மேலும் அறிய

சான்றிதழ்களுக்கு அதிக கட்டணம் வசூல் - திருவாரூரில் இ-சேவை மையத்தில் கலெக்டர் திடீர் ரெய்டு..!

அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை வசூலிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் வந்ததையடுத்து, ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அதிரடியாக தனியார் இ-சேவை மையத்தில் நுழைந்து சோதனை நடத்தினார். 

திருவாரூர் மாவட்டம் ஏழைகள் விவசாயக் கூலி தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம். அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான  சான்றிதழ்களை பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழ்நிலை நிலவியதால் தனியார் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எளிதாக பெற்றுக் கொள்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் அரசு நிர்ணயம் செய்த தொகையினை தனியார் இ-சேவை மையங்களில் செலுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் விளமல் பகுதியில் இயங்கி வரும் அன்னை சிஸ்டம்ஸ் என்கிற தனியார் இ-சேவை மையத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ்,  இறப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் விதவை சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம்  போன்ற பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கு அரசு நிர்ணயித்த தொகையான 60 ரூபாயை விட அதிக தொகை வசூலிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் வந்ததையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அதிரடியாக அன்னை சிஸ்டம்ஸ் தனியார் இ-சேவை மையத்தில் நுழைந்து சோதனை நடத்தினார். 


சான்றிதழ்களுக்கு அதிக கட்டணம் வசூல் - திருவாரூரில் இ-சேவை மையத்தில் கலெக்டர் திடீர் ரெய்டு..!

இதில், அந்த தனியார் இ-சேவை மையத்தில் எந்த சேவைக்கு எவ்வளவு பணம் வசூலிக்கப்படும் என்கிற உரிய அறிவிப்பு பலகை ஏதும் இல்லை. மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த ஆவணங்களை சோதனை செய்தார். அங்கு சான்றிதழ் விண்ணப்பிக்க வந்திருந்த பொதுமக்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் தலைமையில் இந்த தனியார் இ-சேவை மையத்தில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும் அனைத்து இ-சேவை மையங்களிலும் வசூலிக்கப்படும் தொகை குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். உரிய விசாரணைக்கு பின் இந்த தனியார் இ-சேவை மையம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். 


சான்றிதழ்களுக்கு அதிக கட்டணம் வசூல் - திருவாரூரில் இ-சேவை மையத்தில் கலெக்டர் திடீர் ரெய்டு..!

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து இ-சேவை மையங்களும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற விண்ணப்பிப்பதற்கு அறுபது ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ளது. நான் சில தனியார் இ-சேவை மையங்கள் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. குறிப்பாக விளம்பர பகுதியில் இயங்கி வரும் இந்த அன்னை சிஸ்டம்ஸ் தனியார் இ சேவை இணையத்தில் அரசு நிர்ணயித்த தொகை விட அதிக தொகை வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து தற்போது இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இ-சேவை மையங்களிலும் சான்றிதழ்களை விண்ணப்பிப்பதற்கு அரசு நிர்ணயித்த தொகை எவ்வளவு என்பதை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget