மேலும் அறிய

வல்லநாடு ஆற்று பாலத்தில் 4 ஆண்டுக்கு பிறகு இருவழி பாதைகளில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த வல்லநாடு ஆற்று பாலம் சீரமைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.


வல்லநாடு ஆற்று பாலத்தில் 4 ஆண்டுக்கு பிறகு இருவழி பாதைகளில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம்ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2013-ம்ஆண்டு முடிவடைந்து வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இந்த நான்குவழிச் சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.


வல்லநாடு ஆற்று பாலத்தில் 4 ஆண்டுக்கு பிறகு இருவழி பாதைகளில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

ஆனால், இந்த பாலம் அடிக்கடி சேதமடைந்து வந்தது. பாலம் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளிலேயே கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலத்தின் ஒரு பகுதியில் (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) நடுவே பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் சுமார் 6 மாத காலம் இந்த பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ரூ.3.14 கோடி ஒதுக்கப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி பாலத்தின் மற்றொரு பகுதியில் (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) 2 பெரிய ஓட்டைகள் விழுந்து சேதம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து இரு மார்க்கங்களில் செல்லும் அனைத்து வாகனங்களும் ஒருவழிப் பாதை (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) வழியாக திருப்பி விடப்பட்டன. சுமார் 4 ஆண்டுகளாக வாகனங்கள் அனைத்தும் ஒருவழிப் பாதை வழியாகவே சென்று வந்தன. இந்த ஒரு வழிப்பாதையிலும் அடிக்கடி ஓட்டை விழுந்து பாதிப்பு ஏற்பட்டு, தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வந்தனர்.


வல்லநாடு ஆற்று பாலத்தில் 4 ஆண்டுக்கு பிறகு இருவழி பாதைகளில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

இந்நிலையில் சேதமடைந்த வல்லநாடு ஆற்று பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. பாலத்தின் இரு பகுதிகளையும் முழுமையாக நவீன தொழில் நுட்பத்தில் சீரமைக்க ரூ.13.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 12 மாதங்களில் பணிகளை முடிக்கும் வகையில் ஒப்பந்தம் விடப்பட்டது. பணிகள் தொடங்கி ஓராண்டு கடந்துள்ள நிலையில் பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழியாக (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) தற்போது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது பாலத்தின் இரு வழியிலும் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் எந்த சிரமமும் இல்லாமல் வல்லநாடு ஆற்று பாலத்தை கடந்து வருகின்றனர், மழை காலம் முடிவடைந்ததும் பாலத்தின் மற்றொரு பகுதியில் (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். இந்த பகுதியில் பாலத்தின் அடியில் செய்ய வேண்டிய பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டதால், சீரமைப்பு பணிகள் 2 மாதங்களில் முடிவடைந்து விடும். இந்த பணிகள் நடைபெறும் போது வாகனங்கள் அனைத்தும் மீண்டும் ஒரு வழிப்பாதையில் (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) திருப்பி விடப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
Egg Yolk: ஆத்தி..! முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Egg Yolk: ஆத்தி..! முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Embed widget