மேலும் அறிய

திடீர் மழையால் தஞ்சாவூரில் 20,000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

’’ஈச்சன்விடுதியில் 21 செ.மீ , பட்டுக்கோட்டை 18 செ.மீ, அதிராம்பட்டினம் 15 செ.மீ, மதுக்கூர் 10 செ.மீ மழை பதிவு’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வயல்களில் மழைநீர்  தேங்கி உள்ளது. வடிகால்கள் முறையாக இல்லாத காரணத்தால் மழைநீர் தொடர்ந்து தேங்கியதால், அறுவடைக்கு சில நாட்களே இருந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் நெல்மணிகள் தண்ணீரில் நனைந்து சேதமாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பாக திட்டை, அன்னப்பன்பேட்டை, மெலட்டூர், சாலியமங்கலம், காசவளநாடுபுதூர், கண்டிதம்பட்டு, ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, செ.புதூர், ஆடுதுறை, திருமங்கலக்குடி, பந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்கதிர்கள் மழையால் கீழே விழுந்து சேதமடைந்துள்ளது. அடுத்த சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இந்த நெற்கதிர்கள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


திடீர் மழையால் தஞ்சாவூரில் 20,000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

அதே போல் திருவோணம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 100 ஏக்கர் நிலக்கடலை, உளுந்து வயலில் மழைநீர் தேங்கியதால் கடலை, உளுந்து  செடிகள் அழுகத் தொடங்கியுள்ளது.நேற்று முன்தினம் தொடர்ந்து மழை பெய்ததால், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது.இதனால் போலீஸார் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி ஈச்சன்விடுதியில் 21 செ.மீ மழை பதிவானது. மேலும், பட்டுக்கோட்டை 18 செ.மீ, அதிராம்பட்டினம் 15 செ.மீ, மதுக்கூர் 10 செ.மீ, தஞ்சாவூர் 8.5 செ.மீ,  அணைக்கரை 7.8 செ.மீ,  வெட்டிக்காடு 7.6 செமீ, அய்யம்பேட்டை 6.2 செ.மீ, மஞ்சளாறு 5.5 செ.மீ, குருங்குளம் 4.7 செ.மீ, திருவையாறு 4.6 செ.மீ, பாபநாசம் 4.1 செ.மீ, ஒரத்தநாடு 4.0 செ.மீ, திருக்காட்டுப்பள்ளி 4.0 செ.மீ, பூதலூர் 4.0 செ.மீ,  திருவிடைமருதூர் 3.8 செ.மீ, கும்பகோணம் 3.5 செ.மீ, கல்லணை 2.5 செ.மீ, வல்லம் 2.0 செ.மீ  மழை பதிவாகியுள்ளது.


திடீர் மழையால் தஞ்சாவூரில் 20,000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

இது குறித்து விவசாயி சீனிவாசன் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவ மழை பெய்த போது,வாய்க்கால்களை துார் வாராததால் நடவு செய்த வயல்களில் மழை நீர் தேங்கி அழுகும் நிலை ஏற்பட்டது.  பின்னர் தமிழக அரசு, கடமைக்காக ஒரு சில இடத்தில் பார்வையிட்டு சென்றனர். விவசாயிகள் மீண்டும் பல்வேறு உரங்களை தெளித்து நாற்றுக்களை காப்பாற்றினர். ஆனால் தமிழக அரசு இடு பொருள், உரங்களை தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்று அறிவித்தது. ஆனால் இடு பொருளும் வரவில்லை. உரங்களும் அதிக விலைக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டது.  கடந்த மழை காலத்தில், விவசாயிகள் எச்சரித்தும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததால், தற்போது பெய்த மழையால் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. எனவே, தமிழக அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்து, பாதிக்கப்பட்ட வயல்களில் மழை நீர் தேங்குவதற்கான காரணத்தை கண்டுபிடித்து, தவறு இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
தஞ்சாவூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி: மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
தஞ்சாவூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி: மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget