மேலும் அறிய

Tiruppur | தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் கொலை.. ரத்தம் சொட்ட சொட்ட தப்பியோடிய கொலையாளி - திருப்பூர் பகீர்!

ரத்தம் சொட்ட சொட்ட தப்பியோடியவரை பார்த்து ஊர் மக்கள் பதறியுள்ளனர். அதனை அடுத்து, அங்கிருந்த மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வாலிபரை தலை துண்டித்து கொலை செய்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்னொருவரை ரத்தம் தெறிக்க தாக்கி இருப்பது பொது மக்களை பீதியடைய செய்திருக்கிறது.

கும்பகோணத்தைச் சேர்ந்த 23 வயதான சதீஷ் என்பவரும், திருச்சியைச் சேர்ந்த 22 வயதான ரஞ்சித்குமார் என்பவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு அறைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல், செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளது. 

சதீஷூம், ரஞ்சித்தும் செல்போனை தர மறுத்ததால், கையில் கொண்டு வந்த அரிவாள், கத்தியால் அவர்களை தாக்கியுள்ளனர். அருகிலுள்ள செரங்காடு கடுக்கா தோட்டத்திற்கு அவர்களை கடத்திச் சென்று துன்புறுத்தி உள்ளனர். அரிவாளால் பயங்கரமாக தாக்கி காயப்படுத்தி உள்ளனர். அப்போது சுதாரித்து கொண்டு தப்பி ஓடியுள்ளார் ரஞ்சித். ரத்தம் சொட்ட சொட்ட தப்பியோடிய அவரை பார்த்து ஊர் மக்கள் பதறியுள்ளனர். அதனை அடுத்து, தப்பியோடும் வழியிலேயே மயங்கி விழுந்துள்ளர். இதனால், அங்கிருந்த மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Tiruppur | தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் கொலை.. ரத்தம் சொட்ட சொட்ட தப்பியோடிய கொலையாளி - திருப்பூர் பகீர்!

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்கத்தில் இருந்த ரஞ்சித் கண் விழித்தவுடன் விசாரணை நடத்திய காவல் துறையினர், சம்பவ விவரங்களை கேட்டறிந்தனர்.


மேலும் படிக்க: திண்டுக்கல்: 280 பவுன்.. 25 லட்சம் பணம்..இன்னொவா கார்.. டாக்டர் தம்பதியை கட்டிப்போட்டு மொத்தமாக திருட்டு!


ரஞ்சித் கொடுத்த தகவலின்படி, காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். செரங்காடு பகுதியில் சோதனை மேற்கொண்ட அவர்கள், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சதீஷின் உடலை கைப்பற்றி உள்ளனர். சுற்றுப்பகுதியில் தேடியும் தலையை மீட்க முடியாத காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தகவல் திரட்ட உள்ளனர். சதீஷை கொன்ற கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்ற விவரங்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில்,  இச்சம்பவத்தை விசாரித்த தனிப்படை காவல்துறையினர் சதீஷின் தலையை மீட்டுள்ளனர். கொலைக்கு காரணம் வழிப்பறியா அல்லது முன்விரோதமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் பொது மக்களிடையே அச்சமடைய வைத்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
இனிமேல் அரசு கட்டடங்கள் இப்படித்தான் இருக்கும்! PWD அதிரடி முடிவு!வெளியான முக்கிய தகவல்!
இனிமேல் அரசு கட்டடங்கள் இப்படித்தான் இருக்கும்! PWD அதிரடி முடிவு!வெளியான முக்கிய தகவல்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget