் நாகேந்திரனுக்கு சாதகமான சூழலை உருவாக்கியது.

சாதகமா? பாதகமா? 

4 கோடி பிடிபட்டதும் பரபரப்பாக பேசப்பட்டதுடன் அது தொடர்பான நபர்கள் கைது செய்யப்பட்டனர். இது தேர்தல் களத்தில் நயினாருக்கு எதிர்ப்பான சூழலை உருவாக்கியது. அதன்பின் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இது நயினாருக்கு சாதகமான சூழலை உருவாக்கியது, அதன் பிறகு நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, பாஜகவை சேர்ந்த கோவர்தனன் மற்றும் ஜெய்சங்கர், நவீன், பெருமாள் ஆகிய 5 பேருக்கும் காவல்துறை அனுப்பிய சம்மனும்,  நயினாருக்கு எதி்ராக  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் அவருக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதமாக மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் அமலாக்கத்துறை தரப்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது என்று தெரிவிக்கப்பட்டதும், காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு 10 நாட்கள் கால அவகாசம் கேட்டதும் அவருக்கு மீண்டும் சாதகமான சூழலை உருவாக்கியது. இந்த நிலையில் தான் தற்போது மீண்டும்  மே 2 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என நயினார்  நாகேந்திரனுக்கும் அவரது உறவினர் மணிகண்டன் என்பவருக்கும் தாம்பரம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது தற்போது அவருக்கு பாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. தொடர்ச்சியாக பாதகங்களும் அது அவருக்கே சாதகமாக மாறுவதும் நடந்து வருகிறது.

கிடுக்குப்பிடி விசாரணை: 

பிடிபட்ட மூவரிடம் விசாரணை மேற்கொண்டதில் காவல்துறையினரிடம் நயினாருக்கு பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும், நயினாரின் உறவினர் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோர் பணத்தை தந்து அனுப்பியதாகவும் விசாரணையில் சொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அதனையடுத்து அவர்கள் மூவருக்கும் சம்மன் அனுப்பி நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் நயினாரின் உதவியாளர் மணிகண்டன் பணத்தை அனுப்பி வைக்குமாறு பேசினார் என காவல்துறை விசாரணையில் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் மீண்டும் நயினாருக்கும் அவரது உதவியாளருக்கும் சம்மன் அனுப்பி உள்ளது தாம்பரம் காவல்துறை. இது நயினாருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. தொடர்ந்து உறவினர்களிடம் நடத்தப்படும் கிடுக்குப்பிடி விசாரணைகளும், கிடைக்கப்பெறும் தகவல்களும் நயினார் நாகேந்திரனுக்கு சாதகமாக அமையுமா? அல்லது எதிராக அமையுமா? என்பது அடுத்தடுத்த விசாரணை நகர்வுகளில் தான் தெரிய வரும்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget