மேலும் அறிய

Thangar Bachan: பிழைக்க வருபவர்கள் தமிழை கற்றுக்கொள்வதே இதற்காகத்தான்! - தங்கர்பச்சான் ஆவேசம் 

தமிழர்களைச் சுரண்ட முதலில் கையில் எடுக்கும் கருவி, தமிழைக் கற்றுக்கொள்வதுதான் என இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் தமிழ்நாட்டினர் சிலரை, வட மாநிலத்தவர்கள் கும்பலாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 

தங்கர்பச்சான் ட்வீட்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இங்கே பிழைக்க வருபவர்கள் தமிழர்களைச்சுரண்ட முதலில் கையில் எடுக்கும் கருவி தமிழைக் கற்றுக்கொள்வது தான்! உலகத்தில் எந்த நாட்டிலும் அந்நாட்டு மொழியை கற்றுக்கொண்டதற்காக அந்த இனத்தவர்களாக ஆகி விட முடியாது! ஆனால் தமிழ் நாட்டில் தமிழை கற்றுக் கொண்டவர்கள் எல்லாம் தமிழர்கள் ஆகிவிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?

திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பின்னலாடை நிறுவனங்களில்  ஒரிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட  வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பணி செய்து வருகின்றனர்.  இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களில்  திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை கடந்து அதன் அண்டை மாவட்டங்களான ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பணி புரிந்து வருகிறார்கள். 

இந்த நிலையில் அனுப்பர்பாளையம் - வேலம்பாளையம்   செல்லும் சாலையில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்க்கும்  வட மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை பெல்ட், கட்டை,  உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை விசாரணை:

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணையில், பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பெட்டிக்கடையில், சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் வடமாநில தொழிலாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.  வட மாநில தொழிலாளர்கள் பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தமிழ்நாட்டு தொழிலாளர்களை தாக்கியுள்ளனர்.  தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டதில், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் இயக்குநர் தங்கர்பச்சானின் பதிவானது, இந்த சம்பவத்தை குறித்தே பதிவிட்டுள்ளார் என்றும் பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read:  சீர்காழி அருகே வீட்டின் கொல்லைப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை  - எந்த ரூட் தெரியுமா?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை - எந்த ரூட் தெரியுமா?
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
EPS Condemn: 'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Nainar Nagendran | ”மோதி பாக்கலாம் வா”அ.மலை Vs நயினார்! தமிழக பாஜக தலைவர் யார்? | BJPSaif Ali Khan Attacker | ’’கல்யாணம் நின்னு போச்சு..’’போலீசால் கதறும் நபர் சைஃப் அலிகான் விவகாரம் | Akash KanojiaNitish Kumar Son Nishant Political Entry | மகனின் திடீர் அரசியல் ஆசைநிதிஷ் போடும் கணக்கு நெருக்கடியில் பாஜகDurai Murugan  | கண்டுகொள்ளாத திமுக தலைமை?வருத்தத்தில் துரைமுருகன்! மகன் கதிர் ஆனந்தின் எதிர்காலம்? | Kathir Anand

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை  - எந்த ரூட் தெரியுமா?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை - எந்த ரூட் தெரியுமா?
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
EPS Condemn: 'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
Simbu is MASS: சிம்பு சார், மனசால நீங்க மாஸ்... புகழ்ந்து தள்ளிய பிரதீப் ரங்கநாதன்...
சிம்பு சார், மனசால நீங்க மாஸ்... புகழ்ந்து தள்ளிய பிரதீப் ரங்கநாதன்...
Trisha in TVK.?: 10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
Saif Ali Khan Case: வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்....
வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்...
Embed widget