மேலும் அறிய

டெல்டா மாவட்டங்களில் மழை - திருப்பனந்தாள் ஒன்றியத்தில் நெல் மூட்டைகள் சேதமாகும் அபாயம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநாகேஸ்வரம் நெல் கிடங்கில் மழையினால் 75 ஆயிரம் நெல் மூட்டைகளை வீணானது. இதனால் சுமார் பல லட்ச ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட மானம்பாடி, திருவாய்பாடி, சிறுகடம்பூர், கீழமணக்குடி, ஆரலூர், பந்தநல்லூர், நெய்க்குப்பை, முளையூர், காவலூர் உள்ளிட்ட பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 10,000 மூட்டைகள் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அரசு கிடங்கிற்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் வராததால் அந்தந்த மையங்களில் எவ்வித பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது தற்பொழுது மழை தொடர் மழை பெய்து வருவதால்,  இம்மையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதற்கு வாய்ப்பு உள்ளது மேலும் நெல் மூட்டைகள வீணாகும் நிலையில் சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலைய ஊழியர்களே நஷ்டத்தை ஏற்கும் நிலை ஏற்படும்.

ஆகவே உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான கிடங்கிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்து வைத்திடவும்  மணிக்கொடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்களில் சாக்கு இல்லாமல் கொள்முதல் தடைபட்டு இருப்பதையும் உடனடியாக கொள்முதல் செய்ய சாக்குகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் கும்பகோணம் கோட்டாட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.


டெல்டா மாவட்டங்களில் மழை - திருப்பனந்தாள் ஒன்றியத்தில் நெல் மூட்டைகள் சேதமாகும் அபாயம்

இருப்பினும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக  விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர் கொள் முதல் நிலையத்தை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் மாவட்ட குழு உறுப்பினர்  சா.ஜீவபாரதி ஒன்றிய செயலாளர் டி ஜி ராஜேந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி கரும்பு விவசாயிகள் சங்க பொறுப்பாளர் காசிநாதன் விவசாய சங்க சாமிக்கண்ணு உள்ளிட்டோர் பார்வையிட்டனர். 

இது குறித்து சின்னை பாண்டியன் கூறுகையில், திருப்பனந்தாள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, கொள் முதல் நிலையத்தில் வைத்துள்ளனர். விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு, தண்ணீரை கடனாக பெற்று, விவசாயம் செய்த நிலையில், அதிகாரிகள் அலட்சியத்துடன் இருப்பது வேதனையான விஷயமாகும்.


டெல்டா மாவட்டங்களில் மழை - திருப்பனந்தாள் ஒன்றியத்தில் நெல் மூட்டைகள் சேதமாகும் அபாயம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநாகேஸ்வரம் நெல் கிடங்கில் மழையினால் 75 ஆயிரம் நெல் மூட்டைகளை வீணானது. இதனால் சுமார் பல லட்ச ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது. தற்போது விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை கடமைக்காக கொள் முதல் செய்து, லாரி வரவில்லை என பதில் கூறவது ஏற்புடையதல்ல. வானிலை மையம் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவித்து உள்ளனர். எனவே. கொள் முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான கிடங்கிற்கு எடுத்து செல்லா விட்டால், அரசுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும். விவசாயிகளின் கஷ்டத்தை புரிந்தும், அரசு பணத்தை விரயமாக்குவதை கவனத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் நெல் மூட்டைகளை எடுத்து செல்ல வேண்டும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
PUD TVK Vijay Roadshow: புதுச்சேரி விஜய் ரோடு ஷோவுக்கு சிக்கல்; அனுமதி மறுத்த காவல்துறை;சபாநாயகர் செல்வம் கூறுவது என்ன.?
புதுச்சேரி விஜய் ரோடு ஷோவுக்கு சிக்கல்; அனுமதி மறுத்த காவல்துறை;சபாநாயகர் செல்வம் கூறுவது என்ன.?
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
PUD TVK Vijay Roadshow: புதுச்சேரி விஜய் ரோடு ஷோவுக்கு சிக்கல்; அனுமதி மறுத்த காவல்துறை;சபாநாயகர் செல்வம் கூறுவது என்ன.?
புதுச்சேரி விஜய் ரோடு ஷோவுக்கு சிக்கல்; அனுமதி மறுத்த காவல்துறை;சபாநாயகர் செல்வம் கூறுவது என்ன.?
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget