மேலும் அறிய

நெல்லை குவாரி விபத்து: 30 மணி நேர போராட்டத்திற்கு பின் 5 வது நபர் சடலமாக மீட்பு

”குவாரி விபத்தில் மீட்கப்பட்ட 5பேரில் 2பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவரது உடலை மீட்கும் பணி நாளை தொடாங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்”

நெல்லை  மாவட்டம்   அடைமிதிப்பான்குளம் கல் குவாரியில் கடந்த 14 -தேதி இரவில் நிலச்சரிவு ஏற்பட்டது.  இதில் ஆறு பேர் குவாரிக்குள் சிக்கி கொண்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முருகன்,  விஜய் ஆகிய இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து பல மணி நேரம் உயிருக்காக போராடிய கிட்டாச்சி ஆப்பரேட்டர் செல்வம் ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நெல்லை மருத்துவமனையில் உயிரிழந்தார்.  இந்த நிலையில் திங்கட்கிழமை இரவில் லாரி கிளீனர் செல்வத்தின் உடல் மீட்கப்பட்டது.


நெல்லை குவாரி விபத்து: 30 மணி நேர போராட்டத்திற்கு பின் 5 வது நபர் சடலமாக மீட்பு

இந்த நிலையில் நேற்று காலை ஐந்தாவது நபரின் உடல் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டது. அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் விரைவு படுத்தப்பட்டது. ஆனால் பாறைகளுக்கு இடையில் அவரது உடல் சிக்கி இருப்பதால் உடலை மீட்க முடியவில்லை. நள்ளிரவு வரை நீண்ட மீட்பு போராட்டம் வெற்றி பெறவில்லை. இரவில் பாறைகளை அகற்றி உடலை கைப்பற்ற முயற்சித்த நிலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட  தொடங்கியது. இதன் காரணமாக மீட்புப்பணிகள் இரவு 11:30 மணியளவில் கைவிடப்பட்டது.


நெல்லை குவாரி விபத்து: 30 மணி நேர போராட்டத்திற்கு பின் 5 வது நபர் சடலமாக மீட்பு

இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக மீட்பு பணி காலை 11.30 மணிக்கு மேல் துவங்கியது. மண்ணியல் நிபுணர்கள் சுரங்கத்துறை வல்லுநர்கள் என அனுபவிக்க நபர்கள் காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு படையினருடன் ஆலோசனை செய்த நிலையில் பாறையில் துளையிட்டு வெடி மருந்துகளை வைத்து தகர்த்து உடலை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 20 ஜெலட்டின் குச்சிகள் கொண்டு வரப்பட்டது. மேலும் பாறையில் துளையிடும் இயந்திரம்  மூலம் துளையிடப்பட்டு 10 குச்சி  வெடிமருந்துகள் செலுத்தப்பட்டது. மீட்பு பணிகளில் ஈடுபடும் நபர்கள் பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கி கொள்ள  பாறை தகர்க்கப்பட்டது. இதனையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது, 


நெல்லை குவாரி விபத்து: 30 மணி நேர போராட்டத்திற்கு பின் 5 வது நபர் சடலமாக மீட்பு

நேற்று காலையே உடல் அடையாளம் கண்ட நிலையில் 30 மணி நேரத்தை கடந்தும் 5 வது நபரை மீட்கும்  பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று  6.45 மணி அளவில் உடல் மீட்கப்பட்டது, மீட்கப்பட்ட நபரின் உடையில் இருந்து எடுக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம், மணிபர்ஸ் அவர் அணிந்திருந்த உடை இவற்றை கொண்டு அவரின் உறவினர்கள் சடலமாக மீட்கப்பட்டவர் செல்வகுமார் என அடையாளம் கண்டறிந்தனர். மேலும் செல்வகுமாரின் சகோதரர் மாதவனும் மீட்கப்பட்ட சடலம் செல்வகுமாரின் உடல் தான் என உறுதி செய்தார், இதனை தொடர்ந்து செல்வகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கல்குவாரியில் சிக்கி இருக்கும் 6 வது நபரான  ராஜேந்திரனின் உடலை மீட்கும் பணி நாளை காலை தொடங்கும் என  ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்,

தலைப்பு செய்திகள்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா தொடக்கம்! முக்கிய நிகழ்ச்சிகள் என்ன?
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா தொடக்கம்! முக்கிய நிகழ்ச்சிகள் என்ன?
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்: கைபேசி வைத்திருந்தால் பறிமுதல் – புதிய அறிவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்: கைபேசி வைத்திருந்தால் பறிமுதல் – புதிய அறிவிப்பு
ரயில்வே அதிரடி அறிவிப்பு: அந்தியோதயா மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் பகுதி ரத்து!
ரயில்வே அதிரடி அறிவிப்பு: அந்தியோதயா மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் பகுதி ரத்து!
Power Cut: உஷார் மக்களே! திருநெல்வேலியில் நாளை(16.6.26) மின் தடை.. முழு விவரம் இதோ!
Power Cut: உஷார் மக்களே! திருநெல்வேலியில் நாளை(16.6.26) மின் தடை.. முழு விவரம் இதோ!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Compact EV: மூன்று SUV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் EV - தேறுமா?
மூன்று EV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் SUV - தேறுமா?
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
Embed widget