மேலும் அறிய

சான்றிதழ்களுக்கு அதிக கட்டணம் வசூல் - திருவாரூரில் இ-சேவை மையத்தில் கலெக்டர் திடீர் ரெய்டு..!

அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை வசூலிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் வந்ததையடுத்து, ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அதிரடியாக தனியார் இ-சேவை மையத்தில் நுழைந்து சோதனை நடத்தினார். 

திருவாரூர் மாவட்டம் ஏழைகள் விவசாயக் கூலி தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம். அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான  சான்றிதழ்களை பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழ்நிலை நிலவியதால் தனியார் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எளிதாக பெற்றுக் கொள்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் அரசு நிர்ணயம் செய்த தொகையினை தனியார் இ-சேவை மையங்களில் செலுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் விளமல் பகுதியில் இயங்கி வரும் அன்னை சிஸ்டம்ஸ் என்கிற தனியார் இ-சேவை மையத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ்,  இறப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் விதவை சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம்  போன்ற பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கு அரசு நிர்ணயித்த தொகையான 60 ரூபாயை விட அதிக தொகை வசூலிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் வந்ததையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அதிரடியாக அன்னை சிஸ்டம்ஸ் தனியார் இ-சேவை மையத்தில் நுழைந்து சோதனை நடத்தினார். 


சான்றிதழ்களுக்கு அதிக கட்டணம் வசூல் - திருவாரூரில் இ-சேவை மையத்தில் கலெக்டர் திடீர் ரெய்டு..!

இதில், அந்த தனியார் இ-சேவை மையத்தில் எந்த சேவைக்கு எவ்வளவு பணம் வசூலிக்கப்படும் என்கிற உரிய அறிவிப்பு பலகை ஏதும் இல்லை. மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த ஆவணங்களை சோதனை செய்தார். அங்கு சான்றிதழ் விண்ணப்பிக்க வந்திருந்த பொதுமக்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் தலைமையில் இந்த தனியார் இ-சேவை மையத்தில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும் அனைத்து இ-சேவை மையங்களிலும் வசூலிக்கப்படும் தொகை குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். உரிய விசாரணைக்கு பின் இந்த தனியார் இ-சேவை மையம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். 


சான்றிதழ்களுக்கு அதிக கட்டணம் வசூல் - திருவாரூரில் இ-சேவை மையத்தில் கலெக்டர் திடீர் ரெய்டு..!

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து இ-சேவை மையங்களும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற விண்ணப்பிப்பதற்கு அறுபது ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ளது. நான் சில தனியார் இ-சேவை மையங்கள் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. குறிப்பாக விளம்பர பகுதியில் இயங்கி வரும் இந்த அன்னை சிஸ்டம்ஸ் தனியார் இ சேவை இணையத்தில் அரசு நிர்ணயித்த தொகை விட அதிக தொகை வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து தற்போது இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இ-சேவை மையங்களிலும் சான்றிதழ்களை விண்ணப்பிப்பதற்கு அரசு நிர்ணயித்த தொகை எவ்வளவு என்பதை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் ரயில் நிலைய வளாகத்தில் ரயில் பெட்டி உணவகம் திறப்பு
தஞ்சாவூர் ரயில் நிலைய வளாகத்தில் ரயில் பெட்டி உணவகம் திறப்பு
வெட்டுப்பட்ட கால் எலும்புகளை சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து சாதித்த காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள்
வெட்டுப்பட்ட கால் எலும்புகளை சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து சாதித்த காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள்
ஆலக்குடி பகுதியில் சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் வெகு மும்முரம்
ஆலக்குடி பகுதியில் சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் வெகு மும்முரம்
பைபாஸ் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் என மக்கள் அச்சம்
பைபாஸ் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் என மக்கள் அச்சம்
ABP Premium

வீடியோ

DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்
OPS meets MK Stalin | ஸ்டாலின் - OPS சந்திப்பு! திமுக கூட்டணியில் OPS? சட்டப்பேரவையில் சம்பவம்
DMK Vs Congress | டர்ரு விடும் காங்கிரஸ் ஸ்டாலின் சீக்ரெட் Operation தட்டி தூக்கிய தளபதிகள்
MK Stalin | ”ஸ்டாலின் அல்லது மம்தா” I.N.D.I.A கூட்டணி தலைவர் பதவி! சீனுக்கு வந்த உத்தவ் தாக்கரே
AI Summit 2026 | இந்தியா மானமே போச்சு.. AI மாநாட்டில் சீன ரோபோ! சீட்டிங் செய்த உ.பி UNIVERSITY

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi slams Congress:
PM Modi slams Congress: "நாட்டையே அசிங்கப்படுத்திட்டீங்க" காங்கிரஸை அக்கு அக்காய் விமர்சித்த பிரதமர் மோடி
ADMK: பில்லே சாட்சி பிரச்சாரம்.. ஸ்பீடை ஏத்தும் அதிமுக! வீடு,வீடாய் போகச் சொன்ன இபிஎஸ்!
ADMK: பில்லே சாட்சி பிரச்சாரம்.. ஸ்பீடை ஏத்தும் அதிமுக! வீடு,வீடாய் போகச் சொன்ன இபிஎஸ்!
T20 WC ENG vs SL: தட்டுத் தடுமாறிய இ்ங்கிலாந்து! பவுலிங்கில் மிரட்டிய இலங்கை - சூப்பர் 8ல் வெற்றி யாருக்கு?
T20 WC ENG vs SL: தட்டுத் தடுமாறிய இ்ங்கிலாந்து! பவுலிங்கில் மிரட்டிய இலங்கை - சூப்பர் 8ல் வெற்றி யாருக்கு?
ஒரே சார்ஜில் 530 கிலோமீட்டர் மைலேஜ்.. 7 சீட்டர்.. BYD eMax 7 மின்சார கார் எப்படி?
ஒரே சார்ஜில் 530 கிலோமீட்டர் மைலேஜ்.. 7 சீட்டர்.. BYD eMax 7 மின்சார கார் எப்படி?
DMK alliance seat allocation : எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? ஆட்டத்தை ஆரம்பித்த திமுக- யார் யாருக்கு அழைப்பு.?
எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? ஆட்டத்தை ஆரம்பித்த திமுக- யார் யாருக்கு அழைப்பு.?
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. சென்சார் போர்டை விளாசித் தள்ளிய விஷால் - இப்படியா சொன்னாரு?
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. சென்சார் போர்டை விளாசித் தள்ளிய விஷால் - இப்படியா சொன்னாரு?
Kader Mohideen Health update: திடீரென சரிந்த காதர் மொகிதீன்.! அறிவாலயத்தில் நடந்தது என்ன.? உடல்நிலை இப்போ எப்படி இருக்கு.?
திடீரென சரிந்த காதர் மொகிதீன்.! அறிவாலயத்தில் நடந்தது என்ன.? உடல்நிலை இப்போ எப்படி இருக்கு.?
Namo Bharat Train: 82.15KM தூரம்..! 55 நிமிஷம் தான், 180KM ஸ்பீட் - 12KM பூமிக்கு கீழ - மிரட்டலான நமோ பாரத் ரயில்
Namo Bharat Train: 82.15KM தூரம்..! 55 நிமிஷம் தான், 180KM ஸ்பீட் - 12KM பூமிக்கு கீழ - மிரட்டலான நமோ பாரத் ரயில்
Embed widget