மேலும் அறிய

‛கைலாசா அதிபர்’ நித்தியானந்தா எங்கே? ஒலிம்பிக்கில் கைலாசா வீரர்கள் பங்கேற்காதது ஏன்?

கைலாசா என்ற இணையதளத்தில் நாட்டின் கொடி, பாஸ்போர்ட் ஆகியவை எல்லாம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த இணையதளம் மூலம் தினமும் வீடியோ மூலமாக ஏதாவது பேசி பரபரப்பு ஏற்படுத்திக்கொண்டே இருந்தார்.

எப்பேற்பட்ட குற்றவாளியாக இருந்தாலும், விரைவில் கண்டுபிடித்து விடும் நம் நாட்டு போலீசார், நித்தியானந்தாவை மட்டும் இன்னும் பிடிக்காமல் இருப்பது ஏன் என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கிறது. தமிழ்நாட்டை என்னதான் திராவிட கட்சிகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்து வந்தாலும், பெரும்பாலான மக்கள் மனதில் ஆன்மிகமே அதிகம் குடிக்கொண்டுள்ளது.

ஆன்மிகத்தில் லயித்துப்போன, தமிழ்நாட்டு மக்களை தனது ஆன்மிக பேச்சுகளால் ஈர்க்கவைத்தவர் நித்தியானந்தா. சிறுவயது முதலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு, எண்ணற்ற ஆன்மிக சொற்பொழிவுகளை நடத்தி பலரையும் தனது பக்தர்களாக ஆக்கியவர். 10 வருடங்களுக்கு  முன்பு நித்தியானந்தாவின் ஆன்மிக பேச்சுகள், பேட்டிகள் இடம்பெறாத தொலைக்காட்சிகளே இல்லை, பிரபலங்களும் சிலர் இவருடன் இருந்ததையும் கண்டிருக்கலாம். இப்படி டாப் கியாரில் சென்றுக்கொண்டிருந்த நித்தியானந்தா பிரபல நடிகையுடன் இருந்த வீடியோ ஒன்று வெளியாகி, சமூகவலைதளங்கள் அதிகம் உபயோகம் இல்லாத அப்போதே வைரல் ஹிட்டடித்தது அந்த வீடியோ. முதலில் அந்த வீடியோவில் இடம்பெற்ற நடிகையின் முகம் மறைக்கப்பட்ட நிலையில், பின்னர், அது பிரபல நடிகை என்று தெரியவந்து பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.


‛கைலாசா அதிபர்’ நித்தியானந்தா எங்கே? ஒலிம்பிக்கில் கைலாசா வீரர்கள் பங்கேற்காதது ஏன்?

நித்தியானந்தாவை தனது ஆன்மிக குருவாக எண்ணிய பலருக்கு, இந்த வீடியோ விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவரின் ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, இதனைத் தொடர்ந்து, நித்தியானந்தா மீது  புகார், பாலியல் வழக்கு என செய்திகள் வெளியாகி வந்தன. அதன்பிறகு நித்தியானந்தா தமிழ்நாட்டை காலிசெய்துவிட்டு, குஜராத்தில் ஆசிரமத்தில் எப்பவும் போல வசதியாக வாழ்ந்து வந்தார். நித்தியானந்தா மீது பல புகார்கள், வழக்குகள் இருந்தாலும் சில சிஷ்யர்கள், பக்தர்கள் நித்தியானந்தா மீதுள்ள பக்தியின் காரணமாக அவரை வணங்கி வந்தனர். 

இந்த நிலையில், குஜராத் ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நித்தியானந்தா, ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை காட்டி, தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதில், ஆசிரமத்தில் இருந்த சிலர் வாக்குமூலம் கொடுத்த பிறகு நித்தியானந்தா மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதவி செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாட்டை விட்டே எஸ்கேப் ஆனா, நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்று போலீசார் தேடி வந்த நிலையில், திடீரென்று ஒருநாள் சமூகவலைதளத்தில் வந்து தான் கைலாச என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையையும் கொடுத்தார். அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐநாவுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும் தகவல்கள் எல்லாம் வெளியாகின.


‛கைலாசா அதிபர்’ நித்தியானந்தா எங்கே? ஒலிம்பிக்கில் கைலாசா வீரர்கள் பங்கேற்காதது ஏன்?

மேலும், கைலாசா என்ற இணையதளத்தில் நாட்டின் கொடி, பாஸ்போர்ட் ஆகியவை எல்லாம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த இணையதளம் மூலம் தினமும் வீடியோ மூலமாக ஏதாவது பேசி பரபரப்பு ஏற்படுத்திக்கொண்டே இருந்தார். அத்துடன் விதவிதமான கெட்டப்புகளுடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில், கைலாசாவில் கொரோனா இல்லை என்றும், சிவபெருமான் தங்களை காப்பதாகவும் நித்தியானந்தா ட்வீட் செய்த பதிவு ஒன்றும் வெளியானது. இது அவரின், பதிவா என்று உறுதியாக தெரியவில்லை. இப்படி எல்லாம் செய்துக் கொண்டிருக்கும் நித்தியானந்தா இப்போது எங்கே இருக்கிறார். என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், கைலாசா என்ற டுவிட்டர் பக்கத்தில், நித்தியானந்தா இருக்கும் வீடியோக்கள், அந்த வீடியோக்களில் சில சிஷ்யகள் பேசுவது போலவும் இடம்பெற்றுள்ளன.

 

முன்பு போல நித்தியானந்தாவின் வீடியோக்கள் தற்போது வெளியாவதில்லை. அவர் கைலாசாவில் தான் இருக்கிறாரா... அல்லது வேறு நாட்டிற்கு குடிபெயர்ந்து விட்டாரா என்கிற சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஒரு நாடு துவங்கி, அதற்கு தேவையான அனைத்து விசயங்களையும் அறிவித்த நித்தியானந்தா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஏன் கைலாசா நாட்டு வீரர், வீராங்கணைகளை பங்கேற்கச் செய்யவில்லை என சிலர் கிண்டலடித்து வருகின்றனர். அடுத்த ஒலிம்பிக்கில் கட்டாயம் கைலாசா பங்கேற்கும் என அவரது சிஷ்யர் ஒருவர் தெரிவித்தாலும், அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Embed widget