மேலும் அறிய

விவசாயம் பொய்த்து போனதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி

மயிலாடுதுறை அருகே போதிய விளைச்சல் இல்லாததால் மனமுடைந்த விவசாயி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம்  மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் 65 வயதான ஜெயராமன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து ஒருஜோடி மாடுகளை வளர்த்து பராமரித்து வந்துள்ளார். இவரது மகன் அருண்குமார் இளங்கலை பட்டம் படித்து முடித்து விட்டு வேலை தேடி வருகின்றார். 


விவசாயம் பொய்த்து போனதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி

விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வந்துள்ள ஜெயராமன் கடந்த குறுவை மற்றும் சம்பா பருவத்தில் தனது 2 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். ஆனால், கனமழையின் காரணமாக அவர் பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த ஜெயராமன் ஒருகட்டத்தில் உறவினர்கள் மற்றும் வீட்டில் இருந்த நகைகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் (ஐஓபி) தனது மகன் மற்றும் மனைவி பெயரில் வைத்து 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார்.


விவசாயம் பொய்த்து போனதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி

பின்னர் அந்தப் பணத்தை வைத்து விவசாயம் மேற்கொண்ட ஜெயராமனுக்கு பருவமழையாலும், பருவம் தவறி பெய்த மழையாலும் சம்பா பொய்த்து போனது. தொடர்ந்து உளுந்து பயிரிட்டுள்ளார். உளுந்தும் பொதிய விளைச்சலை தரவில்லை. மேலும் பயிர் காப்பீட்டு செய்தும், அதிகாரிகள் உரிய முறையில் கணக்கீடு செய்யாமல் காப்பீட்டு தொகையும் கிடைக்காததால், நகை கடனை அடைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளான ஜெயராமன் மனமுடைந்து,  தனது வயலில் குருணை விஷமருந்தினை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உறவினர் அளித்த புகாரின்பேரில் விளைச்சல் சரியில்லாத காரணத்தால் மனஉளசசல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக மணல்மேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


விவசாயம் பொய்த்து போனதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி

இந்த சூழலில் இறந்த விவசாயி ஜெயராமன் வீட்டிற்கு விவசாயத் சங்கத்தை சேர்ந்த பலர் நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்தனர். மேலும் வங்கியில் பெற்ற கடனை அரசு தள்ளுபடி செய்து இறந்த விவசாயி மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விவசாய சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget