மேலும் அறிய

Thangar Bachan: பிழைக்க வருபவர்கள் தமிழை கற்றுக்கொள்வதே இதற்காகத்தான்! - தங்கர்பச்சான் ஆவேசம் 

தமிழர்களைச் சுரண்ட முதலில் கையில் எடுக்கும் கருவி, தமிழைக் கற்றுக்கொள்வதுதான் என இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் தமிழ்நாட்டினர் சிலரை, வட மாநிலத்தவர்கள் கும்பலாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 

தங்கர்பச்சான் ட்வீட்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இங்கே பிழைக்க வருபவர்கள் தமிழர்களைச்சுரண்ட முதலில் கையில் எடுக்கும் கருவி தமிழைக் கற்றுக்கொள்வது தான்! உலகத்தில் எந்த நாட்டிலும் அந்நாட்டு மொழியை கற்றுக்கொண்டதற்காக அந்த இனத்தவர்களாக ஆகி விட முடியாது! ஆனால் தமிழ் நாட்டில் தமிழை கற்றுக் கொண்டவர்கள் எல்லாம் தமிழர்கள் ஆகிவிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?

திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பின்னலாடை நிறுவனங்களில்  ஒரிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட  வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பணி செய்து வருகின்றனர்.  இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களில்  திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை கடந்து அதன் அண்டை மாவட்டங்களான ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பணி புரிந்து வருகிறார்கள். 

இந்த நிலையில் அனுப்பர்பாளையம் - வேலம்பாளையம்   செல்லும் சாலையில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்க்கும்  வட மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை பெல்ட், கட்டை,  உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை விசாரணை:

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணையில், பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பெட்டிக்கடையில், சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் வடமாநில தொழிலாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.  வட மாநில தொழிலாளர்கள் பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தமிழ்நாட்டு தொழிலாளர்களை தாக்கியுள்ளனர்.  தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டதில், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் இயக்குநர் தங்கர்பச்சானின் பதிவானது, இந்த சம்பவத்தை குறித்தே பதிவிட்டுள்ளார் என்றும் பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read:  சீர்காழி அருகே வீட்டின் கொல்லைப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
Egg Yolk: ஆத்தி..! முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Egg Yolk: ஆத்தி..! முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Embed widget