மேலும் அறிய

திடீர் மழையால் தஞ்சாவூரில் 20,000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

’’ஈச்சன்விடுதியில் 21 செ.மீ , பட்டுக்கோட்டை 18 செ.மீ, அதிராம்பட்டினம் 15 செ.மீ, மதுக்கூர் 10 செ.மீ மழை பதிவு’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வயல்களில் மழைநீர்  தேங்கி உள்ளது. வடிகால்கள் முறையாக இல்லாத காரணத்தால் மழைநீர் தொடர்ந்து தேங்கியதால், அறுவடைக்கு சில நாட்களே இருந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் நெல்மணிகள் தண்ணீரில் நனைந்து சேதமாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பாக திட்டை, அன்னப்பன்பேட்டை, மெலட்டூர், சாலியமங்கலம், காசவளநாடுபுதூர், கண்டிதம்பட்டு, ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, செ.புதூர், ஆடுதுறை, திருமங்கலக்குடி, பந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்கதிர்கள் மழையால் கீழே விழுந்து சேதமடைந்துள்ளது. அடுத்த சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இந்த நெற்கதிர்கள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


திடீர் மழையால் தஞ்சாவூரில் 20,000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

அதே போல் திருவோணம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 100 ஏக்கர் நிலக்கடலை, உளுந்து வயலில் மழைநீர் தேங்கியதால் கடலை, உளுந்து  செடிகள் அழுகத் தொடங்கியுள்ளது.நேற்று முன்தினம் தொடர்ந்து மழை பெய்ததால், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது.இதனால் போலீஸார் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி ஈச்சன்விடுதியில் 21 செ.மீ மழை பதிவானது. மேலும், பட்டுக்கோட்டை 18 செ.மீ, அதிராம்பட்டினம் 15 செ.மீ, மதுக்கூர் 10 செ.மீ, தஞ்சாவூர் 8.5 செ.மீ,  அணைக்கரை 7.8 செ.மீ,  வெட்டிக்காடு 7.6 செமீ, அய்யம்பேட்டை 6.2 செ.மீ, மஞ்சளாறு 5.5 செ.மீ, குருங்குளம் 4.7 செ.மீ, திருவையாறு 4.6 செ.மீ, பாபநாசம் 4.1 செ.மீ, ஒரத்தநாடு 4.0 செ.மீ, திருக்காட்டுப்பள்ளி 4.0 செ.மீ, பூதலூர் 4.0 செ.மீ,  திருவிடைமருதூர் 3.8 செ.மீ, கும்பகோணம் 3.5 செ.மீ, கல்லணை 2.5 செ.மீ, வல்லம் 2.0 செ.மீ  மழை பதிவாகியுள்ளது.


திடீர் மழையால் தஞ்சாவூரில் 20,000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

இது குறித்து விவசாயி சீனிவாசன் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவ மழை பெய்த போது,வாய்க்கால்களை துார் வாராததால் நடவு செய்த வயல்களில் மழை நீர் தேங்கி அழுகும் நிலை ஏற்பட்டது.  பின்னர் தமிழக அரசு, கடமைக்காக ஒரு சில இடத்தில் பார்வையிட்டு சென்றனர். விவசாயிகள் மீண்டும் பல்வேறு உரங்களை தெளித்து நாற்றுக்களை காப்பாற்றினர். ஆனால் தமிழக அரசு இடு பொருள், உரங்களை தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்று அறிவித்தது. ஆனால் இடு பொருளும் வரவில்லை. உரங்களும் அதிக விலைக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டது.  கடந்த மழை காலத்தில், விவசாயிகள் எச்சரித்தும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததால், தற்போது பெய்த மழையால் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. எனவே, தமிழக அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்து, பாதிக்கப்பட்ட வயல்களில் மழை நீர் தேங்குவதற்கான காரணத்தை கண்டுபிடித்து, தவறு இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தலைப்பு செய்திகள்

11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
ஆதாரங்களுடன் மக்கள் கோரிக்கை அனுப்பலாம்... அமைச்சர் வினோத் ரவி அழைப்பு எதற்காக?
ஆதாரங்களுடன் மக்கள் கோரிக்கை அனுப்பலாம்... அமைச்சர் வினோத் ரவி அழைப்பு எதற்காக?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Embed widget