மேலும் அறிய

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் டெண்டர் முறைகேடுகள் குறித்து விசாரணை வேண்டும் - ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

வருடாந்திர வேலைகளில் அனைவரும் பங்கேற்கும் வகையில் மூன்று வருடத்திற்கு முன் இருந்தது போல் டெண்டர் வைக்கப்பட்டால் எங்களை போன்றவர்கள் மிக குறைந்த விலைபுள்ளிகள் கொடுத்து வேலை பெற்று செய்ய முடியும்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் டெண்டர் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் டெண்டர் முறைகேடுகள் குறித்து விசாரணை வேண்டும் - ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

இது தொடர்பாக தூத்துக்குடி அனல் மின் நிலைய தலைமை பொறியாளருக்கு ஒப்பந்ததாரர்கள் அளித்துள்ள மனுவில், "28.06.2024 அன்று நடைபெற்ற மெயின்டனன்ஸ் பணிக்கான சிவில் டென்டரில் கலந்து கொண்ட ராஜம் ஒப்பந்ததாரரின் டெண்டரில் இரண்டு லட்சம் குறைவான ரேட் போட்டும் எந்தவித பரிசீலனையும் செய்யப்படாமல் முன் வேலை செய்த அனுபவம் வைத்திருந்தும் இல்லையென வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டுள்ளது. 

அதே டெண்டரில் மற்றொரு கோகுல் ஒப்பந்ததாரரின் டெண்டர் அவசரகதியில் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு முன் வேலை செய்த எந்த அனுபவம் இல்லை. 01.04.2024 முதல் 30.06.2024 வரை முடிவுறாத O.N மூலம் கொடுக்கப்பட்ட பராமரிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் வேலையை வைத்து முன் அனுபவமாக எடுத்து ஒப்பன் செய்துள்ளார்கள். இதற்கு முன்னும் இதே போன்று புதியதாக வந்த MSC காண்ட்ராக்டரிடமும் பேரம் பேசி ON மூலம் மூன்று மாதம் நாமினேஷனாக வேலையைக் கொடுத்து அவருக்கு முன் அனுபவம் வந்துவிட்டது என்று கூறி மெயின்டனன்ஸ் வேலைகளை கொடுத்துள்ளனர். 

இதனால் சாதாரண பணிகளான தூய்மை பணி, குப்பை அள்ளும் பணி, தண்ணீர் திறக்கும் பணி, ரூப்டாப் கிளினிங் பணி, ட்ரெயினேஜ் கிளினிங் பணி என அனைத்திற்கும் சிமிலர் டைப் ஒர்க் ஆர்டர் வைத்தால்தான் டெண்டர் ஒப்பன் செய்யப்படும் என்ற நிலையை தூ.அ.மி.நி சிவில் நிர்வாகம் ஏற்படுத்தி போட்டியாளர்களே இல்லாமல் வருடாந்திர பராமரிப்பு வேலைகளை முடித்து அதிகாரிகள் சுய இலாபம் பார்த்து விடுகின்றனர். 


தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் டெண்டர் முறைகேடுகள் குறித்து விசாரணை வேண்டும் - ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

இதனால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு வருடத்திற்கு கோடி கணக்கில் இழப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வாறான சிமிலர் டைப் ஒர்க் ஆர்டர் வைத்தால் தான் பராமரிப்பு வேலை அட்டன் செய்ய முடியும் என்பது கடந்த மூன்று வருடங்களாக உள்ளது.அதற்கு முன்னர் கிடையாது. இதனால் எங்களை போன்ற ஒப்பந்ததாரர்கள்.

வருடாந்திர வேலைகளை டெண்டர் எடுக்க முடியாத நிலை உள்ளது. புதிதாக வரும் வருடாந்திர பராமரிப்பு வேலைகளையும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு O.N ஓர்க் மூலம் மூன்று மாதங்களுக்கு வேலையை கொடுத்து அதையே முன் அனுபவமாக வைத்து வருடாந்திர வேலைகளை கொடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோடிகணக்கில் லாபம் பார்த்து விடுகின்றனர். வருடாந்திர பராமரிப்பு வேலைகள் அனைத்திலும் இரண்டு கான்ட்ராக்டர்கள் மட்டுமே அட்டன் செய்ய வைக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவருக்கு எஸ்டிமேட்டில் பெயரளவுக்கு ஆயிரம் ரூபாய் குறைத்து ஒர்க் ஆர்டர் வழங்குகின்றனர். 


தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் டெண்டர் முறைகேடுகள் குறித்து விசாரணை வேண்டும் - ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

இந்த வருடாந்திர வேலைகளில் அனைவரும் பங்கேற்கும் வகையில் மூன்று வருடத்திற்கு முன் இருந்தது போல் டெண்டர் வைக்கப்பட்டால் எங்களை போன்றவர்கள் மிக குறைந்த விலைபுள்ளிகள் கொடுத்து வேலை பெற்று செய்ய முடியும். இதனால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். நியாயமான தீர்ப்பு வரும் வரை டெண்டரில் கலந்து கொண்டவர்களுக்கு ஆணை வழங்க கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

"விஜய் பக்குவமா நடந்துக்கணும்” - ஜாமீனில் வந்த பிறகும் மீண்டும் முதல்வர் குறித்து மார்க்கண்டேயன் சர்ச்சை பேச்சு
நாகப்பட்டினம் - தூத்துக்குடி 4 வழிச் சாலை: புது ரூட் மேப் தயார்! நிலம் கையகப்படுத்த 'பிரேக்'!
நாகப்பட்டினம் - தூத்துக்குடி 4 வழிச் சாலை: புது ரூட் மேப் தயார்! நிலம் கையகப்படுத்த 'பிரேக்'!
சிரித்து ‘ஜனநாயகன்’ பார்த்த அமைச்சர்கள் - மகனை இழந்த தாய் கண்ணீர்
சிரித்து ‘ஜனநாயகன்’ பார்த்த அமைச்சர்கள் - மகனை இழந்த தாய் கண்ணீர் "விசிலுக்கு ஓட்டு போட்டவங்க அனுபவிக்கிறாங்க" - நயினார்
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget