மேலும் அறிய

Jayakumar Case: பின் தங்கி செல்கிறதா ஜெயக்குமார் மரண வழக்கு.? - குற்றம் சாட்டும் நெல்லை காங்கிரசார்...!

ஜெயக்குமார் மரண வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு தக்க தண்டனையை அரசு வழங்க வேண்டும். இது போன்ற சம்பவம் காங்கிரசார் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை தருகிறது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மே இரண்டாம் தேதி காணாமல் போன நிலையில் நான்காம் தேதி அவரது உடல் அவரது தோட்டத்திலேயே பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உவரி காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த வழக்கு அம்மாதம் (மே) 22ஆம் தேதி சி பி சி ஐ டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி வந்தனர். ஜெயக்குமாரின் மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதோடு சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐஜி அன்பு, எஸ்பி முத்தரசி உள்ளிட்டோர் நெல்லையில் முகாமிட்டு பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். அவர் எழுதியதாக குறிப்பிடப்பட்ட கடிதத்தில் இடம் பெற்ற முப்பதுக்கு மேற்பட்ட நபர்களிடமும் விசாரணை நடைபெற்றது.  நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இருந்தும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது வரை இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற முடிவுக்கு சிபிசிஐடி காவல்துறையினர் வர முடியாத சூழல் உள்ளதாக தெரிகிறது.  தற்போது விசாரணையின் நிலை என்ன என்பது குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில் இந்த வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில்  நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பால்ராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். தொடர்ந்து இதுகுறித்து இரண்டு மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட பொருளாளர் பால்ராஜ் கூறுகையில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இறந்து 60 நாட்கள் ஆகின்றது. இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள். அதன்பின்புலம் என்ன என்பது குறித்து விசாரணை சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அதுபற்றி எந்த தகவலும் தற்போது வரை இல்லை. ஒரு வேளை இந்த வழக்கு பின் தங்கி செல்கிறதா என்பது போல் தெரிகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு தக்க தண்டனையை அரசு வழங்க வேண்டும். இது போன்ற சம்பவம் காங்கிரசார் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை தருகிறது. அரசும், முதல்வரும் இந்த விசயத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் என காத்திருக்கிறோம். இருப்பினும் காலதாமதாகிவிட்டது.  நாங்கள் மட்டுமின்றி மக்களும் இந்த வழக்கு குறித்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றார். தொடர்ந்து சிபிஐ விசாரணை கோரிக்கை விருப்பீர்களா என்ற  கேள்விக்கு அது குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் பதிலளித்தார்.

அது போல நாங்கள் அளித்த மற்றொரு மனுவில், நாங்குநேரி தாலுகாவிற்கு உட்பட்ட களக்காடு நகராட்சி பேருந்து நிலையம் தற்போது களக்காடு நகராட்சி பேருந்து நிலையம் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கு பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக தெரிய வருகிறது. அவ்வாறு பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஆட்சியரிடம் மனுவாக  வழங்கப்பட்டுள்ளது. இதில் திரளான காங்கிரசார் கலந்து கொண்டனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget