மேலும் அறிய

தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

எல்லோராலும் சாதிக்க முடியும். முடியாது என்ற எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். முடியாது என கூறுவோரை பக்கத்தில் வைக்காதீர்கள் - அமைச்சர் கீதாஜீவன்

தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'கல்லூரிக் கனவு' எனும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேசும்போது, மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி சிறப்பான திட்டமாகும். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் கிடையாது. வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய நமது பின்புலம் முக்கியம் அல்ல. அதற்கு நானே எடுத்துக் காட்டு. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நான் நாட்டின் மிக உன்னதமான நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளேன். அரசு பள்ளியில் படிப்பது, தமிழ் மொழியில் படிப்பது போன்றவை நமது உயர்வுக்கு எந்த தடையும் இல்லை. தளராத மனமும், கடின உழைப்பும் தான் முக்கியம்.


தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. உங்களது திறமை மீது நம்பிக்கை கொள்ளுங்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முடிவெடுக்க தைரியமாக அனுமதிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டுவிட வேண்டும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். முன்மாதிரியாக யாரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு நீங்கள் தான் முன்மாதிரி. என்ன படிக்க வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள். யாரையும் தேர்வு செய்ய அனுமதிக்காதீர்கள். ஒரே எண்ணம் கொண்டவர்களாக இருக்காதீர்கள். பொறியியல் படித்தால் தான் இஸ்ரோவில் வேலைக்கு வரமுடியும் என நினைக்காதீர்கள். என்ன படித்தாலும் இஸ்ரோவில் வேலை இருக்கு. நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். புதுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி பேசும்போது, கல்லூரி கனவு என்பது உங்களுடைய கனவுகளாக மட்டுமே இருக்க வேண்டும். அது வேறு யாருடைய கனவாகவும் இருக்கக்கூடாது. இன்னொருவருடைய ஆசைகளை நாம் நிறைவேற்ற முடியாது. நம்முடைய திறமை, ஆர்வம் எதில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கு, ஆர்வம் இருக்கு. ஒவ்வொருவருக்கும் தனித்தனி இயல்பு இருக்கிறது. அதற்கு எதிராக எதையும் திணிக்க முடியாது. பள்ளி படிப்பை முடித்த உங்கள் முன்பு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பல துறைகள் உள்ளன. எல்லா துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு நிச்சயமாக அதில் இருக்கிறது. ஆனால் அதற்கான சிறிய தேடல் அவசியம். தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் நம்பிக்கையோடு முன்னேற வேண்டும் என்றார்.


தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, மாணவர்கள் என்னால் முடியும் என முதலில் நம்ப வேண்டும். இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். எல்லோருக்கும் திறமைகள் இருக்கின்றன. எனவே, எல்லோராலும் சாதிக்க முடியும். முடியாது என்ற எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். முடியாது என கூறுவோரை பக்கத்தில் வைக்காதீர்கள். எதையும் ஈடுபாட்டோடு தன்னம்பிக்கையோடு செய்யுங்கள் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்றார் .

நிகழ்ச்சியில் ஐஎப்எஸ் தேர்வில் வெற்றிபெற்ற தேசிய அளவில் 57-வது ரேங்க் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வனவராக பணியாற்றி வரும் சுப்புராஜை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.


தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் நம்பிக்கையோடு முன்னேறுங்கள் - கனிமொழி எம்.பி.,

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, தமிழகத்தின் தனித்துவத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், ஸ்பிக் நிறுவனமும் இணைந்து நெய்தல் தூத்துக்குடி கலை விழா' என்ற விழாவை நடத்துகிறது. இந்த விழா அடுத்த மாதம் (ஜூலை) 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 4 நாட்கள் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் வைத்து நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கலை விழா நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 300 கிராமிய கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு குழுக்களாக கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்த கலை விழாவில் உணவுத்திருவிழாவும் நடத்தப்படுகிறது. இதற்காக சுமார் 20 உணவு சார்ந்த அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வகையிலான அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Embed widget