மேலும் அறிய

’திருவாரூரில் சிறுகுறு கால்வாய்களை தூர்வாரினால் மட்டுமே சம்பா சாகுபடி சாத்தியம்’

’’ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தாலும் சிறு குறு வாய்க்கால்களில் தண்ணீர் பாய்ந்தால் தான் பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்த முடியும்’’

சிறு குறு வாய்க்கால்களை முழுமையாக தூர் வாரினால் மட்டுமே சம்பா சாகுபடியை முழுமையாக செய்ய முடியும் விவசாயிகள் வேண்டுகோள்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி, என மூன்று போகம் சாகுபடி செய்து வந்தனர். குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரை நம்பி 70 சதவிகித விவசாயமும், ஆழ்துளை கிணறுகளை நம்பி 30 சதவிகித விவசாயப் பணிகளையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால், குறுவை மற்றும் தாளடி சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ளாமல், ஒரு போக சம்பா சாகுபடி பணிகளை மட்டும் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணத்தினால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒருசில தினங்களில் அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில், சம்பா சாகுபடிக்கான முதல்கட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

’திருவாரூரில் சிறுகுறு கால்வாய்களை தூர்வாரினால் மட்டுமே சம்பா சாகுபடி சாத்தியம்’
திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கான முதல் கட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். தங்களது வயல்களை டிராக்டர் மூலம் உழவு அடித்து வயல்களை பதப்படுத்துகின்றனர். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆகையால் டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு முழுமையான தண்ணீர் வந்து சேரும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளை மட்டும் தூர்வாரி உள்ள நிலையில் ஆறுகளில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்கள், மற்றும் பி பிரிவு, சி பிரிவு, டி பிரிவு, உள்ளிட்ட வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாத காரணத்தினால் கிராமப்புறங்களுக்கு தண்ணீர் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தாலும் சிறு குறு வாய்க்கால்களில் தண்ணீர் பாய்ந்தால் தான் பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்த முடியும். ஆகையால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருக்கக்கூடிய காலங்களில் உடனடியாக இயந்திரங்களை பயன்படுத்தி சிறு குறு வாய்க்கால்களை மாவட்டம் முழுவதும் உடனடியாக தூர்வாரி தர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசுக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வைத்துள்ளனர். அதேபோன்று வேளாண்மை விரிவாக்க மையங்களில் தரமான விதைகளை விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு எந்தெந்த விதைகளை தெளித்தால் இயற்கை இடர்பாடுகளை சமாளித்து சாகுபடி பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்பது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை விவசாயிகள் வைத்துள்ளனர். 

’திருவாரூரில் சிறுகுறு கால்வாய்களை தூர்வாரினால் மட்டுமே சம்பா சாகுபடி சாத்தியம்’
மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள ஒரு சில பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கிடங்குகளில் யூரியா தட்டுப்பாடு அதிகமாக நிலவி வருகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் தொடக்க வேளாண்மை சங்கத்தின் மூலமாக, விவசாயிகளுக்கு தேவையான உரம், யூரியா ஆகியவை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் யூரியா, உரம் தட்டுப்பாட்டை காரணம் காட்டி தனியார் கடைகளில் அதிக விலைக்கு யூரியா உரத்தை விற்பனை செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் வேளாண்துறை அதிகாரிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலமாக தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு யூரியா, உரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்தால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள்... குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள்... குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
234 தொகுதிகளிலும் விஜய் கட்சி டெபாசிட்டை இழக்கும்: அர்ஜுன் சம்பத் சொல்கிறார்
234 தொகுதிகளிலும் விஜய் கட்சி டெபாசிட்டை இழக்கும்: அர்ஜுன் சம்பத் சொல்கிறார்
உள் இணைப்பு சாலை பணிகளை எப்போ தொடங்குவீங்க? திருச்சி மக்கள் எதிர்பார்ப்பு
உள் இணைப்பு சாலை பணிகளை எப்போ தொடங்குவீங்க? திருச்சி மக்கள் எதிர்பார்ப்பு
சம்பா அறுவடையின் போது இப்படி ஒரு சிக்கலா? தவிக்கும் விவசாயிகள்: காரணம் என்ன?
சம்பா அறுவடையின் போது இப்படி ஒரு சிக்கலா? தவிக்கும் விவசாயிகள்: காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்: ஓபிஎஸ்ஸை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்! வேற என்ன சொன்னார்?
அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்: ஓபிஎஸ்ஸை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்! வேற என்ன சொன்னார்?
OPS: ''அண்ணாவைப் போல தளபதி ஸ்டாலின்; திமுகவில் இணைந்தது ஏன்?''- ஓபிஎஸ் பரபர விளக்கம்
OPS: ''அண்ணாவைப் போல தளபதி ஸ்டாலின்; திமுகவில் இணைந்தது ஏன்?''- ஓபிஎஸ் பரபர விளக்கம்
OPS JOIN DMK: ஸ்டாலினோடு கை கோர்த்த ஓபிஎஸ்.! திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்
ஸ்டாலினோடு கை கோர்த்த ஓபிஎஸ்.! திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்
OPS Join Dmk : மெகா ட்விஸ்ட்.! கை விட்ட பாஜக, அதிமுக... வேறு வழியில்லாமல் திமுகவில் தஞ்சம் அடையும் ஓபிஎஸ்.?
மெகா ட்விஸ்ட்.! கை விட்ட பாஜக, அதிமுக... வேறு வழியில்லாமல் திமுகவில் தஞ்சம் அடையும் ஓபிஎஸ்.?
O Panneer Selvam: ‘கூச்சமே இல்லையா?.. அம்மா எல்லாம் சும்மாவா?’ - திமுகவில் ஓபிஎஸ்.. விளாசிய அதிமுக!
O Panneer Selvam: ‘கூச்சமே இல்லையா?.. அம்மா எல்லாம் சும்மாவா?’ - திமுகவில் ஓபிஎஸ்.. விளாசிய அதிமுக!
Top 10 News Headlines: தேர்தலில் போட்டி? - ஓபிஎஸ், தெலங்கானா அரசு தாராளம், இந்தியா-இஸ்ரேல் 17 ஒப்பந்தங்கள் - 11 மணி செய்திகள்
தேர்தலில் போட்டி? - ஓபிஎஸ், தெலங்கானா அரசு தாராளம், இந்தியா-இஸ்ரேல் 17 ஒப்பந்தங்கள் - 11 மணி செய்திகள்
Embed widget