மேலும் அறிய

கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறையினர் ஆய்வு

வளர்ப்பு யானைகள் பராமரிப்புச் சட்ட விதிகளின்படி, கோயில் யானைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து இந்து சமய அறநிலைத்துறை மண்டல அலுவலர் அசோக்குமார் தலைமையில் வனத்துறையினர்  மற்றும் கால்நடை பாராமரிப்புத் துறை மருத்துவர் முத்துகுமாரசாமி ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பாள் யானையின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள், திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, வழிபாட்டு தல ஊழியர்களை கொண்டு அன்றாட நிகழ்வுகளை செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளது.

கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறையினர் ஆய்வு

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ அபயாம்பிகை சமேத ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பாராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அபயாம்பாள் யானை, கோவிலில் நடைபெறும் அனைத்து உற்சவங்களிலும், சுவாமி வீதி உலாக்களிலும் கலந்து கொண்டால் தான் உற்சவமே களைகட்டும். மேலும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அபயாம்பாள் ஓர் செல்லப் பிள்ளையும் கூட. பல்வேறு பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் உள்ளவர்கள் கோவிலுக்கு பிராத்தனைக்கு வந்துவிட்டு இந்த அபயாம்பாள் யானையிடம் வாழைப்பழங்கள் வழங்கிய அதன் சேட்டைகளை கண்டு மன அழுத்தம் குறைவதாக பலரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் யானை அபயாம்பாள் எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்காமல் கொட்டகையிலேயே இருந்து வருகிறது. 

கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறையினர் ஆய்வு

இந்நிலையில் வளர்ப்பு யானைகள் பராமரிப்புச் சட்ட விதிகளின்படி, கோயில் யானைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து இந்து சமய அறநிலைத்துறை மண்டல அலுவலர் அசோக்குமார் தலைமையில் வனத்துறையினர்  மற்றும் கால்நடை பாராமரிப்புதுறை மருத்துவர் முத்துகுமாரசாமி ஆகியோர் கோயிலில் யானை அபயாம்பாள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? தேவையான அளவு உணவு வழங்கப்படுகிறதா? யானையிடம் ஏதேனும் மாற்றங்கள் தென்படுகிறதா? மாதாந்திர மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா, உரிய நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறதா? என்பன உள்ளிட்டவை  குறித்து ஆய்வு செய்தனர்.

கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறையினர் ஆய்வு

ஒவ்வொரு ஆண்டும் யானைகள் புத்துணர்வு முகாம்களுக்கு அழைத்து சென்று 45 நாட்கள் நடைபயிற்சி, குளியல் , சமச்சீர் உணவு, மருத்துவ பராமரிப்பு என அனைத்தும் இந்த புத்துணர்வு மையங்களில் யானைகளுக்கு அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா காரணமாக இந்தாண்டு யானைகள் புத்துணர்வு முகாம் எவ்வாறு நடைபெறும் என்ற கேள்வி எழுத்துள்ள இந்த வேளையில்
யானையினை எவ்வாறு பராமரிக்க வேண்டும், இது கோடைகாலம் என்பதால் யானை குளிர்விக்க அவ்வப்போது குளிக்க வைத்தல், தர்பூசணி உள்ளிட்ட குளிர்ச்சியான உணவு வகைகளை வழங்குதல் போன்றவற்றை யானைப்பாகன் செந்திலிடம் ஆலோசனை வழங்கினார்.  மேலும் அதிகாரிகள் யானை அபயாம்பாளுக்கு தர்பூசணி பழங்களை கொடுத்து மகிழ்ந்தனர். வழக்கம் போல பக்தர்களுடன் மகிழ்ந்திருக்கும் அந்த யானை, ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுக்கும் நல்ல ஒத்துழைப்பு வழங்கியது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
Embed widget