மேலும் அறிய

முடிவுக்கு வந்த வடகிழக்கு பருவமழை.! இந்தாண்டு மழை குறைந்ததற்கு காரணம் இது தான்.? டெல்டா வெதர்மேன் அப்டேட்

Tamil Nadu Delta Weatherman: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்தாண்டு புயல் பாதிப்பில் இருந்து தமிழகம் தப்பித்தற்கான காரணத்தை டெல்டா வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

இறுதி கட்டத்தில் வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போதும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் இறுதி வரை நீடிக்கும், ஒரு சில வருடங்கள் ஜனவரி மத்தியிலும் மழையின் தாக்கம் இருக்கும். ஆனால் இந்தாண்டு தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்திருந்தாலும், அடுத்தடுத்து புயல், அதீத கன மழையானது பெய்யவில்லை. இதன் காரணமாக சென்னையில் எப்போதும் டிசம்பர் மாதம் ஏற்படும் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை தப்பித்து கொண்டனர். இந்தநிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடர்பாக டெல்டா வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை பெய்யக்கூடிய மழைப்பொழிவை புள்ளியல் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை என கணக்கிடப்படும். அவ்வாறு பார்க்கும் போது அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று டிசம்பர் 31 வரை தமிழ்நாட்டில் மாநிலத்தின் சாராசரி 44 செ.மீ மழை பதிவாக வேண்டும். இந்தாண்டு 43 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட குறைவு என்றாலும் இயல்பு என்றே எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

எந்த எந்த மாவட்டங்களில் மழை

மேலும் மாவட்ட வாரியாக பார்க்கும்போது திருவள்ளூர், திருவாரூர், இராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இயல்பிற்கு அதிக மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இயல்பிற்கு குறைவான மழையும் பிற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பான அளவில் மழை பதிவாகியுள்ளதாகவும் டெல்டா வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக சென்னையை பொறுத்தவரை மாவட்ட சாராசரியாக 72 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பு 80 செ.மீ இது 10% குறைவு என்றாலும் புள்ளியல் அடிப்படையில் இயல்பு என்றே எடுத்துக்கொள்ளப்படும். மேலும் நீர் இருப்பை பொறுத்தவரை சென்னை ஏரிகள், மேட்டூர் அணை, பவானிசாகர், அமராவதி, பெரியார், வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, சாத்தனூர் அணை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து நீர் நிலைகளிலும் நீர் இருப்பு 85% முதல் 100% வரை இருப்பதால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லையென தெரிவித்துள்ளார்.

புயல் பாதிப்பு ஏற்படாததற்கு காரணம் என்ன.?

இந்தாண்டு இயல்பிற்கு அதிக மழை பதிவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் நவம் 15ம் தேதி வரை நிடித்த வலுவான Negative IOD மற்றும் சாதமற்ற கடல் சார்ந்த போக்கின் காரணமாக பருவமழை இயல்பான அளவில் முடிவடைந்திருக்கிறது, இயல்பாக வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல்கள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆனால் இந்தாண்டு இலங்கை, இந்தோனேசியா நாடுகளில் டிட்வா, சென்யார் போன்ற புயல்கள் தாக்கத்தை ஏற்படுத்தியதால் தமிழநாட்டில் பாதிப்பு குறைந்ததாகவும் இதுவே மழை குறைவிற்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

2 நாட்களுக்கு மழை தொடரும்

இந்நிலையில் பருவமழை புள்ளியல் ரீதியாக முடிவடைந்திருந்தாலும் முழுமையாக விலகவில்லை. கிழக்கு திசை காற்றின் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, கடலூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம் உள்பட கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் சற்றே கனமழை பதிவாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பதிவாககூடும். இதன் காரணமாக ஜனவர் 2 மற்றும் 3 தேதிகளில் குற்றாலம், திற்பரப்பு உள்ளிட்ட அருவிகளில் நீர் பெருக்கு எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் குறைந்து காணப்படும் என டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

’காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜயின் நிலைபாடு என்ன?’ பாஜக துணைத் தலைவர் சரமாரி கேள்வி..!
’காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜயின் நிலைபாடு என்ன?’ பாஜக துணைத் தலைவர் சரமாரி கேள்வி..!
காஞ்சிபுரம்: 35 கிராமங்களுக்கு செம குட் நியூஸ்.. மாஸ் பிளான் போட்ட நெடுஞ்சாலைத் துறை! 
காஞ்சிபுரம்: 35 கிராமங்களுக்கு செம குட் நியூஸ்.. மாஸ் பிளான் போட்ட நெடுஞ்சாலைத் துறை! 
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு வாசிகளே தயாரா இருங்க... இன்றிரவு வரப்போகும் அந்த திடீர் மாற்றம்!
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு வாசிகளே தயாரா இருங்க... இன்றிரவு வரப்போகும் அந்த திடீர் மாற்றம்!
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
Embed widget